Friday, 26 June 2026

58. கொடை மட விண்ணப்பம்

58. கொடை மட விண்ணப்பம்

நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே

அம்பலத்தே நடஞ்செய்மின் போன்ற வேணியனே - நாம் எல்லோரும் அறிய அம்பலமாக நம் கண்மணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஒளியானவனே! அதிலிருந்து தோன்றும் ஒளிக்கதிர்கள் மின்னலைபோல உள்ளன. அது சிவனின் சடை போல இருக்கிறது! ஒற்றிமேவிய வேதியனே - நம் உடலில் கண்மணியில் ஒன்றியிருக்கும் ஒளியே! வேதங்கள் உரைக்கும் இறைவனே - ஜோதியானவனே - வேதியனே! உன் போன்ற தெய்வம் வேறில்லை. உன் பொன்னான திருவடிகளே எனக்குத்துணை! ஞானத்தை தரும்! இறைவா போற்றுகிறேன் - பணிகிறேன். அருள்புரிக இந்த ஏழைக்கும்!.

மலம் மாற்றுகின்ற விண்ணவனே........................ பாடல் 3

நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் உள் இருக்கும் ஒளியாகிய பரம்பொருளை பற்றி நாம் தவம் செய்தால், நம் உள்ஒளி பெருகி ஊசிமுனை துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் திரையை - மும்மலங்களை எரித்து இல்லாமல் செய்து விடும்! நம் கண்மணியின் உள்பகுதியே விண் - ஆகாயம். விண்ணில் ஒளியாக துலங்குபவனை விண்ணவனே என்றார் வள்ளல் பெருமான்!

அன்று நால்வர்க்கும் யோகமுறை அறந்தான்சொன்னவனே - பாடல் - 5

ஆதியில், முதல்குருவாக தட்சிணா மூர்த்தியாக தோன்றிய பரம்பொருளே! சனகாதி முனிவர் நால்வர்க்கும் ஞானோபதேசம் சொல்லாமல் சொன்னவரே! "சும்மா இருக்கும்" திறத்தை உணர்த்தி காட்டியவரே! இதுவே நாம் செய்யவேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய, உணர்ந்துகொள்ள வேண்டிய சிறந்த அறமாகும்!

ஈன்றவனே அன்பர் இன்னுயிர் .................... பாடல் 6

நம் உடலை தந்ததுதான் தாயும் தந்தையும்! உயிரை தருவது இறைவனே! அதனால்தான் வள்ளல் பெருமான் பரம்பொருளை ஈன்றவனே என்கிறார்!

கங்கரனேமதிக் கண்ணியனே நுதல் கண்ணினனே-பாடல் 7

கங்கரன் - கங்கையுடைய கரத்தையுடையவன். கங்கை என்றால் நீர். வற்றாத நீரையுடைய நமது கண்களே சந்திரன் - சூரியன் ஆகும். இறைவனின் திருவடியாகவும் திருக்கரங்களாகவும் விளங்குவதும் இதுவே! அனுபவ நிலையில் ஒளிக்கதிர்களே கரங்கள் எனப்பட்டது! நுதல் கண்ணினனே - கண்ணிலே இருக்கும் பொருள். வேறென்ன? ஒளிதானே! அதுதானே இறைவன்!

சின்மயனே அனல் செங்கையில் ஏந்தியசேவகனே-பாடல் 8

சின்மயனே - சின்முத்திரை குறிக்கும் கண்ணில் இருப்பவன் சின்மயன் - ஒளி! அனல் செங்கையில் ஏந்திய - நாம் தவம் செய்யும்போது நம் கண்வெள்ளை விழி சிவப்பாக மாறிவிடும்.

அந்நிலையே செங்கை சிவந்தகை என்றும், அனல் அப்போது நிரம்பி இருக்கும். அதனால்தான் அனல் ஏந்திய செங்கை எனப்பட்டது. சேவகன் யார் இறைவன்தான்! பரம்பொருளை நாடிடும் பக்தர்க்கு அவன் சேவகன் போல் எல்லாம் செய்கிறானல்லவா? நமக்கு உயிர் தந்த அந்த இறைவனே நமக்கு வேலைக் காரனாகவும் இருந்து நம்மை காத்தருள்கிறான்!

கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே-பாடல் 9

எண்ணிலடங்கா அண்டங்கள் பலவும் படைத்து அருளிய அந்த இறைவன் - பரம்பொருள் நம் மெய்யிலே - உடலிலே - மெய்ப்பொருளாக நம் கண்மணியிலே ஒளியாக துலங்குகிறான்! கண்ணிலே நின்று ஒளிர்வதால் வள்ளல்பெருமான் கண்ணியனே என்கிறார்!

ஒற்றிக்கோயிலின் மேவும் குருபரனே - பாடல் 10

நமது கண்மணியில் ஒற்றியிருக்கிறான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன்! அதனால் கண்மணி ஒற்றியூர் என்று ஆனது. திருவாகிய இறைவன் ஒற்றியிருப்பதால் திருவொற்றியூர் எனப்பட்டது. திருவொற்றியூராகிய நம் கண்மணியில் கோயில்கொண்டிருக்கும் அந்த ஜோதியே - ஒளியே - இறைவனே - பரம்பொருளே நமது குருபரன் ஆகும்! நமக்கு உயிர்தந்த பரம்பொருள் நமக்கு சேவகனாக இருக்கும் பரமாத்மாதான் நமக்கு குருவாக இருந்து நம்மை வழிநடத்துவான்!! அந்த இறைவனே - நமது உயிரே - நம் ஆத்மாவே நமக்கு உண்மை குரு!?

அந்த மெய்குருவை பெற சற்குரு வள்ளலார் அனுக்கிரகம் தேவை! அருள்புரிய காத்திருக்கிறார் வள்ளலார்! வாருங்கள்!

ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சற்குருவை பெற்றேயாக வேண்டும்! சற்குரு மூலமாக உபதேசம் தீட்சை பெற்றுத்தான் - சாதனை - தவம் செய்துதான் மெய்குருவை பெறமுடியும்! இது இறைவன் வகுத்த நியதி! சற்குரு வள்ளலார் அருள்தர காத்திருக்கிறார்! வாருங்கள்!

57. மருட்கை விண்ணப்பம்

 

57. மருட்கை விண்ணப்பம்

யாது செய்துகொன் போதுபோ கின்ற
தண்ணெ னேஉம தன்பருக் கடியேன்
கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே


மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களினால் - கருவிலே உருவாக்கப்படுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கொண்ட கண்களிலே ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் கண்மணி அனையீரே - அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும் என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும்  அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள்புரியும் இறைவா!

என்னை அடுத்த குறும்பர் அறியாமையால் வாதம் செய்கின்றனர். மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது. வேதனைப்படுகின்றேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும் வலிமை இல்லையே! என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கின்றேனே இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?

காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழ்க்கை எனும் திமிங்கலம் நம்மை விழுங்கிவிடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அருள்பொழியும் நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்ஜோதி இறைவனை சரண்புக வேண்டும் - பாடல்-3

ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய்ப் போனவினை நம்மை மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்!  - பாடல் 7

இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8

இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம் இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால் நம் கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை பற்றவேண்டும். சரணடையவேண்டும். அப்போதுதான் இறைவன் பரிபூரண அருள் கிட்டும்!
எல்லா துயரங்களிலிருந்தும் விடுபடலாம்!

சஞ்சி தந்தரும் காமம்.............................. பாடல் - 9

ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ புண்ணியமாக அவரவர்க்கே திரும்பி வருகிறது. அவை பிராரத்துவம் - ஆகாமியம் - சஞ்சிதம் என மூன்று வகைப்படும்.

சராசரி மனிதனுக்கு பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது. பிறந்து வாழ்வதில் ஆகாமியம் நடக்கிறது. அவரவர் வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவோ குறையவோ செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலேயே முடிந்து போகிறது.

ஆனால் சாமான்யன் ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று, ஞானஉபதேசம் - திருவடி தீட்சை பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுகிறான்! பிராரத்துவம் குருவருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாது ஆகிவிடும். அதன் பிறகுதான் சஞ்சிதகர்மம் வந்து தாக்கும். குருவை நாடி ஞானதீட்சை பெற்று தவம் செய்பவனுக்குதான் சஞ்சிதகர்மம்! மற்றவர்க்கில்லை! எதற்கு வருகிறது? இல்லாமலாவதற்க்குத்தான்! ஒரு கருமமும் இல்லாமல் ஆனால் தானே பிறப்பு இல்லாமல் போகும்!? இனிமேல் பிறப்பு இல்லாத நிலை என்றால்?! பிறந்த இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா? நமக்கு வேண்டுவது அதுதானே! நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கப்பெற்று வாழ்வாங்கு வாழலாம்!


-ஞான சற் குரு  சிவசெல்வராஜ் அய்யா 
www.vallalyaar.com


Sunday, 12 October 2025

திருவடி புகழ்ச்சி - 1



திருவடி புகழ்ச்சி - 1

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லது மற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்று மல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

துன்று மல வெம்மாயை யற்று - கொடியமும் மலங்களான ஆணவமலம்
கர்மமலம் இதைவிட அதிக துன்பம் தரும் மகா மாயைமலம் ஆகியன
இல்லாமலாகி! வெளிக்குள் வெளிகடந்து - நம் கண்மணி உள்ளே அகண்ட பரவெளி உள்ளது, அதுவே உள்வெளி! அந்த உள்வெளிக்குள் வெளிகடந்து!

"சும்மா இருக்கும் சுகம்" - நம் மும்மலங்கள் இல்லமலாகி நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே உள்ள பரவெளியின் எல்லையை, உள்வெளி கடந்து போகவேண்டுமானால் "சும்மா இருக்கும் சுகம்" தெரிந்திருக்க வேண்டும். சும்மா இருந்தாலே - சுகம் பேரின்பம்
கிடைக்கும்! நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்!? அது அதன் இயல்பான தன்மையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும்!
 
நீங்கள் எதாவது செய்தால் எதாவது பலன் கிட்டும்! உங்கள் செயல் -வினை அதற்க்கு தகுந்த பாவ புண்ணியத்தை கொடுக்கும்! ஏற்கனவே இருக்கின்ற வினையோடு இந்த வினையும் சேர்ந்து கொள்ளும்! கர்ம வினைகளை தீர்கிறன்றேன் என்று ஏதோ ஒரு சாதனை செய்து அறியாமல் புரியாமல் மீண்டும் மீண்டும் வினைகளை சேர்த்துக்கொள்கிறன் மனிதன்!

அதற்குத்தான் ஞானிகள்ம் எதையாவது செய்தால் எதாவது வினை வந்திடும் அல்லவா? ஒன்றும் செய்யாமல் "சும்மா இரு" என்றார்கள்! சும்மா இருப்பது எப்படி? என்பதையே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருவருட்பாவின் மூலம் நமக்கு விளக்கி அருளியுள்ளார்கள்! 

இந்த சும்மா இருக்கும் திறனை உபதேசித்து தீட்சை வழங்குவதே மிகப்பெரிய ஞான நிலையாகும்!
இப்பணியை தான் அடியேன் தொண்டாற்றுகிறேன்! வாருங்கள் சும்மா இருங்கள்! வந்தால்! இன்றே கிட்டும்! நாளைக்கு வந்தால் நாளைக்கு கிட்டும்! நாளை நாளை என நாட்களை கடத்தாதீர்! இப்படி ஒரு வாய்ப்பு உங்கள் வாழ்வில் இனி என்று வருமோ?
 
சும்மா இருக்கும் திறன் அறிந்து உணர்ந்து ஞான சாதனை செய்தால் இன்றே கிட்டும் பேரின்ப பெருவாழ்வு!

 
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

Monday, 18 January 2021

78 . நாரையும் கிளியும் நாட்டுறு தூது

                                        78 .  நாரையும்  கிளியும்  நாட்டுறு  தூது 

              கண்ணன்  நெடுநாள்  மண்ணிடந்தும் 
                        காணக்  கிடையாக்  கழலுடையார் 
              நண்ணும்  ஒற்றி  நகரார்க்கு 
                        நாராய்  சென்று  நவிற்றாயோ 
              அண்ணல்  உமது  பவனிகண்ட 
                        அன்று  முதலாய்  இன்றளவும் 
              உண்ணும்  உணவோ  டுறக்கமுநீத் 
                        துற்றாள்  என்றிவ்  வொருமொழியே 

              குரு  உபதேசம்  பெற்று  தவம்  செய்யும்  போது  கண்மணி  ஒளியை  எண்ணி  தவம் 
செய்கையில்  சிவமாகிய  ஒளி  வெளியே  நம்முன்னே  தோன்றி  மெல்லமெல்ல  நகர்ந்து  வலம் 
வருவதை  காணலாம்.  அதைக்  கண்டு  ஆனந்திக்கும்  தவசீலர்கள்  -  ஆத்மாக்கள்  அனைவரும் 
பெண்களே!  பெண்ணாகிய  ஆத்மாவாகிய  நாம்  இறைவனாகிய  -  பரமாத்மனாகிய  ஆணை  
சேர்தலே  பேரின்பம்!  அதற்குத்தான்  தவம்! 

அந்த  அழகனை  கண்டாலே  ஆனந்த  மடையும் 
பெண்ணாகிய  ஆத்மா  பின்  உண்பதோ  உறங்குவதோ  செய்யாது!  சதாகாலமும்  சிவசிந்தனையிலேயே திளைக்கும்  ஆனந்த  அனுபவம்  பெற்றால்  ஊண்  உறக்கம்  வேண்டாமே! 

அது  யாருக்கும்  கிடைக்கும்?  தேவர்களாலும்  அறிய  முடியாத  திருவடி! 
கண்ணன்  காண  முடியாத  திருவடி! நாம்  நம்  கண்ணை  நாடினால்  நமக்குகிட்டும்!  கண்ணில்  மணியில்  ஒளியான  இறைவனிடம்  நாரையே  நீ  தூது  போய்  என்  நிலை  கூறுவாய்  என்று  புனையப்பட்டது  இப்பாடல்.

77 . திருவுலாப் பேரு

                                        77 .  திருவுலாப்  பேரு 

               சீரார்  வளஞ்சேர்  ஒற்றிநகர்த் 
                       தியாகப்  பெருமான்  பவனிதனை 
               ஊரா  ருடன்சென்  றெனது  நெஞ்சம் 
                       உவகை  ஒங்கப்  பார்த்தனன்காண் 
               வாரார்  முலைக்கண்  மலைகளென 
                      வளர்ந்த  வளைகள்  தளர்ந்தனவால் 
               ஏரார்  குழலாய் என்னடிதான் 
                      இச்சை  மயமாய்  நின்றதுவே 

               அழகிய  நீண்ட  கூந்தலை  உடைய  தோழியே,  எல்லா  சிறந்த  வளங்களும்,  நிறைந்த 
திருவொற்றியூர்  உறையும்  தியாகப்பெருமான்  திருவீதியுலா  வந்தார்.  ஊராருடன்  நானும்  சென்ற  
எனது  நெஞ்சம்  மகிழ  கண்டு  களித்தேன்!  சிவத்தை  கண்ட  என்  கண்கள்  விம்மி  பூரித்து  ஆனந்தம் 
அடைந்தேன்!  அதனால்  கண்வளைகள்  தளர்ந்தன  சோர்ந்தன!  சிவத்தின்  மீதுகொண்ட  அன்பால் 
இந்நெகிழ்ச்சி  ஏற்பட்டது.

              தியாகப்  பெருமான்  பவனிவரப்  பார்த்தேன் 
                        கண்கள்  இமைத்திலகாண்  ......................... பாடல்  2

             நாம்  தவம்  செய்யும்  போது  சிவம்  -  ஒளி  வெளிப்பட்டுவிடும்.  அதை  பார்க்கலாம்!
கண்கொட்டாமல்  இமையாமல்  பார்த்துக்கொண்டே  இருக்கவேண்டும்.  இதுதான்  சாதனை!
அங்ஙனம்  சிவத்தை  பார்த்து  லயித்து  இருக்கும்போது  நாம்  புற  உலகத்தை  மறந்து  
போவோம்.  அதை  நயமாக  சொல்வதே  இப்பாடல்கள்  அனைத்தும்!


ஞான சற்குரு  சிவசெல்வராஜ் அய்யா 
திருவருட்பாமாலை 

76 . தனித்திரு மாலை

                                        76 .  தனித்திரு  மாலை 

             வன்மூட்டை  பூச்சியும்  புன்சீலைப் 
                      பேனும்தம்  வாய்க்  கொள்ளியால் 
             என்  மூட்டைத்  தேகம்  சுறுக்கிட 
                      வேசுட்  டிராமுழுதும் 
             தொன்மூட்  டையினும்  துணியினும் 
                      பாயினும்  சூழ்கின்றதோர் 
             பொன்மூட்டை  வேண்டிஎன்  செய்கேன்
                      அருள்முக்கட்  புண்ணியனே 

             இறைவா  முக்கண்ணனே  பரம்  பொருளே,  மூட்டைபூச்சி  சீலைபேன்  இவைகள்  நம் 
மூட்டைதேகத்தை  பருத்த  உடலை  கடித்து  இரத்தத்தை  உறிஞ்சுகின்றதே!  பாயிலும்  துணியிலும் 
இருந்து  நம்மை  துன்புறுத்துகின்றது  எதற்காக  தெரியுமா?  நம்  உடலுள்  இருக்கும்  உயிராகிய 
பொன்மூட்டையை  பெறும்  பொருட்டே!  இறைவா  என்செய்வேன்!

             சக்திமான்  என்பர்நின்  தன்னை  ஐயனே 
             பத்திமான்  தனக்கலால்  பகர்வ  தெங்ஙனே .....................  பாடல்  3

             இறைவா  சிவமே  நீயே  சர்வசக்தியையுடையவன்!  அதுமட்டுமல்ல  சக்தியை  இடப்பாகம் 
கொண்டவன்!  உன்  மகிமையை  பத்திமான்களுக்கு  சொன்னால்  புரிந்துகொள்வர்.  நாத்திகம் 
பேசுவர்  அறியார்.


  

Friday, 10 July 2020

75 . வடிவுடை மாணிக்கமாலை

                                            75 .  வடிவுடை  மாணிக்கமாலை 

             சீர்கொண்ட   ஒற்றிப்  பதியுடை  யானிடம்  சேர்ந்தமணி 
             வார்கொண்ட  கொங்கை  வடிவாம்  பிகைதன்  மலரடிக்குத் 
             தார்கொண்ட  செந்தமிழ்ப்  பாமாலை  சாத்தத்  தமியனுக்கே 
             ஏர்கொண்ட  நல்லருள்  ஈயும்  குணாலய  ஏரம்பனே 

             இறைவன்  நமக்கு  அருளிய  சீர்!  நமது  ஒற்றியூர்  நமது  கண்மணியில்  ஒற்றியிருக்கும்  
ஒளி!  அவன்  சிவம்  இருப்பது  வலதுகண்!  அவனோடு  சேர்ந்த மணி  -  இடதுகண்  சக்தி.  அந்த 
சக்தியின்  திருநாமம்  வடிவாம்பிகை!  வாலையின்  மற்றொரு  திருநாமம்!  மற்றொரு  கோயில்!
திருவொற்றியூர்!  வார்கொண்ட  கொங்கை  -  மறைக்கப்பட்ட  கொங்கை  -  கண்ணே  கொங்கை!
கண்மணிதுவாரம்  அடைபட்டதை  வார்கொண்ட  என்று  கூறப்பட்டது.  அந்த  தாயின்  மலரடிக்கு  
பழம்  என  கனிந்த  சுவையான  இனிமையான  செந்தமிழ்  பாமாலை  சார்த்திட,  மேல்  ஏற்றிவிட 
-  ஞானத்தில்  மேலேறிட  அருள்தாரும்  விநாயகனே!  அருள்க!

             வள்ளல்  பெருமான்  " வாலை "  தாயைப்  பற்றி  பாடிய  அருட்பாக்கள்  இவை!  வள்ளல் 
பெருமானுக்கு  அமுதூட்டிய  அன்னை!  வள்ளல்  பெருமான்  அன்னையின்  அருள்பெற்று  -  
வாலையின்  அருள்பெற்று  அப்பனின்  ஆனந்த  நடனம்  கண்டு  அருள்பெற்று  பேரானந்தம் 
எய்தினார்.

             கடலமு  தேசெங்  கரும்பே  
                     அருட்கற்  பகக்கனியே 
             உடல்உயி  ரேஉயிர்க்  குள்உணர் 
                     வேஉணர்  வுள்ஒளியே 
            அடல்விடை  யார்ஒற்றி  யார்இடங் 
                     கொண்ட  அருமருந்தே 
            மடலவிழ்  ஞான  மலரே 
                     வடிவுடை  மாணிக்கமே 

            பாற்கடலில்  கிடைத்ததுதானே  அமுதம்.  நமது  வெள்ளைவிழியே  பாற்கடல்  என்று  
சொல்வர்  ஞானியர்!  கண்ணிலிருந்து  -  தவம்  செய்து  பெறப்படும்  அமுதமே!  தவம்  செய்யும்போது 
வெள்ளைவிழி  சிவப்பாகிவிடும்.  சிவப்பேறிய,  கரும்  -  கண்மணி,  உள்ள  கண்மலர்!  சிவந்த 
கண்ணே!  தவம்  முதிர்ந்த  நிலையில்  கற்பகதருபோல  அருளை  வாரி  வழங்கும்!  நமது  உடலில் 
உள்ள  உயிரே -  கண்மணி  ஒளியே  -  இறைவனே!  உயிருக்குள்  உணர்வாய்  இருப்பவளே!  அந்த 
உணர்வுக்குள்  ஒளியாய்  இருப்பவளே!  வெற்றியை  தரும்  வெள்ளொளியின்  மேல்தோன்றும் 
ஒற்றியார் -  சிவமே!  அந்த  சிவத்தின்  இடப்பாகம்  அமர்ந்த  சக்தியே!  நீயே  கிடைத்தற்கரிய 
அருமருந்து!  பூத்த  -  விரிந்த -  மலர்ந்த  மலரே  அழகிய  ஒளிரும்  கண்ணே -  வடிவுடைமாணிக்கமே!

           கண்ணேஅக்  கண்ணின்  மணியே  மணியில்  கலந்தொளி 
                   செய்விண்ணே .................................    பாடல்  7

           கண்ணே  -  அக்கண்ணின்  மணியே  -  கண்மணியில்  மத்தியில்  ஊசிமுனை  துவாரத்தின் 
உள்  உள்ள  ஒளியே!  அவ்வொளி  அமைந்த  விண்ணே  -  ஆகாயமே!  நம்  கண்மணி  கருவிழிக்குள் 
எந்தபிடிப்புமின்றி  அந்தரத்தில்  ஆகாயத்தில்  விண்ணில்தான்  இருக்கிறது!  பூமி  எப்படி  ஆகாயத்தில் 
இருக்கிறதோ?  அதேபோல்  நம்  கண்மணியும்  உள்ளது!?  அண்டத்தில்  உள்ளவாரே  பிண்டத்திலும்!

           காமம்  படர்நெஞ்  சுடையோர்  கனவினும்  காணப்படா  ............  பாடல்  9

காமமாகிய  பேய்  பிடித்தாட்டும்  மனிதனுக்கு  கனவிலும்  காணக்கிடைக்காது  அம்பிகை 
வடிவம்!  மாயை  -  மகாமாயைதான்  காமமாதிய  துர்க்குணங்களை  வினைப்படிதந்து  நம்மை 
ஆட்டுவிக்கிறாள்!?  காமத்தை  ஆட்சி  செய்பவளே  அம்பிகைதான்!  அதனால்தான்  அவளை 
காமாட்சி  என்றனர்.  காமமில்லாத  மனிதனே  இல்லை!  காமத்திலிருந்து  எப்படி  மீள்வது?
இந்த  உலகத்திலேயே  யாருக்காவது  தாயிடம்  காமம்  வருமா?  எந்த  ஒரு  பெண்ணையும் 
தாயாக  பாருங்கள்!  அம்பிகையின்  வடிவமாக  பாருங்கள்!  அபிராமி  பட்டர்  எல்லா  பெண்ணையும் 
அபிராமியாகவே  பார்த்தார்.  அதனால்  தான்  அமாவாசை  அன்று  நிலவை  காட்டினாள்  அம்பிகை.
மகா  கவி  காளிதாசனும்,  தனக்கு  காளியருள்   கிடைக்க  காரணமான  மனைவியையே  தாய் 
என்று  அழைத்தான்.  மகாகவி  காளிதாசனுக்காகவும்  அமாவாசை  அன்று  நிலவை  காட்டினாள் 
காளித்தாய்!

            ஒரு வயது  பெண்ணையும்  அம்மாதாயே  என்றுதான்  அழைக்கணும்!  16 வயது  
பருவப்பெண்ணையும்  அம்மாதாயே  என்றுதான்  அழைக்கணும்!  எந்தப்பெண்ணையும்  அம்மா 
என்றே  பார்த்தால்,  அம்பிகையின்  அருள்கிட்டும்.  காமத்திலிருந்து  மீளலாம்!  அம்மா  தாயே  
நீயே  சரணம்  என  அம்பிகையின்  பாதத்தில்  சரணடைந்தால்!  அந்த  தாய்  இந்த  பிள்ளையை 
காத்தருள்வாள்!

            இந்த  உடலை  கொடுத்த  தாய்  தானே  நமக்கு  பாலூட்டி  சீராட்டி  வளர்ப்பாள்!  இந்த 
உடலுக்குள்  இருக்கும்  உயிர்  கொடுத்ததாய்  இறைவியே  அமுதூட்டி  உயிர்  வளர்ப்பாள்!?
பின்னர்தான்  பரம்பொருள்!  முக்திகிட்டும்!

            தாயைப்  பணியாதவன்  தறுதலையாவான்!  தாயை  பணிந்தால்!,  தாயைப்போல  நம்மை 
அரவணைப்பவர்  இவ்வுலகில்  வேறு  யார்  உளர்?!  தாயில்லாமல்  நானில்லை!  யாருமில்லை!?
தாயின்  மகத்துவம்,  பெருமை  அறிந்தவனே  ஞானம்பெறுவான்!

           திருஞான  சம்பந்தருக்கு  3  வயதில்  அமுதூட்டிய   தாய்!  வள்ளலாருக்கு  அண்ணி  உருவில் 
வந்து  அமுதூட்டியதாய்!  எல்லா  சித்தரும்  ஞானியரும்  போற்றும்  தாய்  " வாலை "!  இந்தியாவின் 
வடக்கே  காஷ்மீரிலே  வைஷ்ணவி  தேவியாய்  வாலை!  இந்தியாவின்  கிழக்கே  கல்கத்தாவில் 
காளியாய்  வாலை!  இந்தியாவின்  மேற்கே  பம்பாயில்  லட்சுமியாய்  வாலை!  இந்தியாவின் 
தெற்கே  கன்னியாகுமரியில்  கன்னியாகுமரியாய்  வாலை!  எங்கெங்குகாணினும்  சக்தியடா!
தாய்ப்பால்தானே  பிறந்த  குழந்தைக்கு  சிறந்தஉணவு!  இனி  பிறவாமலிருக்க  " வாலை "  தரும் 
அமுதம்  பருகவேண்டும்!  எல்லா  பெண்களையும்  தாயாக  பார்த்து,  வாலையை  பணிந்து 
பக்தியுடன்  தவம்  செய்தால்  கிட்டும்  வாலை  தரிசனம்!  தருவாள்  அமுதம்!  முக்தியை  தர 
சக்தியின்  அருளே  அவசியம்  தேவை!  பிறந்த  குழந்தைக்கு  தேவை  தாய்ப்பால்!  இனி 
பிறவாமலிருக்க  நமக்கு  தேவை  வாலை  அமுதம்!

           எல்லாம்  வல்ல  மகாமாயை,  அகிலாண்ட  கோடி  பிரம்மாண்ட  நாயகி,  எவ்வுயிர்க்கும் 
தாய், ஆதிசக்தி  " வாலை "  எண்ணிலா  ஊர்களில்  கோயில்  கொண்டிருந்தாலும்,  பற்பல 
பெயர்களில்  உருக்கொண்டிருந்தாலும்  வாலை  வாலையாகவே  கோயில்  கொண்ட  
புண்ணியதலம்தான்,  முக்கடலும்  சங்கமிக்கும்  இந்தியாவின்  தென்கோடிமுனையான 
கன்னியாகுமரி!

            அடியேனை  இங்கு  வரவழைத்து  வாழ்வு  தந்து  குருவாக்கி  காட்சி  தந்து  அருள்  புரிந்து 
படியளக்கும்  தாய்  கன்னியாகுமரி  " வாலை "!  இதுவரை  இவ்வுலகில்  எல்லோராலும்  மறைத்து 
இரகசியம்  என்று  சொல்லப்பட்ட  ஞானத்தை  வெட்ட  வெளிச்சமாக்கி  26  நூற்களில்  ஞானரகசியங்களை 
வெளிப்படுத்தவைத்து  வெளியிடவைத்து  என்னை  எங்களை  வாழவைத்துக்  கொண்டிருக்கிறாள் 
" வாலை "!  வாலையின்  பாதத்தில்  சரணடைந்ததால்  புண்ணியம்  பெற்றேன்!  கண்ணியனானேன்!

            அந்த  வாலைத்தாயை  நீங்களும்  காணவேண்டாமா?  வாருங்கள்  கன்னியாகுமரிக்கு!  
வாலை  அருள்பெறலாம்!  வரம்பல  பெறலாம்!  வாழ்வாங்கு  வாழலாம்!

            சித்தருக்கெல்லாம்  சித்தர்!  கல்பகோடி  காலமாக  இருக்கும்  சித்தர்!  காகபுசுண்டர்!  இந்த 
வாலையைப்பற்றி  கூறுவதை  பாருங்கள்!  

            இடப்பாக  மிருந்தவளு  மிவளே  மூலம் 
                    இருவருக்கும்  நடுவான  திவளே  மூலம் 
            தொடக்காக  நின்றவளு  மிவளே  மூலம் 
                    சூட்சமெல்லாங்  கற்றுணர்ந்த  திவளே  மூலம் 
            அடக்காக  அடக்கத்துக்  கிவளே  மூலம் 
                    ஐவருக்குங்  குருமூல  மாதி  மூலம் 
            கடக்கோடி  கற்பமதில்  நின்று  மூலம் 
                    கன்னியிவள்  சிறுவாலை  கன்னிதானே 

            கன்னியாகுமரி  எனப்பெயர்  கொண்ட  கன்னியாகுமரி  ஊரில்  கோயில்கொண்டுள்ள  இவளே 
" வாலை "!  மூலப்பரம்  பொருள்!  தாய்!  சக்தி!  நமக்கு  தவம்  செய்ய  சக்தி  வேண்டாமா?

           தாயை  பணியுங்கள்!  தயவுடன்  வாழுங்கள்!  தவம்  செய்யுங்கள்!  தங்கஜோதி  காணலாம்!
சூரியசந்திர  உதய  அஸ்தமனம்  ஒருசேர  காணும்  உலகிலேயே  உள்ள  ஒரே  இடம்  
கன்னியாகுமரி!

          எல்லா  உலகுந்  தந்த  நின்னை .............  பாடல்  12

          இந்த  பிரபஞ்சத்தையே  தந்தவள்  தாய்!  எவ்வுயிர்க்கும்  தாய்!  வடிவுடைய  மாணிக்கமாக 
அழகான  கண்ணாக  திகழ்கிறாள்!

          வினையாள்  உயிர்மல  நீக்கிமெய் 
                  வீட்டின்  விடுத்திடு  நீ ............... பாடல்  14

          நமது  உயிரை  வினையாக  மலம் -  மும்மலம்  ஆட்டிவைக்கிறது.  அதை  நீக்கி  மெய்வீட்டில் 
சேர்த்திடுவாய்  தாய்!  உயிர்மலம் -  நம்உயிரோடு  சேர்ந்து  இருக்கிறது  மலமாகிய  நம்வினைகள்!

         முத்தேவர்  விண்ணன்  முதல்  தேவர்  சித்தர்முனிவர்  

         மற்றை  எத்தேவரு  நின்னடி  நினைவார் 

         நினைக்கின்றிலர்  தாம்  செத்தேபிறக்கும்  சிறியர் ............ பாடல்   37

         மும்மூர்த்திகள்  இந்திரன்  முதலான  தேவர்கள்  சித்தர்  முனிவர்  மற்றும்  எத்தேவரும்  தாயே 
வாலையே  உன்  திருவடியை  பணிவர்!  உன்னை  நினைக்காதவர்கள்  செத்து  பிறக்கும்  சிரியரே!

         முக்திபெற  வேண்டின்  வாலையருள்  வேண்டும்!  தேவரும்  மூவரும்  சித்தர்  முனிவோரும் 
வணங்குகிறார்கள்  என்றால்  எவ்வளவு  மேலான  நிலை!  அற்ப  பதரான  நாம்  உயர்வு  பெற 
வேண்டுமானால்  வாலையை  பணிந்து  அருள்பெற்று  அமுதம்  அருந்தியே  ஆக  வேண்டும்!
வாலையை  பணியவில்லை  எனில்  முக்தி  கிடையாது!?

         திருநாள்  நினைந்தொழும்  நன்னாள் 
         தொழாமல்  செலுத்திய  நாள்  கருநாள் ................. பாடல்  38

         தாயை -  வாலையை  நினைந்து  வணங்கும்  நாள்தான்  நல்லநாள்  திருநாள்  ஆகும்.  தாயை 
தொழாத  நாள்கருநாள்  துன்பம்தரும்நாள்.

         வாணாள்  அடைவர்  வறுமை 
                 யுறார்நன்  மனைமக்கள்பொன் 
         பூணாள்  இடம்புகழ்  போதம் 
                 பெறுவர்பின்  புன்மைஒன்றும் 
         காணார்நின்  நாமம்  கருதுகின் 
                 றோர்ஒற்றிக்  கண்ணுதல்பால் 
         மாணார்வம்  உற்ற  மயிலே 
                  வடிவுடை   மாணிக்கமே ..................  பாடல்   39

         ஒற்றி  கண்ணுதல்  பால்  மாணார்வம்  உற்றமயிலே  வடிவுடை  மாணிக்கமே  -  நம் 
கண்மணியில்  ஒற்றியிருக்கும்  ஒளியை  சார்ந்து  பேரார்வத்துடன்  தவம்  செய்தால்  நம்  இடது 
கண்  ஒளி  பலவர்ண  ஒளியுடன்  காட்சி  தரும்!  அழகான  ஒளிரும்  கண்ணே  -  இடது  கண்ணே 
தாய்ஸ்தானம்.  அந்த  தாயை  எப்போதும்  கருத்தில்  வைத்து  தவம்  செய்வோர்  வாழ்நாள் 
நீடிக்கும்  நீண்ட  காலம்  வாழ்வர்!  அவர்  வாழ்க்கையில்  வறுமை  தலைகாட்டாது!  நல்லமனைவியும் 
பிள்ளைகளும்  இறைவன்  அருளால்  அமைவர்.  தேவைக்கு  எப்போதும்  பொண்  பணம்  கிட்டும்!
நல்ல  அடியார்கள்  அன்பர்கள்  கிடைப்பர்!  பெரும்  பேரும்  புகழும்  பெறுவர்!  எல்லோராலும்  
போற்றப்படுவார்!  இருக்க  வீடு  அமையும்!  எப்போதும்  போதம் -  உணர்வு  பெற்றே  இருப்பர்.
மெய்யுணர்வு  எப்போதும்  இருக்கும்!  மெய்யுணர்வு  இருக்கும்வரை  ஒரு  துன்பமும்  வராது!

        தாயை  தொழுபவர்களுக்கு  சகல  சம்பத்தும்  கிடைக்கும்.  வாழ்வாங்கு  வாழ்வர்.   

           கதியே  கதிவழி  காட்டுங்கண்ணே ..........................  பாடல்  75

           மனிதனாக  பிறந்த  நாம்  அடையவேண்டிய,  சேரவேண்டிய  நற்கதி  இறைவன்  திருவடியே!
நாம்  பெறவேண்டிய  நல்லகதி  -  முக்தியடைவது  அதற்குமுன்  நாம்  இறைவன்  திருவடியை  
சரணடைய  வேண்டும்.  அந்த  இறைவன்  திருவடியை  -  முக்தி  பேற்றையடைய  வழிகாட்டுவது 
நமது  கண்ணே!  நமது  கண்மணியின்  மத்தியில்  ஊசிமுனையளவு  சிரியதுவாரம்  உள்ளது 
அது  மெல்லிய  சவ்வால்  மூடப்பட்டுள்ளது.  அதன்  உள்ளே  இறைவனே  ஜோதியாக  இருக்கிறான்.
கண்ணே  வழிகாட்டி!  விழிகாட்ட  வினை  தீரும்  பேரின்பம்  கிட்டும்.

           கற்பதும்  கேட்பதும்  எல்லாம்  நின்  அற்புதக்  கஞ்சமலர்ப்  
                   பொற்பதம்  காணும்  பொருட்டு ...................  பாடல்  90

           வேதபுராண  இதிகாசங்கள்  மற்றுள்ள  ஞானநூற்களை  கற்பதும்  அவற்றின்  உபதேசங்களை 
கேட்பதும்  எல்லாம்,  தாயாக  இருந்து  அமுதூட்டும்  உலகன்னை  தூய  பொற்பாதம்  சேரவே!