Friday 2 September 2016

திருவருட்பாமாலை 3

திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் வடலூரில் தர்மச்சாலை சத்திய ஞான சபை நிர்வாகத்தை நடத்திவருவதோடு வள்ளல் பெருமானின் பாடல்கள் 2 தொகுதி உரைநடை 1 தொகுதி என் 3-ம் சேர்த்து
மலிவு விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

உலகத்து ஞானம் வழங்கும் புண்ணிய பூமி இந்தியாவில் ஞான ஆரண்யமாம்
தமிழகத்தில் வந்துதித்த திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
கருணையால் வாழந்துவரும் அடியேனை ஒரு பொருட்டாக கருதி , தொடர்ந்து  தாராளமாக காணிக்கை தந்து சபை வீடு கட்டி தந்து எம்மை ஆதரிக்கும் நெய்வேலி தாய் ஜோதி ஸ்ரீ நிர்மலா தேவி அவர்கள் அன்பால் இந்நூல் வெளியாகிறது . ஞானம் இங்கே பரசியமாகிறது!

திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் உள்ளத்தில் இருந்து உவகையுடன் உரைப்பார்  எனக்கருதி அடியேன் மெய்ஞ்ஞான உரை எழுத சம்மதித்தேன். அடியேனை குருவாக்கி  மெய்ப்பொருள் விளக்கம் கொடுத்து ஞான சரியையில் கூறிய படி திருவடி தீட்சை கொடுத்து நாடி வரும் எல்லோரையும் மரணமிலா பெருவாழ்வு பெற அழைத்து செல்கிறார்
வள்ளலார்!

1980 - லிருந்து 28 வருடமாக அடியேனை வழி நடத்தி வாழ்விக்கும் வள்ளல் இராமலிங்கரை பணிவதே தவிர எமக்கு வேறு வேலையில்லை! அவர் இட்ட பணியை செய்வதே எம் கடன்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்

மரணமிலா பெருவாழ்வு பெற முதலில் உபதேசம்! அடுத்து தவம் செய்யும் முறை உணர்த்தி திருவடி தீட்சை! மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து எல்லோரும் இன்புற்று வாழ வழி காட்டுகிறார் வள்ளலார். அடியேன் ஒரு கருவியாக செயல்படுகிறேன்.

" ஆட்டுவிக்கிறார் ஆடுகிறேன்"
அருட்பா படித்தால் அறிவில் தெளிவு !
அருட்பா படித்தால் அறியலாம் ஆண்டவனை!
அருட்பா படித்தால் அமைதி கிட்டும்!
அருட்பா படித்தால் ஆனந்தம் பெறலாம்!
அருட்பா படித்தால் ஆறறிவு துலங்கும்!
அருட்பா படித்து உணர்ந்தால் ஞானி!
படியுங்கள் - உணருங்கள் - தவம் செய்யுங்கள்!
கிட்டும் மரணமிலா பெருவாழ்வு!

என்றும் உண்மையுள்ள
சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment