Sunday 4 September 2016

திருத்தணிகை பிரார்த்தனை மாலை - 3

கருப்பாழ்செயும் உன் கழலடிக்கே -  பாடல் 19
இறைவனுடைய ஒளி பொருந்திய திருவடிகளே நாம் மீண்டும்
கருப்பையில் புகாமல் காத்து அருள் செய்யும்.

யென் கண்மணியே
என் சிரம் செருங்கொலோ நின் துணையடியே  - பாடல் 20

என்கண்மணியே என் சிரத்தில் - தலையில் பாதிக்கப்பெற்ற
இறைவனுடைய துணையடி இரு திருடியாகும்.

அருணகிரிபாடும் நின்னருள் தோய்ப்புகழை  - பாடல் 21
அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் முருகன் அருளால் பாடியதாகும் ,
ஞானபாக்கள் .

மனோலயம் வாய்ந்திலேனேல் சனன மரணமெனும்
கடற் கென் செய்வேன்  - பாடல் 22

மனம் லயம் ஆகாவிட்டால் பிறப்பு இறப்பு எனும் கடலில்
ஆழ வேண்டியது தான்,

மனம் லயமாகும் இடம் ஆலயம், அது தணிகை மலை. நம்
அனைத்து  துர்குணங்களும் தணிந்தால் - தணியும் இடமே ஆலயம்
- தணிகாசலம். குணம் - மனதின் வெளிப்பாடு தானே. குறை தணியும் இடம்
மனம் லயமாகும் இடம் அ  லயமாகும். இடம் கண் . அ - சூரிய கலை வலது கண். அ -லயமானால் மனம் லயமானால் ஒளி - இறைவன்
- ஆத்மாவை காணலாம். கண்டால் பிறப்பு இறப்பு இல்லை. மனம் அ - வில் வலது கண்ணில்  லயமாகுமானால் மனம் இருப்பது கண்தானே!

மண் நீர் அனல்  வளிவானாகி  நின்றருள் வத்து - பாடல் 25
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களும் சேர்ந்த
ஒரு பொருள்தான் நம் மெய்ப்பொருள் கண் - ஒளி.

அணி ஆதவன் முதலா மட்டமூர்த்தம் அடைந்தவனே - பாடல் 26
தணிகாசலமான - நம் குற்றங்கள் தணியும் இடமான அணி கண்ணே!
சூரியன் சந்திரன் துலங்கும்  8 ஆனவன், எட்டில் மூர்த்தியாக இருப்பவன்.
8 வலது கண் 2 இடது கண்.

கண்ணவனே தணிகாசலனே - பாடல் 28
நம் குற்றங்கள் தணியும் இடமான கண்ணே - தணிகாசமூர்த்தி -
இருக்குமிடம்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

- தொடரும்

No comments:

Post a Comment