Friday 31 March 2017

2.26 நெஞ்சோடு நெகிழதல்


சீர்தரு வார்புகழ்ப் பேர்தரு
வார் அருள் தேன்தருவார்
ஊர்தரு வார்மதி யுந்தரு
வார்கதி யுந்தருவார்
ஏர்தரு வார்தரு வார்ஒற்றி
யூர்எம் இறைவாஅன்றி
யார்தரு வார்நெஞ்ச மேஇங்கும்
அங்கும் இயம்புகவே

ஒற்றியூர் ஆகிய நம் கண்மணியை எண்ணி தவம்
செய்தால் சீர்-கண்மணியை ஒளியை தருவார்! காணலாம்.
கண்ணிலே கண்ணாலே! பேர்புகழ் எல்லாம் கிட்டும்
இவ்வுலகம் போற்றும்! நமக்கு உள் அமுதம் கிட்டும்!
ஊரும் பேரும் பெறலாம். நல்வாழ்வு பெறலாம், நல்ல
அறிவு ஞானம் பெறலாம். நற்கதி - பரகதி மரணமிலா
பெருவாழ்வு தருவார்! இதையெல்லாம் தரக்கூடியது
நம்மில் இருக்கும் இறைவனே! அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவனே!

துரிய நிலை அனுபவத்தை - பாடல் 9

நம் கண்மணி ஒளியில் மனதை நிலை நிறுத்தி தவம் செய்யும்
போது ஏற்படும் அனுபவம் ஐந்து! சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி,
துரியம், துரியாதீதம் எனப்படும், நம் கண்மணி சுழற்சி வேகம் தான்
இந்த அனுபவம்! துரிய நிலையில் கிடைக்கும் ஒளிக்காட்சியை
எங்குமான சோதி நம்முள் திகழ்வதை காணலாம்!

மூவாத முதலாய் சுத்த நன்னிலைக்கு
நிலையாய் பசுபதி - பாடல் 10

நம் கண்மணியே நாம் தாயில் கருவில் இருக்கும்போது
உருவான முதல் உறுப்பு! பிறந்தது முதல் 100 வயது ஆனாலும்
முதிர்ச்சியடையாதது!வளராதது! என்றும் உள்ளது. உலகில் உள்ள
700 கோடி மக்களுக்கும் ஒருபோல இருப்பது கண்மணியே! நமக்கு
நல்ல நிலையை பரகதியை தருவது கண்மணி ஒளி! அதுவே
- பசுபதி - பசு என்றால் ஜீவன். ஜீவனின் பதி பரம்பொருள். பசுபதி
இருப்பது நம் ஜீவனான கண்மணியிலேயே!

சண்முகத் தெம்பெருமானை ஐங்கரனை
நடராஜத் தம்பிரானை உண்முகத்தில் கருதி
அனுபவமாய் இருக்கிலை - பாடல் 11

சண்முக மான ஆறுமுகத்தை இரு கண்களை, ஐந்து கரங்கொண்ட
விநாயகன் - கண்மணியை, அதில் நடமிடும் ஓளியான நடராஜனை
காண்பதே உண்மை அனுபவம்! புறத்தே தேடாதே! உண்முகமாய்
அகத்தே நாடுவாய்! காண்பாய்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்


Thursday 30 March 2017

2.25 புண்ணிய விளக்கம்

பாடற் கினிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன் றிடுநீறே


இறைவன் நமக்கு வாழங்கிய சீர் - கண்மணி ஒளி! அதை
தேடி காண்பதே இனிமையான அனுபவம்! பஞ்சபூதமும் சேர்ந்த
கண்மணியில் பொங்கி வரும் நீரால் - நெகிழ்ந்து உருகுவார்க்கு
நல்ல வாக்கு! - பாடும் திறன்! பஞ்சமில்லாது எப்போதும் கிட்டும்
நல்ல உணவு! நல்ல தவம் செய்யும் அடியவர் கூட்டம் தரும்
சத்சங்கம் நடக்கும். நல்ல குணவானாக அவன் திகழ்வான்! பயப்படாதே
இதெல்லாம் நடக்கும் என்மேல் ஆணை என வள்ளல் பெருமான்
கூறுகிறார்!

அஞ்சில் புகுந்த நெஞ்சே - பாடல் 5
 
பஞ்ச பூதமும் ஒன்றான கண்மணியில் புகுந்த உள்ளே உள்ள
நெஞ்சமே - மனமே!

திண்ணமளிக்கும் திறம் அளிக்கும் - பாடல் 8

கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்ய செய்ய உடல் திடம்
கிட்டும்! உள்ளத்தில் உறுதி கிட்டும்! எதையும் ஆக்கும் திறன் கிடைக்கும்!
எல்லா திறமையும் பெருகும்!

Wednesday 29 March 2017

2.24 திருவருள் வழக்க விளக்கம்


தொடுடை யார்புலித் தோலுடை
யார்கடல் தூங்கும் ஒரு
மாடுடை யார்மழு மான்உடை
யார்பிர  மன்தலையாம்
ஓடுடை யார்ஒற்றி யூர்உடை
யார்புகழ் ஓங்கிய வெண்
காடுடை யார்நெற்றிக் கண்உடை
யார்எம் கடவுளரே


ஒற்றியூர் உடைய எம் கடவுளாகிய எம் கண்மணி ஒளியே
சிவம்! இரு கண்களிலும் உள்ள சிறிய துவாரத்தை மறைத்திருக்கும்
ஜவ்வே - தோடு எனப்படும். சிவம் ஆனந்த தாண்டவம் ஆடினால்
தோடு கழன்று விடும்! புராணம் கூறுவது இதைத்தானே! நாம் சிவத்தை
நம் உள் ஒளியை  நல்ல ஆட விட்டால், அதாவது நாம் விடாது
தவம் செய்தால் ஒளி பெருகி மறைப்பு விழுந்து விடும்! இது அனுபவ
ஞானம். வள்ளல் பெருமான் உரைத்த உபதேசம். தவம்  செய்யும் போது
தோன்றும் ஒளி புலித்தோல் போன்று காணும். கடல் என்றது வெள்ளை விழி
அதுவே மாடு. சிவனின் வாகனம். நந்தி - நம் தீ! ஒளி காட்சி அனுபவம்
கூறும் நிலையே எல்லாம்! சிவனை வர்ணிப்பது -நம் கண்மணி ஒளி
அனுபவமே!

பல்லாயிரம் கோடி அண்டங்கள் எல்லாம்
காற்பதம் ஒன்றில் ஒடுங்கி நிற்பார் - பாடல் 10

மால் அயன் உருத்திரர் மற்றைய பூதங்கள் மற்றும் பல்லாயிரம்
கோடி அண்டங்கள் இப்பிரபஞ்சம் எல்லாம் தன் இருகாலில்
- திருவடியில் ஒடுக்கி இருப்பவரே இறைவன்! சகலமும்
திருவடியில் அடக்கம்! அருபெரும்ஜோதி ஆண்டவரே நம்
திருவடி யாகிய கண்மணியில் உள்ளார்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Tuesday 28 March 2017

2.23 நமச்சிவாய சங்கீர்த்தன லகரி


சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கோடு தோன்றிய துணையைக்
கல்அ  வாவிய ஏழையேன் நெஞ்சம்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைக்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறை பொருளை
நமச்சிவாயத்தை நான்மாற வேனே


திருவொற்றித்தேன் - கண்மணி ஒளி, தில்லை சிற்றம்பலத்தாடும்
நல்ல வாழ்வு - சிற்றம்பலம் - சின்ன அம்பலம் ஒளியாகிய சிவம்
ஆடும் சிறிய அம்பலம் நம் கண்மணி ஒளி. எங்குமான ஒளி
சிற்றம்பலத்திலும் நம் கண்மணியிலும் உள்ளது! நான்கு வேதங்களும்
சொல்வது உண்மைப்பொருள் கண்மணி ஒளி! நமச்சிவாயம் -
பஞ்சபூதத்தை குறிப்பதே நமச்சிவய என பஞ்சாட்சரம். பஞ்சபூதம்
ஒருசேர இருக்கும் இடம் கண்மணி அதை நாம் மறக்கவே கூடாது!
எப்போது மனதில் எண்ணி உணர்ந்து நெகிழவேண்டும். நெஞ்ச கனகல்லை
உருக்குவதும் நமச்சிவாயமே - கண்மணி ஒளியே! தொண்டர்களுக்கு
துணையாவது கண்மணி சிவமே!

அட்ட  மூர்த்தமாகிய பொருளே - பாடல் 2

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் சூரியன் சந்திரன் அக்னி எனும்
எட்டு நிலையும் கூடிய பொருள்! இரு கண்களும் ஒளியால் ஒன்றினால்
தோன்றும் பொருள்! அட்டம் என்றால் எட்டு! தமிழில் 'அ' அவாகிய  கண்ணாகிய
பொருளே எனப்படும்.

Monday 27 March 2017

2.22 ஸ்ரீசிவ சண்முகநாம சங்கீர்த்தனலகிரி



பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
பொழுது போகின்ற தொழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேதிக்
தொழுது சண்முக சிவ சிவ என நம்
தோன்ற லார்தமைக் துதித்தவர் திருமுன்
பழுது சொல்லுதல் ஐயுறல் என்மேல்
ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே!

குற்றமே புரியும் வஞ்சகரிடம் போய் உதவி கேட்பது பயனிலாது
போகும். நமக்கு வேண்டியதை நம் குறைகளை நம் ஒற்றியூரான
நம் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து அழுது தொழுது
விண்ணப்பித்தால் நடக்கும்! நம்முள் இருப்பது சாட்சாத் அந்த
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தானே! இறைவன் அருள் கண்டிப்பாக
கிட்டும் என வள்ளல் பெருமான் தன்மீது ஆணையிட்டு கூறுகிறார்.
சந்தேகமே வேண்டாம் இறையருள் கிட்டும்!

Sunday 26 March 2017

2.21 அருள் நாம விளக்கம்


வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
மயங்கி வஞ்சார் பால் வருந்திநாள் தோறும்
ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
எழில்கெள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
ஓங்கு ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே


ஏய் மனிதா, என்னுடன் வருக!! தேனை விட செங்கரும்பை விட
இனிதாகி தவம் செய்யும் அன்பர் சித்தத்துள் ஊறி ஓங்கும்
ஒளியை ஓம் நமசிவாய என்று மனதால் எண்ணி உருகுவாயாக!

அப்படி இறை நாமத்தை மனதில் எண்ணி அந்த அனுபவத்தை பெறுவாயாக!
துன்பங்கள் எண்ணி மனம் வருந்தி என்ன பயன்? அதை விடுத்து இறைவன்
திருவடியை சேர்வாயாக! என்னுடன் வருக என சற்குரு வள்ளல் பெருமான்
நம்மை அழைக்கிறார்! வாருங்கள்! அவ்வையார் விநாயகர் அகவலில்
"சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி" என்கிறார் வள்ளல் பெருமான்.
சித்தத்துள் ஊறி ஓங்கும்  என்கிறார்.

மனம் தாண்டி சித்தத்தில் சிவத்தை நிறுத்தினால் புத்தி தெளிவு பெற்று அறிவு
விருத்தியாகி ஞானம் பெறலாம்! என்னுடன் ஒற்றியூர் வருக என அழைக்கிறார் வள்ளல் பெருமான்! ஒற்றியூர் - கண்மணி!

என்மொழி குருமொழியாக எண்ணி - பாடல் 7
கருணையின் உருவமே, உரு கொண்டு வந்தது நம் வள்ளல் பெருமான்
உருவில்! இறைவனே கருணையே வடிவான  வள்ளல் பெருமான்,
"என் மொழி குருமொழி ஆக எண்ணி " கேட்பாயாக ஒற்றியூர் கண்மணிக்குள்
வருக என நம்மையெல்லாம் அழைக்கிறார்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Saturday 18 March 2017

2.20 திருவடிச் சரண் புகல்


ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
வாடல் நெஞ்சமே வருதி என் னுடனே
மகிழ்ந்து நாம் இரு வரும் சென்று மகிழ்வாய்க்
கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
கோயில் மேவி நம் குடிமுழு தாளச்
தாள்த லந்தரும் நம்தருள் செல்வத்
தந்தை யார்அடி சரண்புக லாமே


எங்கும் ஓடாதீர்! நமக்கு என்ன குறை! நமக்கு உறுதுணையாக
யாரும் இல்லையே என வருந்த வேண்டாம்! என்னுடன் வருக!
நாம் இருவரும் மகிழ்வுடன் ஒற்றியூர் உள்துலங்கும் நம் குடி
முழுவதும் ஆண்டு கொண்டிருக்கும் இறைவனை சரணடைவோம்!
அவன் திருவடியை சரணடைந்தால் இறைவனின் பாதமே கதி என
இருந்தால் எல்லா நலமும் பெறலாம்! அந்த ஒளியோடு இறைவனோடு
கூடி மகிழலாம்!

நாம் குருவோடு சேர்ந்து தான் இறைவனை அடையமுடியும் என்பதை
வள்ளல் பெருமான் அழகாக வலியுறுத்துகிறார்! தானே அழைத்து போகிறேன்
என்கிறார்! என்னோடு வருக நாம் இருவரும் சென்று இறைவனை அடையலாம்  என்பது, வள்ளல் பெருமான் குருவாக இருந்து நம்மை இறைவனிடம் சேர்ப்பிப்பர் என்பதே "குரு அருளின்றி திருவருள் கிட்டாது" நமக்கு சற்குரு வள்ளல் பெருமானே!

வேண்டியது யாவையும் உனக்கு வாங்கி
ஈகுவேன் ஒன்றுக்கும் அஞ்சேல் - பாடல் 2

நாம் வள்ளல் பெருமானை குருவென சரணடைந்தால் நமக்கு
வேண்டியதெல்லாம் தருவார்! எதற்கும் பயப்பட வேண்டியதில்லை!
திருவடியை சரணடைக!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

2.19. தியாக வண்ணப்பதிகம்



காரார் குழலாள் உமையோ லயில்வேல்
காளையொ டுந்தான் அமர்கின்ற
ஏரார் கோலம் கண்டு களிப்பான்
என்னும் எமக்கொன் றருளானேல்
நீரார் சடைமேல் பிறையொன் றுடையான்
நிதிக்கோன் தோழன் எனநின்றான்
பேரார் ஒற்றி யூரான் தியாகப்
பெருமான் பிச்சை பெருமானே


உமையம்மையும் முருகனும் சிவனும் சேர்ந்துதான் இருக்கும்
கோலம் காணக் கண் கோடிவேண்டும். "சோமாஸ்கந்தர்" என்ற மூர்த்தம்
கோவில்களில் பார்த்திருப்போம்! சிவனைப்பிடிக்க சக்தியோடு இருந்து
தவம் செய்தால் முதலில் வருவான் முருகன்! நம் கண்மணி உள் ஒளியான
சிவத்தை பிடிக்க, நாம் விடாது உறுதியுடன் வைராக்கியத்துடன்  தவம்
செய்யவேண்டும். அப்படி தவம் செய்தால் முதலில் நம் இருகண்களும்
காணும். ஆறுமுகம் காணும். அந்த தத்துவம் தான் சோமாஸ்கந்தர். அந்த
சோமாஸ்கந்தர் இருக்கும் இடம் கண் கண்ணீர் சொரியும்-அதுதான் கங்கை!
சந்திர கலை உடையது. அவன் - சிவன் நம் கண்களில் இருப்பவன்
பிச்சை பெருமான்! எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி இட்ட பிச்சை
தான் கண்மணி ஒளியான பிச்சை பெருமான்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Monday 13 March 2017

2.18 திருப்புகழ் விலாசம்


துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்தி
செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
இன்ப மேஇமை யான்மகட் கரசே 
திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
திகழும் ஒற்றியூர் சிவபெருமானே


எங்கள் உள்ளே உவந்து ஊறிய அமுதே, இன்பமே
சந்திரனை தலையில் தாங்கிய ஒளிக்கலைகளையுடைய
கண்மணியே! சிவமே! தவத்தால் ஒழுகும் நீரால், கண்கள்
சிவந்து ஒளி பெருகி நிற்பதால் நாம் நம் கண்மணி ஒளியை
பரஞ்சோதியை காணலாம். சதாகாலமும் இறைவனை
நினைந்து உணர்ந்து தொழுது வந்தால் திருவடியை - ஒளியை
தவம் செய்து வந்தால் உள் அமுதம் கிட்டும். பேரின்பம் பெறலாம்

காமன் வெந்திட கண் விழித்தவனே - பாடல் 4

நம் மனதிலுள்ள காமம் முதலான துர்க்குணங்கள் போக வேண்டுமானால்
கண் விழிக்கணும்! கண் விழித்திருந்து தவம் செய்வதால் நம் கண்மணி உள்
ஒளி சிவம் பெருகும். சிவமாகிய ஒளி பெருகினால் நம் காமம் எரிந்து போகும்.

தொழுது கொண்டோடினர் தோட்டக்குடிகள்

என்ற திருமந்திர வரிகள் நாம் அறிய வேண்டிய ஒன்றாகும். அதைத்தான் வள்ளல் பெருமானும் காமன் வெந்திட கண் விளியுங்கள் என்றார். விழித்திருந்து, விழியில்  உணர்வுடன் தவம் செய்து வந்தால் சுத்த உஷ்ணம் பெருகும் ! அசுத்த உஷ்ணமான காமாதி துர்குணகங்கள் வெந்துபோகும்!

எழுமின் விழுமின்
தூங்கும் மனிதா விழித்தெழு! விழிப்புணர்வுடன் இரு! விழியில் உணர்வுடன் இரு!

மாலின் கண்மலர் மலர்திருப்பதானே - பாடல் 8


திருமாலின் கண்மலர் பொருந்திய மலர் திருப்பாதனே. நம்
கண்மணி தான் கண்ணன் - திருமால். அதாவது மாயவன் - மாயை
-மும்,மலங்களால் மறைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே உள்ள
ஒளியே சிவமாகிய ஒளி, மலர்ப்பாதம் - திருவடி என்பது.    


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Sunday 12 March 2017

2.17 நெஞ்சோடு நேர்தல்


ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனை பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே

மனமே மனிதர்கள் காமத்தால் ஏற்படும் உடல் சூட்டையும்
அதன் பின்னால் வரும் துன்பங்கள் யாவையும் நீங்க தன்
உடலில் ஒற்றியிருக்கும் -கண்மணியின் உள் ஒற்றியிருக்கும்
அந்த ஒளியை பற்றி, மேலும் மேலும் பற்றி வளர்ச் செய்தால்
தவம் செய்தால் தப்பலாம்! இன்பமாக வாழலாம். மும்மலமாகிய
விஷத்தை கொண்டநாதன் கண்மணி ஒளி -படம் பக்கநாதன்!

கல்லை யொத்த என் கன்ம நெஞ்சமே - பாடல் 7
கல் போன்றது என் கன்ம நெஞ்சம் - கல்மனம். நம் மனம் - கன்ம நெஞ்சம்.
அதாவது நாம் இப்பிறவியில் கொண்டுவந்த பிராரத்துவ கர்ம வினை நம்
மனம் மூலமாக அரங்கேறுகிறது. பிறந்து நடத்தும் ஆகான்மிய கன்மமும்
நம் மனம் மூலமே நடக்கிறது.

'தவத்தால் இவ்விரண்டும் இல்லாது போகையில் வரும் சஞ்சித கர்மமும்
வரும் இடம் மனம் தான். வினையை தாங்குவதால் சராசரி மனிதனின் மனம்
கல்லாகி விடுகிறது. "நெஞ்சு கனகல்லும் நெகிழ்ந்துருக" என ஒரு ஞானி பாடுகிறார்.

மனம் கல்லான மனிதன் தான் யார் என உணரத்தான் நம் முன்னோர்கள் கோயிலில் கல்லால் இறை உருவத்தை பலவாராக வடித்தார்கள்! கல்லான மனம் படைத்த  மனிதன் மனம் உருக உருக கடவுள் காட்சி அனுபவம் பெறுவான்! கோவிலில்  கல்லாக வடிக்கப்பட்ட கடவுள் சிலை முன் இவன் போய் கல்லாக உட்கார்ந்து  இருப்பானேயானால் கர்ப்பகிரகத்தில் உள்ள கல் பேசும். கல் போல் அமர்ந்த மனிதன் காணுவான் கண்ணாலே!

உடல் கல்லாகிவிட்டால் கன்மட்டுமே உணர்வோடு இருப்பதை அனுபவத்தில்
உணரலாம்! கல்லான மனம் கரைய கண்குளிர தவம்  செய்ய வேண்டும்.
உடல் கல்லாக வேண்டும். மனம் இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது
போனால் வினை இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது போனால்
வினை இல்லாது போகும்! வினை இல்லாது போனால் பிறப்பு இறப்பு
இல்லாது போகுமே! அதுதானே வேண்டும்!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

2.16 எழுத்தறியும் பெருமான் மாலை


சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துள் மொய்கழற்காள் ஆக்காதே
நிந்தை உறும் நோயால் நிகழ வைத்தால் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே


நம் முந்தைய வினைகளால் நாம் சிந்தை மயங்கி தடுமாறி
மேலும் தீவினைகள் பல புரிந்து பலவிதமான துன்பங்களுக்கு
ஆளாகிறோம்! எந்தந்தையாகிய நீ, கண்மணியில் ஒற்றியிருக்கும்
நீயே, உன் தூய திருவடிக்கு என்னை ஆளாக்குவாயாக என
வள்ளலார் வேண்டுகிறார், நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளியே
எழுத்தறியும் பெருமான் ஆகும்!

எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும் - என்ற அவ்வையார் அமுதவாக்கும்

எண்ணென்ப யேனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு 


என்ற திருவள்ளுவர் திருவாக்கும் உரைக்கும் உண்மையே வள்ளலாரும்
உரைத்தார்! எண்ணும் எழுத்தும் கண். எண்ணாக எட்டும் எழுத்துக்கு
முதலான ஆதியான எழுத்தும் ஒன்றே. தமிழில் எட்டாம் எண் 'அ' எழுத்தில்
முதல் 'அ' 'அ' வலது கண். இந்த எழுத்தை அறியும் பெருமான் - இந்த
'அ' எழுத்தை அறிந்தாலே உள்ளிருக்கும் - கண்மணி ஒளியை - பெருமானை
இறைவனை அறியலாம் உணரலாம் நம்முள் இருந்து நமக்கு நம்மை
அறிவிப்பவன் அறிபவனாக - நான் - பரஞ்சோதியே! இறைவன்!  









கண்ணாளா உன்றன் கருணை எண்களிக்க - பாடல் 8

கண்ணாளா கண் + ஆள்பவன் - கண்ணை ஆண்டுகொண்டு இருக்கும்
ஒளியே கண்ணாளன்! என் கண்ணாளனே உன்கருணையை எனக்கு தந்து
அருள்வாயாக என வள்ளலார் வேண்டுகிறார்!


காமாந்தகாரம் எனும் கள்ளுண்டு கண்மூடி ஏமாந்தேன்
- பாடல் 14

மனிதர்கள் காம வசத்தால் கண்ஒளி மங்கி இறப்பர்! கள்ளுண்டு
போதையால் அறிவு மயங்கி ஞானம் பெறாது போவர்! எல்லாவற்றுக்கும்
மேலாக கண்ணை அறியாத - கண்மணி ஒளியை - திருவடியை அறியாத
மூடர்கள்  உபதேசத்தால் கண்ணை மூடி தியானம் செய்து ஏமாந்து போவார்?
கண்ணை மூடி தியானம் செய்வபவர், முடிவில் கண்ணை மூடிவிடுவர்! அதாவது  இறந்து விடுவார்!

கண்ணை திறந்து தவம் செய்பவரே கண்மணி உள் ஒளியை காண்பர்! கண்ணை திறந்து தவம் செய்ய, கண்ணை திறக்க ஒரு குரு தேவை!
குரு உங்கள் கண்ணை திறந்தால் - நீங்கள் கண்ணை மூடாது திறந்த நிலையில் தவம் செய்தால் - கண் இமை மூடாத நிலையில் இருப்பதால்-
இமையாதவர்கள்-தேவர்கள்  ஆவீர்கள்! தேவர்கள் எந்நேரமும்
இறைவனை காணலாம்! முதலில் மனிதனான நாம் தேவராக வேண்டும்! அதாவது இமையாதவர்களாக - கண்ணை திறந்த நிலையில்
 உணர்வில் - உள் ஒளியில் நிலைப்பவராக இருக்க வேண்டும் - அவர்களுக்குத்தான் இறைவனை காண முடியும். எழுத்தை
''அ'' அறிந்தால் பெருமானை கண்ணை திறந்திருந்தால்
காணலாம்! அருள் பெறலாம்!

 பொன்னைமதித்தையா நின் பொன்னடியை போற்றாத
ஏழைகட்கும் ஏழை கண்டாய் - பாடல்19

பொன்னை பெரிதாக மதித்து அதனை பெற அல்லும் பகலும்
பாடுபடும் இவ்வுலகில் பொன் பொருள் இல்லாதவரை ஏழை என்பர்!

ஆனால் இறைவனின் பொன்னடியை - தங்க ஜோதியை உணராதவன்
தான் உண்மையிலே ஏழையிலும் ஏழை!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை! அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை!
பொருள் என்றால் பொன் பணம் அல்ல!? மெய்ப்பொருள்! மெய்ப்பொருள் உணராதவன் தவம் செய்யாதவன் இவ்வுலகில் வாழ முடியாது! வினைகளுக்குட்பட்டு ஜனன மரண பிணியில் மாட்டிகொள்வான்! இவ்வுலகம் சிறப்பாக வாழ வேண்டுமானால் தன்னிலே இருக்கும் பொருளை - மெய்ப்பொருளை அறிய வேண்டும். குரு மூலமாக உணர வேண்டும். இவ்வுலகமே இல்லையெனில் அவ்வுலகம் எங்ஙனம் கிட்டும்!
இவ்வுலகில் பொருள் அறிந்து குரு மூலமாக உணர்ந்து தவம் செய்பவர்க்கே அவ்வுலகம் கிட்டும். அ + உலகம் = அவ்வுலகம் கிட்டும் இறைவன் இருக்கும்

உலகம் கிட்டும்! அதைவிட பெரும்பேறு உண்டுமா?!

தூக்கமில்லா ஆனந்ததூக்கம் - பாடல் 22
தூக்கம் என்பது மனிதனின் உடல் உள் உறுப்புக்கள்
சோர்வடையும் போது தேவையான ஒன்று உள் உறுப்புகள்
அயர்ந்து ஓய்வு கொள்வது தூக்கம்! தூங்கும் போது உயிர் ஆதாரத்தில்
ஒடுங்கும்! சராசரி மனிதனுக்கு தூக்கம் இன்றிமையாதது! ஆனால்
தவம் செய்வோர்க்கு தூக்கம் ஒரு தடை! "தூங்காமல் தூங்கி " சுகம்
பெறுவது எக்காலம் என ஒரு சித்தர் பாடியுள்ளார்!

நாம் கண்மணி ஒளியில் உணர்வை வைத்து தவம் செய்ய செய்ய ஒளிபெறுகி உயிர் ஆற்றல் பெருகி உடல் உள் உறுப்புகள் அதிக சக்தி பெறும், சோர்வடையாது, உற்சாகம் கூடும் உணர்வு பெருக பெருக  ஆனந்தம் மேலிடும் அதுவே ஆனந்த தூக்கம் என வள்ளலார் கூறுகிறார்.

சும்மா சும்மா தூங்கி தூங்கி வழிபவன் முடிவில்
மீளாத தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்! இறந்து விடுவான்! தூக்கத்தை
ஒழித்தவனே! உடலை, உணர்வுடையவனாக உற்சாகமாக வைத்திருப்பவனே
நெடுநாள் வாழவான்! அதற்க்கு தவம் தேவை! "ஒருவன் ஒரு நாளைக்கு
ஒருமணி நேரம் தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடம்
ஜீவித்திருப்பான்" என வள்ளலார் கூறுகிறார்!
 
வள்ளலார் சொன்ன தூக்கம்  ஆனந்த தூக்கம்! தூங்காமல் தூங்கி சுகம் பெரும் தவ நிலை! உடல் தூங்காமல் மனம் மயங்காமல் உணர்வுறு நிலையில் சும்மா இருப்பதே தூங்காமல் ஆனந்தமாக தூங்குவது ஆகும்! ஒருநாளைக்கு ஒரு மணிநேரம் தூக்கமில்லா ஆனந்த தூக்கம் கொள்வார் ஆயிரம் வருடம் ஜீவித்திருப்பார் இதுதான் வள்ளலார் வாக்கு!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Saturday 11 March 2017

2..15 அருள்விடை வேட்கை


போகம் கொண்ட புணர்முலை மாதொரு
பாகம் கொண்ட படம்பக்க நாதரே
மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின்
மோகம் கொண்டஎம் முன் நின் றருளிரோ

நமக்கு போகம் - பேரின்பம் தரும் கண்மணியின் (இடது பக்கம் -
பெண் அம்சம் - சந்திர கலை) ஒளியான, விஷமுடைய
அரவணிந்த - மும்மலம் தான் விஷம் கண்மணி ஒளியான
சிவமே எனப்படும். உன்மீது தீராத காதல் - அன்பு கொண்டு தவம்
செயும் என் முன் வந்து அருள்வீரே என்கிறார் வள்ளலார்.
பெண் இன்பம் - சிற்றின்பம் இது உலகில் நமக்கு வினையைத்
தரவல்லது! பெண் அம்சமான நம் இடப்பக்க கண்மணி ஒளியை
சேர்வது பேரின்பம், வினையை தீர்க்கவல்லது!

சீலமேவித் திகழ் அனல்கண் ஒன்று பாலமேவும் - பாடல் 3

இப்பிரபஞ்சம் முழுவதுமாக திகழ்கின்ற அந்த பரஞ்சோதியை நம்
கண்மணி அனலாகும்! நம் கண்கள் ஒன்றினால்-இணைந்தால் மயிர்பாலம்
வழியே செல்லும்! என்னது செல்லும்? அனல் கண்ணிலிருந்து கிளம்பும்
ஆறுபோல மயிர்ப்பாலம் வழியே உள்ளே பாயும்! நெருப்பாறு
பாய்ந்தோடும் மயிர்பாலம் - நெருப்பாறு என்று சித்தர் பல கூறியது
இதைத்தான்!

அடியார் நெஞ்சத் தருட் பெருஞ்ஜோதி - பாடல் 9

தவம் செய்பவரே அடியார்கள்! தவம் செய்யும் மெய்யடியார் நெஞ்சமாகிய
கண்மணிஒளியே, எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி!

2.14 அறிவரும் பெருமை


நாயினும் கடையேன் என்செய்வேன் பிணியால்
நலிகின்ற நல்வினை அறிந்தும்
தாயினும் இனியாய் இன்னுநீ வரவு
தாழ்த்தனை என்கொலென் றறியேன்

மாயினும் அல்லால் வாழினும் நினது
மலரடி அன்றிஒன் றெத்தேன்
காயினும் என்னைக் கனியினும் நின்னைக்
கனவினும் விட்டிடேன் காணே

மனிதனாக பிறந்த நாம், நம்முள் இருக்கும் நம் கண்
மணிஒளியை - இறைவனின் திருமலரடியை - திருவடியை
பணிவது ஒன்றையே செயலாக - நம்  தவமாக கொண்டால்
இறைவன் நாம் எவ்வளவு கீழானவனாக இருந்தாலும் எவ்வளவு
துன்பத்தில் ஆழ்பவனாக இருந்தாலும், நம் மனம் கல்லாக இருந்தாலும்
இறைவன் நம்மை தடுத்து - காத்து அருள்வான்! கருணையே
வடிவாக கொண்டவனல்லவா ஜோதியான இறைவன்!


காண்பது கருதி மாலொடு மலர்வாழ்
கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பது மாறி வேறுரு எடுத்தும்
வள்ளல் நின் உரு அறிந்திலே  - பாடல் 2


இறைவனை காண வேண்டுமென, திருமால் பன்றி உருவெடுத்து
அதல பாதாளம் போனார் காண வில்லை! பிரம்மன் அன்னபட்சியாக
உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை!
இது கதை!?

நம் உடம்பில், யோகம் - தவம் செய்கிறேன் என்று பலர் மூலாதாரத்தை நாடி
குய்யத்திற்கு குதத்திற்கும் மத்திய பகுதியில் நினைவை நிறுத்தியோ,
பிராணாயாமம் செய்தோ இன்னும் பல வழிகளிலும் தவம் செய்வர்.
அங்கே காண முடியாது இறைவனை!

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் பன்றி உருவெடுத்தார் என்பதும்
யாதெனின்!, பன்றி தானே மலம் சாப்பிடும்? நம் கண் வெள்ளை விழியே
பாற்கடல்! அதில் பள்ளி கொண்டவன் கண்மணியான கருமை நிற கண்ணன்!

அவன் அங்குள்ள நம் மும்மலங்களை சாப்பிட்டு நம்மை மலமற்றவர்களாக நிமலனாக மாற்றுவார்! கண்ணனை பிடித்தால் காலனை வெல்லலாம்!

இன்னும் சிலர் நம் உடல் சிரசில் மேல் நினைவை நிறுத்தி தவம் செய்வர்! பிராணாயாமம் செய்து காற்றை நிறுத்துவர்! அபாயம்! மூடும் தலையும் இல்லாமல் செய்யும் தவம் இது ! பேராபத்துக்கள் இதனால் ஏற்படும்! பிரம்மன் சிரசுக்கு மேலே போன கதை இதுதான்! காண முடியாது கடவுளை இவ்விதம் போனால்! இந்த இருவழியிலும் செல்வோர்தான் அதிகம் கீழேபோனாலும் காண முடியாது!? மேலே போனாலும் காண முடியாது?!
நடுவிலே - கண்மணி நடுவிலே ஒளியான கடவுளை காண - உணர வேண்டும்.

வழி காட்ட குரு வேண்டும்! விழிகாட்டப் பெற்றால் விழியின் உள் சென்று
இறைவன் - திருவடியை உணர்ந்து தவம் செய்தல் திருமுடி அறியலாம்!
உணரலாம்! காணலாம்! காலை பிடித்தால் தலை தாழ்ந்து வந்து விடுமல்லவா?  திருவடியை பிடித்தால் திருமுடி நம் கைக்கு வந்து விடும்! இறைவன் கருணையே  வடிவானவனல்லவா? திருவடியை தொட்டால் திருமுடியை காட்டுவான்! காணலாம் கண்ணார கடவுளை கண்ணிலேயே!




ஒற்றியூர் அரசே நின்று சிற்சபைக்குள் நடம்
செயும் கருணாநிலயமே நின் மலைச்சுடரே - பாடல் 3

நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளியே! உள்ளே நின்று
கண்மணியாகிய சிற்சபையில் நடம்செயும் ஆடிக்கொண்டிருக்கும்
சோதியே! அந்த சோதி கருணையை கொண்டது! நிலையாக
கொண்டிருக்கும் கருணை நிலையம்! நின்மலர்ச்சுடர் - மலம்
இல்லாத நின் மலம் - நிமலம் - மும்மலம் இல்லாத சுடரே
நம் கண்மணியான இறைவன்!



ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை




Thursday 2 March 2017

2.12 திருவருள் வேட்கை - 1

தோன்றாத் துணையாகும் சோதியே  - பாடல் 2

நம் கண்மணிக்குள் ஒளியாக துலங்கும் சோதியால் பிரபஞ்சம்
முழுவதும் நாம் காணமுடிகிறது! உலகை பார்க்க உதவும் கண்மணி
சோதியை நாம் பார்க்க முடிவதில்லை! எல்லாவற்றையும் காட்டுவிக்கும்
கண்மணி ஒளி தன்னை காட்டமால் மறைந்து நிற்கிறது. அதனால் தான்
வள்ளல் பெருமான் தோன்றா துணையாகும் சோதியே என்றார்.

அறியாப் பருவத்தடியேனை ஆட்கொண்ட நெறியாம்
கருணை நினைந்துருகேன் - பாடல் 9

வள்ளலார் இராமலிங்க சுவாமிகளை இறைவன் அறியாப் பருவத்திலேயே
- குழந்தை பிராயத்திலேயே ஆட்கொண்டு அருளினார்! வள்ளலாரை
ஆட்கொண்ட நெறி - திருவடியில் - கண்மலரில் - கண்மணி ஒளியில்
தவம் செய்து உள் கடந்து - கடவுளை காண்பதாகும்! அந்நெறியே - செந்நெறி
அருள்நெறி - உலகமக்கள் அனைவருக்கும் வள்ளலார் போதிக்கும்
மரணமிலா பெருவாழ்வு காண வழிவகுக்கும் சன்மார்க்க நெறி
சாகாக் கலையாகும்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

 

2.13 அபராத விண்ணப்பம்


தேவியல் அறியாச் சிறியேனை பிழையைத்
திருவுளத் தெண்ணிநீ கோபம்
மேவிஇங் கையோ கைவிடில் சிவனே
வேறுநான் யாதுசெய் வேனே
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த
முழுச்சுவை முதிர்ந்தசெங்க ரும்பே
சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே
திருவெற்றி யூர் மகிழ் தேவே
தே + இயல் = தெய்வத்தின் இயல்பு. நம் உடலில் கண்மணியில்
துலங்கும் தெய்வத்தின் இயல்பு நிலை அறியாமல் - ஒளியை
அறியாமல் இருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும்!

மூவிருமுகம்சேர் முத்தை நமக்கு அருளியது முழுச்சுவை முதிர்ந்த
செங்கரும்பு! முழுச்சுவையை தரும் அமுதத்தை தருவது-நமக்கு அமிர்தம்
கிட்ட வேண்டுமானால் நம் கரும்-பு செங்கரும்பு ஆகி முதிர்ச்சி பெறவேண்டும்.
நம் கண்கள் சிவந்து முற்றினால் - தவத்தால் ஒளி ஏறி ஏறி விளைய விளையத்தானே உள் அமுதம் கிடைக்கும்! அமுதம் கிட்டுமுன் மூவிருமுகம் சேர் முத்து காணலாம். கிட்டும்! மூவிருமுகம் - ஆறுமுகம் ஆறுமுகமான முத்து - காணலாம்! நம் ஒளி பொருந்திய இரு கண்களை நாமே  காணலாம்!

அதை நமக்கு அருளுவது தான் உள்ளிருக்கும் சிவமாகிய தங்க ஜோதி! அந்த ஜோதி, நந்தி - வெள்ளை காளை மீது அமர்ந்த சிவந்த மேனி சிவனை குறிக்கும். வெள்ளை ஒளி பின்னர் சிவப்பு ஒளி குன்றென விளங்கும்.,திரு - இறைவன் ஒற்றி இருக்கும் கண்மணியை
குறிப்பதாகும். எல்லா ஊர் பெயரும் இறைவன் இருக்கும் கண்மணியை குறிப்பதே! ஊரும்  பெரும் உரைப்பது கண்மணி ஒளியையே!


காண நின்றடியார்க் கருள் தரும்பொருளே - பாடல் 5
எல்லோரும் காண - அறிய கண்ணில் மணியில் உள் ஒளியாய்
இருப்பவனே! உன்னை நாடிடும் அடியவர்க்கு அருள் தருபவனே!
உன்னை நாடிடும் அடியவர்க்கு அருள் தருபவனே! பொருளே - மெய்ப்பொருள்
- கண்மணி

சஞ்சிதமறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றி
எம் தவமே - பாடல் 6

நம் பிராரத்துவம் ஆகாமியம் என்ற இருவினைகளைவிட கொடிய
முற்பிறவிகளில் செய்த சஞ்சித வினையைக் கூட இல்லாமலாக்குவது
சண்முகம்  உடையவன் தந்தை - ஆறுமுகம் காட்டும் உள் சிவஒளி.
அந்த சிவம் - ஒளி. நம் கனமணியின் உள்ளே ஒற்றியிருப்பது!
தவம் செய்வார் மட்டுமே உணர்ந்து அறிவதாகும்.

தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத்தூணே
அம்பிகாபதியே - பாடல் பாடல் 7

துதிக்கையுடைய விநாயகனையும் வேலை கையில் கொண்ட வேலவனையும்  பெற்றவன் உள் சிவமே! தோன்றலே - அது தோன்றக்கூடியது எனவே தான் வள்ளலார் தோன்றலே என்றார்! வச்சரத்தூண் - சூரிய சந்திர அக்னி கலைக்கு மேலாக ஏக பாதமாக - தூண் போன்று ஒளியாக ஒளிர்வதால் வைரத்தூணே என்றார் வள்ளலார்! அம்பிகையின் - நமக்கு அமுதம் தரும் தாயின் - சதியின் பதியே சிவம் -  அம்பிகையின் பதியே என் உள் விளங்கும் ஒளிரும் ஜோதியே எனப்படும். அதுவே அம்பிகாபதி என்பது!

சுட்டிலாப் பொருளே சுகப்பெருங்கடலே - பாடல் 10

இறைவன் நம் உடலில் கண்ணில் மணியில் ஒளியாக இருப்பதை சுட்டிகாட்ட
முடியுமா? உணர்த்தத்தான் முடியும்!  அதனால் தான் சுட்டிலாபொருளே
என்றார் வள்ளலார். நம் கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்தால் அதுதான் நமக்கு சுகப்பெருங்கடலாகும்! பேரின்பம் தரும்! அமுதம் தரும்!