Sunday 1 September 2019

59. திருக்காட்சிக்கு இரங்கல்


மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால் 
புண்ணேயும் நெஞ்சம் புழுங்கின்ற பொய்யவனேன் 
பண்ணேயும் இன்பப்  பரஞ்சுடரே என் இரண்டு 
கண்ணே உன் புன்முகத்தைக் காணக் கிடைத்திலனே 

உலக வாழ்க்கையில், மாயையில் சிக்கி சீரழிந்து தீராத
நோயால் துன்புற்று புண்பட்டு வேதனையால் துயரப்படுவர் முடிவில்
மண்ணில் தான் போய் சேருவர். இதிலிருந்து விடுபட நம் இரண்டு
கண்ணில் துலங்கும் ஒளியை இறைவனின் பொன் முகத்தை தவம் செய்து
காண வேண்டும். காணலாம்! ஒளியைக்கண்டவர் தசவித நாதத்தை
கேட்பர்! இன்பத்தை - பேரின்பத்தை தரும் பரஞ்சுடர் - பரமாத்மா
நம் இரண்டு கண்களிலும் உள்ளார்!


அருள் ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலேனே - பாடல் 2

நம் இரு கண்ணில்  துலங்கும் ஒளியை எண்ணி உணர்ந்து தவம் செய்தால்
உள்ளே உள்ளே அக்னிகலை உணர்வு பெறும் -ஒளி பெருகும் - துலங்கும்.
அதுவே மூன்றாவது கண்!? அருள்மயனான முக்கண் சிவம் பெற்ற பிள்ளையல்லவா நாம்!?
நமக்கும் மூன்று கண்தான் ! தெரிகின்ற இருகண் ஒளியை பெருக்கினால்  - தவத்தால்
மூன்றாவது கண் துலங்கும்!?

தாயுமானவனே எந் தந்தையே அன்பர்தமைச் சேயாய் வளர்க்கும் சிவனே - பாடல் 4

இறைவனே நமக்கு உயிர் தந்தவன் ஆதலால் தாய்!  நம்மை வளர்த்து கருவிலே 
உருவாக்குபவர் அதனால் தந்தை! தாயும் அவனே! தந்தையும் அவனே! அதனால் 
தான் ஞானியர் இறைவனை அம்மையப்பன் என்றழைத்தனர்.

யார் அவனை - சிவனை உணர்ந்து சரணடைகிறார்களோ அவர்களை சேயாய் பிள்ளையை போல் 
போற்றி பாதுகாத்து வளர்த்து ஆளாக்குவான்! 

உடலை தந்த தாய் தந்தையரும் அழிந்து விடுவர்! நம் உடலும் அழிந்து விடும்! இறைவனை உயிர் தந்த அம்மையப்பனை சரணடைந்தால் உடல் அழியாது! உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடல் பெறும்!?இதைத்தான் வள்ளல் பெருமான் உரைக்கின்றார்.

உயிர் தந்த தாயும் தந்தையும் குருவுமான இறைவனை அருட்பெருஞ்ஜோதியை உணர்பவனே முக்தியடைகிறான்!மரணமிலாபெருவாழ்வு பெறுகிறான்!ஞானியாகிறான்! சித்தனாகிறான்!

கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே - பாடல் 6 

இறைவன் தான் கற்பகம்! எல்லாம் தரும் பரம்பொருள்! அருள்மழை பொழியும் அருட்பெருஞ்சோதி! அவனை நினைத்து தவம் செய்தால் நம் கண்கள் கழிப்படையும் வண்ணம், ஆனந்த பரவச நிலை, பேரின்பம் கிட்டும். எண்ணமெல்லாம் அந்த சிவமே ஒளியே துலங்குவதால் கருத்தில் வேறு ஒன்றுமில்லாமல் அதிலும் பரவச நிலை கூடும்! சிந்தனை பார்வை எல்லாமே ஒளிமயமாகும்! பார்க்குமிடமெங்கும் நீக்கமற எங்கும் ஒளி வெள்ளமாக - பரம்பொருளாக காணலாம்! மகிழலாம்! 

முக்திக்குவித்தே நின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க - பாடல் 9

உலக மாயையில் மயங்காமல், இறைவா உன் பொற்பாதம் சரணடைவதே என
யார் தம் மெய்ப்பொருளில் - தன் கண்மணியான ஒளியான - இறைவன் திருவடி 
நிழலில் தாங்குகின்றனரோ அவரே முக்தி அடைவர்! இறைவன் திருவடியாகிய தம் 
கண்மணி ஒளியில் யார் சரண் புகுகின்றார்களோ! அவரே புத்திசாலி!? இதுவே 
முக்திக்கு வழி ! முக்திக்கு வித்து! இறைவன் பொன்னடி! நம் கண்மணி!  


ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
www.vallalyaar.com


Sunday 28 July 2019

58. கொடை மட விண்ணப்பம்

58. கொடை மட விண்ணப்பம்

நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின் 
பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள் துணைப் போற்றுகிலேன் 
என் போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத்தே நடஞ்செய் 
மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே 

அம்பலத்தே நடஞ்செய்மின் போன்ற வேணியனே - நாம்  எல்லோரும்
அறிய அம்பலமாக நம் கண்மணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஒளியானவனே!
அதிலிருந்து தோன்றும் ஒளிக்கதிர்கள் மின்னலைப்போல் உள்ளன. அது
சிவனின் சடையை போல் இருக்கிறது! ஒற்றி மேவிய வேதியனே - நம் உடலில்
கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளியே! வேதங்கள் உரைக்கும் இறைவனே -
ஜோதியானவனே  - வேதியனே! உன் போன்ற . தெய்வம் வேறில்லை! 
உன் பொன்னான திருவடிகளை எனக்கு துணை! ஞானத்தை தரும்!
இறைவா போற்றுகின்றேன் - பணிகிறேன். அருள் புரிக இந்த ஏழைக்கும்!


மலம் மாற்றுகின்ற விண்ணவனே - பாடல் 3

நம் கண்மணியில் மத்தியில் ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியாக இருக்கும்
ஒளியாகிய பரம்பொருளை பற்றி நாம் தவம் செய்தால், நம் உள் ஒளி பெருகி
ஊசிமுனை துவாரத்தை அடைத்து கொண்டிருக்கும் திரையை - மும்மலங்களை
எரித்து இல்லாமல் செய்து விடும்! நம் கண்மணியின் உள்பகுதியே விண் - ஆகாயம்.
விண்ணில் ஒளியாக துளங்குபவனை விண்ணவனே என்றார் வள்ளல் பெருமான்!


அன்று நால்வர்க்கு யோகமுறை அறைந்தான் சொன்னவனே - பாடல் 5

ஆதியில் முதல்குருவான தட்சிணா மூர்த்தியாக தோன்றிய பரம்பொருளே !
சனகாதி முனிவர் நால்வர்க்கும் ஞானஉபதேசம்  சொல்லாமல் சொன்னவாரே!
"சும்மா இருக்கும்" திறத்தை உணர்த்திக்காட்டியவரே! இதுவே நாம் செய்ய வேண்டிய
தெரிந்து கொள்ளவேண்டிய உணர்ந்து கொள்ள வேண்டிய சிறந்த அறமாகும்!

ஈன்றவனே அன்பர் இன்னுயிர்  - பாடல் 6

நம் உடலை தந்ததுதான் தாயும் தந்தையும் ! உயிரை தருவது இறைவனே! அதனால் தான்
வள்ளல்ப் பெருமான் பரம்பொருளை ஈன்றவனே என்கிறார்!

கங்கரனே மதிக் கண்ணியனே நுதல் கண்ணியனே - பாடல் 7
கங்கரன்  - கங்கையுடைய  கரத்தையுடையவன், கங்கை என்றால் நீர். வற்றாத
நீரையுடையை நமது கண்களே சந்திரன் - சூரியன்  ஆகும். இறைவனின் திருவடியாகவும்
திருக்கரங்களாகவும் விளங்குவது இதுவே!  அனுபவ நிலையில் ஒளிக்கதிர்களே கரங்கள்
எனப்பட்டது! நுதல் கண்ணினனே - கண்ணிலே இருக்கும் பொருள். வேறென்ன?
ஒளிதானே!  அதுதானே இறைவன்!

சின்மயனே அனல் செங்கையில் ஏந்திய சேவகனே - பாடல் 8 
சின்மயனே- சின்முத்திரை   குறிக்கும் கண்ணில் இருப்பவன் சின்மயன் - ஒளி! அனல்
செங்கையில் ஏந்திய  - நாம் தவம் செய்யும்போது நம் வெள்ளை விழியை சிவப்பாக
மாறிவிடும்.அந்நிலையே செங்கை சிவந்தகை என்றும், அனல் அப்போது நிரம்பி
இருக்கும். அதனால் தான் அனல் ஏங்கிய செங்கை எனப்பட்டது சேவகன் போல்
எல்லாம் செய்கின்றானல்லவா? நமக்கு உயிர் தந்த அந்த இறைவனே  நமக்கு
வேலைக்காரனாகவும் இருந்து நம்மை காத்து அருள்கிறான்!

கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே - பாடல் 9

எண்ணிலடங்கா அண்டங்கள் பலவும் படைத்து அருளும் அந்த இறைவன் - பரம் பொருள்
நம் மெய்யிலே - உடலிலே மெய்ப்பொருளாக நம் கண்மணியிலே ஒளியாக துலங்குகிறான்
கண்ணிலே நின்று ஒளிர்வதால் வள்ளல் பெருமான் கண்ணியனே என்கிறார்!

ஒற்றிக்கோயிலின்  மேவும் குருபரனே - பாடல் 10 

நமது கண்மணியில் ஒற்றி இருக்கிறான் அருட்பெருஞ்சோதி ஆண்டவன்! அதனால் கண்மணி ஒற்றியூர் என்று ஆனது. திருவாகிய இறைவன் ஒற்றி இருப்பதால் திருவொற்றியூர் எனப்பட்டது.  திருவொற்றியூர் ஆகிய நம் கண்மணியில் கோயில் கொண்டிருக்கும் அந்த ஜோதியே ஒளியே - இறைவனே - பரம்பொருளே நமது குருபரன் ஆகும்! நமக்கு உயிர் தந்த பரம்பொருள்  நமக்கு சேவகனாக இருக்கும் பரமாத்மாதான் நமக்கு குருவாக இருந்து நம்மை வழிநடுத்துவான்!! அந்த இறைவனே - நமது உயிரே - நம் ஆத்மாவே நமக்கு உண்மை குரு!?

அந்த மெய் குருவை பெற சற்குரு வள்ளலார் அனுகிரகம் தேவை! அருள் புரிய காத்திருக்கிறார்
வள்ளலார்! வாருங்கள்!

ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு சற்குருவை பெற்றேயாக வேண்டும்! சற்குரு மூலமாக உபதேசம் பெற்று தான் சாதனை - தவம் செய்துதான் மெய் குருவை பெற முடியும்! இது இறைவன் வகுத்த நியதி! சற்குரு வள்ளலார் அருள் தர காத்திருக்கிறார்! வாருங்கள்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

Thursday 25 July 2019

57 . மருட்கை விண்ணப்பம்

இரண்டாம் திருமுறை


யாது செய்குவன் போதுபோ கின்ற 
தண்ண லேஉம தன் பருக் கடியேன் 
கோது செய்யினும் பொருத்தருள் புரியும் 
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர் 
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன் 
வலியி லேன்செயும் வகை ஒன்றும் அறியேன் 
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் 
வண்கை யீர் என் கண்மணி அணையீரே 

மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களால் - கருவிலே
உருவாக்கபடுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கண்களிலே
ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் என் கண்மணி அனையீரே
-அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும்
என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும்
அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள் புரியும் இறைவா!
எனை அடுத்த குறும்பர் அறியாமையினால் வாதம் செய்கின்றனர்.
மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது.
வேதனைப்படுகிறேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும்
வலிமை இல்லையே! என்ன செய்வது என அறியாமல் திகைக்கின்றேனே
இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?

காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழக்கை எனும் திமிங்கிலம்
நம்மை விழுங்கி விடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமானால்அருள் பொழியும்
நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்சோதி இறைவனை சரண்புக
வேண்டும் - பாடல் 3

ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய் போன வினை நம்மை
மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே
வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்!
பாடல் 7

இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8
இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம்
இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால்  நம்
கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை
பற்ற வேண்டும் . சரணடைய வேண்டும். அப்போது தான் இறைவன்
பரிபூரண அருள் கிட்டும்! எல்லா துயரங்களிலிருந்து விடுபடலாம்!

சஞ்சி தந்தரும் காமம்   - பாடல் 9
ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ
புண்ணியமாக அவரவர்க்கே திரும்ப வருகிறது. அவை பிராரத்துவம்
-ஆகான்மியம்-சஞ்சிதம் என மூன்று வகைப்படும். சராசரி மனிதனுக்கு
பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது.பிறந்து வாழ்வதில் ஆகான்மியம் நடக்கிறது
அவரவர்   வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவே குறையவோ
செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலே முடிந்து போகிறது. ஆனால் சாமான்யன்
ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று ஞான உபதேசம் - திருவடி தீட்சை
பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுவான்.
பிராரத்துவம் குரு அருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாமல் ஆகிவிடும்.
அதன் பிறகு சஞ்சித கர்மம் தாக்கும். குருவை நாடி ஞான தீட்சை பெற்று
தவம் செய்பவனுக்குதான் சஞ்சித கர்மம்! மற்றவர்க்கு இல்லை!  எதற்கு
வருகிறது? இல்லாமல் ஆக்குவதற்கு தான்! ஒரு கருமமும் இல்லாமல் ஆனால் தானே
பிறப்பு இறப்பு இல்லாமல் போகும்!? பிறந்து இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா?
நமக்கு வேண்டுவது அதுதானே! நமகண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால்
எல்லா துன்பங்களும் நீங்க பெற்று வாழ்வாங்கு வாழலாம்

ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா 
www.vallalyaar.com