Wednesday 31 May 2017

2.43 பிரசாத விண்ணப்பம்


பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப்
பாதகனேன் படிற்றுரு வகனேன்
வசை இலார்க் கருளும் மாணிக்க மணியே
வள்ளலே நினைத்தொழல் மறந்து
நசை இலா மலம்உண் டோடுறும் கொடிய
நாய் என உணவு கொண் டுற்றேன்
தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால்
தண்டிக்கப்பட்டனன் அன்றே

நெஞ்சில் கொஞ்சங் கூட இரக்கம் இல்லாது,
கொடிய செயல் புரியும் உடல் படைத்த
மிருகமாக வாழ்கிறோம்! குற்றமற்ற நல்ல
பண்பாளார்க்கு அருள் புரிகின்ற மாணிக்கம்
போல் ஒளிரும் கண்மணியே அருள் வள்ளலே
இறைவா உன்னை தொழ மறந்து விட்டோம் !
விரும்பதகாத உணவாக நாய் வேறு வழியின்றி
மலத்தைகூட உண்ணும் அதுபோல மனிதர்களும்
கண்டதை சாப்பிடுகிறார்கள்! அதனால் நரம்பு
முறுக்கேறி தீச்செயல் புரிகின்றனர். திமிர் ஏறபெற்றவர்கள்
ஆகின்றனர்! முடிவு உச்சி முதல் உள்ளங்கால்
வரை உள்ள நாடி நரம்பு தசையெல்லாம் நடுங்க
நடுநடுங்க விந்து வெளியேறும் சக்தி வெளியேறும்.
இதுவே பெருந்தண்டனை.

காமத்தால் விந்து வெளியேறும். தவத்தால் விந்து
ஊர்த்துவரேதஸாக மேலேறும், ஞானம் கிட்டும்.
காமம் சிற்றின்பம் - துன்பம் வேதனை. ஞானம்
பேரின்பம் - பரவச நிலை கிட்டும். தெய்வத்தை
நினைந்து மனம் தூய்மையாகுமானால் இந்த
தண்டனை கிடையாது.

கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்து - பாடல் 3
வள்ளல் பெருமான் தெளிவாக கூறுகிறார். இறைவா
உன் கழல் அணிந்த திருவடியை கண்ணால் காணும் பாக்கியமே !
அதில் கருத்தை வைத்து தவமே செய்தாலே பெரும் பேறாகும் என்கிறார்.

வயிறு நிறைய சோறு உண்டால் ஏற்படும் அசதி அதனால் ஏற்படும் தூக்கம் -
சோம்பேறித்தனம் இவை ஞானத்துக்கு ஏற்புடையதல்ல! எக்காலமும்
எக்காரணத்தை கொண்டும் அரைவயிறு உணவே உட்கொள்ள வேண்டும்.

விழிக்குள் நின்றிலங்கும் விளங்கொளி மணியே - பாடல் 5
கண்விழியில் கண்மணியில் நின்றிலங்கும் ஒளிவிட்டு பிரகாசிக்கும் மணியே
இறைவா என்கிறார் வள்ளலார்!

முறைப்படி நினது முன்பு நின்றேத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் - பாடல் 10காலை எழுந்து இறைவனை வணங்கி ஜபதபங்கள் நித்யா அனுஸ்டானங்கள்செய்த
பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும். இதுதான் முறை.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

2.42 நெஞ்சறிவுறூஉ


என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே

ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களால் சூழப்பட்ட
மனமானது அவரவர் செய்து வைத்த வினைகளின் படி உடல்
எடுத்து இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கின்றது! நம்
வாழ்வே வினையால் ஏற்படுவதே! "வினைபோகமே ஒரு தேகம்
கண்டாய் தினைப் போதும் நில்லென்றால் நில்லாய்"என்ற பாடல்
உணர்த்துவதும் இதைத்தானே! நம் ஒற்றியூராகிய கண்மணியில்
வாழ்கின்ற சிவம் - ஒளியை நாம் உன்னி உன்னி தவம் செய்தால்!
அதனால் ஏற்படும் ஒளி பெருகி வினையாகிய மறைப்பு அற்றுவிடும்!
நான் போகிறேன் நீங்களும் வாருங்கள் என வள்ளலார் அழைக்கிறார்,


ஒன்பதாகிய உருவுடைப் பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர் - பாடல் 2
நமது வலது கண் இடது கண் உள்ளே உள்ள அக்னி ஆக முக்கண். ஒருகண்
வெள்ளை விழி கருவிழி கண்மணி என மூன்று உருகொண்டது. 3 கண்ணும்
சேர்ந்து 9 உரு கொண்டது. வலது கண்ணும் இடது கண்ணும் சேர்ந்தாலே
மூன்றாவது கண் தோன்றும்.
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Sunday 21 May 2017

2.41 திருவிண்ணப்பம்

சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
தந்தை ஆதலின் சார்ந்துநல் நெறியில்
பழக்கி வைப்பது தேவரீர்க் குறிய
பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
பொய்யென் என்னில்யான் போம்வழி எதுவோ



 புழைக்கை மாவுரியீர் ஒற்றிஉடையீர் - உள் பக்கம் துளையுள்ள கரியயானை தோலை போர்த்திய சிவன்! கண்மணி கருவிழி
யானை தோல் எனப்பட்டது. உள்துளை - கண்மணியிலுள்ள உள்துளை அதனுள் இருப்பது தான் சிவம்.ஒளி. என்னோடு வழக்கு என்பது
வினையால் செயல்படும் நாம் இறைவனோடு சேர முடியாமல் தவிக்கும் நிலை! ஆயினும் எவ்வுயிர்க்கும் தந்தை இறைவன்,அதனால் எனக்கும் தந்தை நீயல்லவா இறைவா என்னை கை விட்டிடாதே!

Monday 8 May 2017

2.40 அவலத் தழுங்கள்

ஊதி யம்பெறா ஓதியனேன் மதிபோய்
உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
ஆதி எம் பெருமான் உனை மறந்தேன்
அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே


மரமண்டை என்று திட்டுகிறோம்மல்லவா? மரம் போல் செயலற்று
அறிவில்லாமல் இருப்பவன்!  உண்மையறியாமல் எதற்க்கெடுத்தாலும் 
வாதம் செய்பவன்! முட்டாள் தான் வாதம் செய்வான்! அறிவுள்ளவன்
அமைதியாயிருப்பான்! நிறைகுடம் தழும்பாதல்லவா? அன்பே இல்லாதவன்
இவர்களை கண்டால் என் நெஞ்சம் நடுங்குமே என்கிறார் வள்ளலார்!
இறைவனை மறந்ததால் இறைவனிடம் பாராட்டாததினால் இறையுணர்வு
பெறாததினால் தான் துன்பமெலாம்! கண்மணி ஒளியே தியாக மணி.
ஒற்றியூர் அரசரே தியாகேசர் சிவம்.

அழுத பிள்ளைக்கே பால் உணவளிப்பவள் அன்னை
என்பார்கள் அலவலியில்லா கொழுது நேர் சிறுகுழவிக்கும்
கொடுப்பாள் - பாடல் 4


அழுத பிள்ளைக்கு பால் உணவு கொடுப்பாள் தாய்! அழமுடியா
சிறுபிள்ளைக்கும் பால் நினைந்து ஊட்டுவாள் தாய்! இது உலகில் உள்ள
தாய் இயல்பு! இந்த உலகத்தையே படைத்த தாய் அதைவிட பெரிய தயாபரன்
அல்லவா? பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நம் ஊனினை
உருக்கி உள்ளொளி பெருக்கி உள்ளூறும் அமுதம் தருபவன். அவனே எவ்வுயிர்க்கும் தாய்!


காயம் என்பது ஆகாயம் என்றறியேன் - பாடல் 8
காயமாகிய நமது உடம்பு ஆகாயம் என்பதை அறியேன்!
"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என்பதை பார்க்க! அண்டத்தில்
உள்ளது அனைத்தும் ஆகாயத்தில் பரவெளியில் உள்ளது! அதுபோலவே
பிண்டமாகிய உடலும் பரவெளியே பரமாகிய ஒளியின் ஒரு சிறு துளி
துலங்குவதால் இதுவும் ஆகாயமே! காயமும்-உடலும் ஆகாயமே .
இதிலும் சூரியன் சந்திரன் கடல் எல்லாம் உள்ளதல்லவா? ஞான விளக்கம்
என்பது இதுதான்.

கண்ணன் விசுவரூபம் எடுத்தார் பிரபஞ்சமே தெரிந்தது என
பாரதம் கூறுகிறது! கண்ணன் வாயை திறந்தான் உலகமே
தெரிந்தது என பாகவதம் கூறுகிறது. கண்ணன்  - கண் அவன்
- கண் ஒளியே கடவுள் நிலை! பிரபஞ்சமே அதனுள் தானே!
எல்லாமாயும் எல்லாவற்றினுள்ளும் இருப்பவன் தான் இறைவன்!

www.vallalyaar.com

Wednesday 3 May 2017

2.39, நெடுமொழி வஞ்சி


வார்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
பார்க்கி றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
ஊருக்குள் மேவிய சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே

காமம் எனும் புலையன் நம்மை பெண் மோகத்தில் அழுத்தி
கெடுத்து விடுவான்! ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையால்
வீழ்த்தப்பட்டாரே! நாம் எம்மாத்திரம்! மீண்டும் மீண்டும் திரும்பத்திரும்ப
காமம் எனும் புலையன் எப்படியாவது நம்மை வீழ்த்தப்பார்ப்பான்! நாம்
நம் கண்மணி ஒளி அழகில் தான் மயங்க வேண்டும்~! உலக பொருட்கள்
எதற்கும் மயங்க கூடாது. கண்மணியை சிக்கென பிடித்தால் ஒளிபெருகும்.
அந்த ஒளியாகிய வாளால் காமத்தை வெட்டி வீழ்த்தலாம்! பெண்ணால் தானே
காமம் வரும்! பெண்ணை தாயாகப்பார்த்தால் காமம் வராதல்லவா? எல்லா
பெண்களையும் தாயாக பாருங்கள்! வாலை தாயை பணியுங்கள்!

காமத்தை வெல்ல காமத்தை - மாயையை ஆட்சி செய்பவளை  தாயாக
காண்பதே தப்பிக்கும் ஒரே வழி! காமத்தை ஆட்சி செய்பவளே காமாட்சி!
காமாட்சி தாயை வழிபடு! முதலில் காமனை வெல்லலாம்! காமனை
வென்றால் தான் காலனை வெல்ல முடியும்! அதற்க்கு ஒரே வழி தாயை
சரணடைதலே!

காமம் கோபம் லோபம் மோகம் மதம் ஆணவம் இன்னும் பல துர்க்குணங்களால் மனிதன் கெட்டுப்போகிறான். அனைத்திலிருந்தும் விடுபட ஒரேவழி இறை அருள் பெறுவதுதான்! இறை அருளால் தான் நாம் தப்ப முடியும்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Tuesday 2 May 2017

2.38. சிவ புண்ணியத்தோற்றம்



கடவுள் நீறிடாக் கடையாரைக் கண்காள்
கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
அடவுள் மாசுதீர் தருள்திரு நீற்றை
அணியும் தொண்டரை அன்புடன் காண்க
தடவும் இன்னிசை வீணேகேட் ட்ரக்கன்
தனக்கு வாளோடு நாள்கொடுத் தவனை
நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
நாதன் தன்னை நாம் நண்ணுதற் பொருட்டே

"துஷ்டனை கண்டால் தூரவிலகு" என்பது பழமொழி.
வள்ளலார் கடவுளை கண்ணில் எண்ணி கண்ணீர்
விடாதாவரை கடையர் என்கிறார். நமக்கு உயிர் தந்த
பரமாத்மாவை எண்ணி எண்ணி தவம் செய்யாதவனே
மனிதர்களில் இழிந்தவன்! அவனை காண்பது தான்
பாவம்! தவம் செய்து கண்ணீர்மல்கி இறைவனை
நாடிடும் நல்லோரை மட்டுமே கண்கள் காண வேண்டும்!

வீணை மீட்டி நாதத்தால் வேத நாயகனை சேவித்த அசுரனுக்கு
வரம் கொடுத்த இறைவன், நமக்கு அருளால் போவாரா? அந்த
இறைவன் ஒற்றியூரில் -நம்கண்ணில் நாம் விரைவாக அடையும்
பொருட்டு ஒளியாக துலங்குகிறார்.

கண்களில் எப்போது நீர் வர சதா காலமும் உள் ஒளியை நினைந்து
நெகிழ்ப்பனோடு உறவாடுக! "நீரில்லா நெற்றி பாழ்' என்பது
நீர் வராத நெற்றி - கண் பாழ் என்பதே, நீர் உள்ள நல்ல தீ உடைய
நெற்றியே இறைவன் இருப்பிடம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com