Saturday, 27 June 2026

61. பழமொழி மேல் வைத்துப்பரிவு கூர்தல்

61. பழமொழி மேல் வைத்துப்பரிவு கூர்தல்

வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல்
வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான்
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன்
உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய்
மானை நோக்கிய நோக்குடை மலையான்
மகிழ் மன்றீடை மாநடம் புரிவோய்
தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய்
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே

சக்தியாய் இடக்கண்ணிலும் சிவமாய் வலக்கண்ணிலும் ஒளிநடம் புரிகின்றது! நம் கண்மணியில் ஒளியாக துலங்குவன் பேரொளியாகி உள்புகுந்தால் தேன்போன்ற அமுதம் கிட்டும். இந்த நிலையை அறிந்து உணர்ந்து தவம் செய்பவன் உய்வான்! இரட்சிக்கப்படுவான்!
இறைவனின் அருள்ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவன் வாழ்வான்!
அதைவிட்டு உலகபொருட்கண்மீது ஆசைப்பட்டு மாயையில் மயங்கி திரிபவன் உருப்படவே மாட்டான்! அப்படிப்பட்டவன் யார் என்றால்?” வானை நோக்கி மண்வழிநடப்பவன்” என வள்ளல் பெருமான் கூறுகிறார்!

இதையே “கண்பார்த்து கால் நடாவாவிட்டால் இடரேயுறும்” என ஞானியர் கூறுவர்.
இதன்புறப்பொருள் நாம் நடக்கும்போது பார்த்து போக வேண்டும். பத்திரமாக போய் சேரலாம். அகப்பொருள் ஞானம் என்னவென்றால் கண்மணி ஒளியை பார்த்து நினைந்து உணர்ந்து தவம் செய்தால் இறைவன் திருவடி - கால் - ஒளி உள்நடந்து மூன்றாவது கண்ணாகிய அக்னி கலையை அடையும். அப்படித்தென்றால் முக்தி! இல்லையெனில் இடர் மரணம் வந்து விடும். “பொருளைப்பற்றி அருளை நாடு!”

வாயிலான் பெருவழக்குரைப்பது போல .......... பாடல் 2

வாய் இல்லாதவன் அதாவது ஊமை அவன்குறையை எப்படி யாரிடம் கூற முடியும்? அதுபோல இறைவனை உணராது எப்படி தவம் செய்வது? முதலில் நல்ல ஒரு குருவை நாடி இறைவனை மெய்ப்பொருளை உபதேசம் பெற்று தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யவேண்டும். பின்னரே இறையனுபவம் மட்டுமல்ல எல்லா நிலையும் அறியலாம்! எல்லாமும் கிட்டும்! “ஊமை கண்ட கனவுபோல” என்றும் கூறுவர். ஊமை தான்கண்ட கனவை எப்படி பிறருக்கு கூறமுடியாதோ அதுபோல குருவை பெறாதவன் உபதேசம் பெறாதவன் தீட்சை பெறாதவன் சொல்லும்!?

இங்கு வள்ளல் பெருமான் நமக்கு ஞானவிளக்கமும் கூறுகிறார். வாயிலான் - இறைவன் இருக்கும் கோயிலின் வாயிலில் - வாசலில் நம் கண்மணியாகிய கோயில் வாசலில் இருப்பது வினைகளை சுமந்து நிற்கும் நாம் தானே!? நாம் நம் வினை தீர இறைவனிடம் தானே முறையிட வேண்டும்? நம் கண்மணி வாசலில் நின்று உள் இருக்கும் இறைவனிடம் முறையிட்டால், அருள் மயமான இறைவன் நம் குறைநீக்கி காத்தருள்வான்! இறைவன் திருவடியில் அன்பில்லாதவன் எப்படி அவன் அருளை பெற முடியும்? “அன்பே சிவம்”. அன்பு மயமானவனே இறையருள் பெறுவான்!

வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல
மெய்ய நின் இரு மென்மலர்ப் பதத்தில்
பக்தி இன்றியே முத்தியை விழைந்தேன் ... பாடல் 3

மெய்யிலே - நம் உடலிலே இருப்பதால் இறைவனை வள்ளல் பெருமான் மெய்ய என்றார். மெய்யனான இறைவனின் இரு மென்மையான மலர்போன்ற பதம் - பாதமே நம் இரு கண்மலர் - கண்மணி. அதில் துலங்கும் ஒளியின்மீது நமக்கு பக்தி இல்லாவிட்டால் எங்ஙனம் முக்தி கிட்டும். வித்து இல்லாமல் ஒன்றும் விளையாது இது புறப்பொருள். வித்தை இன்றியே விளைத்திடுபவன் என்பது எந்த ஒரு வித்தையும் அறியாதவன் - நம்மெய்ப்பொருளிலே - கண்மணி ஒளியிலே நினைந்து உணர்ந்து செயல் வித்தை செய்யத்தெரியவில்லை எனில் எங்ஙனம் முக்தி விளையும்? தவம் செய்யும் வித்தை தெரிந்தால்தான் முக்தி கிடைக்கும் என்கிறார் வள்ளலார். வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை என்பர் ஆன்றோர், நமக்கு முக்தி கிட்ட, மேலே போக பரவெளியை அடைய குருவருள்தான் வித்து! குருவிடம் இருந்து பெறும் தீட்சைதான் - குருபோடும் வித்து!? அந்த வித்தை முளைவிடச்செய்து ஞானப்பயிராக வளர்க்க வேண்டியதே நாம் செய்யும் தவமாகும்! வித்து போடுபவரை நாடுக! உங்களுக்கு முக்தி விளையும் நிலமாகட்டும்!.

கலம் இலாது வான்கடல் கடப்பவன்போல் - பாடல் 4

வள்ளல்பெருமான் கூறியதை நன்கு கவனியுங்கள். மரக்கலம் தான் கடலை கடக்க உதவும். “வான்கடல்” என்றுதான் வள்ளலார் கூறுகிறார். உலக பொருளை கூறவில்லை! சம்சார சாகரத்தை - பிறவிப் பெருங்கடலை கடக்க இறைவன் திருவடியாகிய கலம் ஏறவேண்டும்!? அதுமரக்கலம் அல்ல! மெய்கலம்! தோணிபோல் காணுமடா அந்தவீடு என்று சித்தர் கூறுவது! நம் கண்கள்தான்! தோணியப்பர் என்று சீர்காழியிலே கோயில் கொண்ட இறைவன் திருநாமம்! இருப்பது தோணிபோல் காணும் நம் கண்ணிலே இருக்கும் சிவமாகிய ஒளிதான்!? நம் கண் ஆகிய கலத்தில் உட்கார்ந்து தான் வான்கடல் கடக்கமுடியும்!

இன்றைய விஞ்ஞான உலகில் விண்கலம் - ராக்கெட் மூலம்தானே வான்கடல் பயணம் செய்கிறார்கள்! என்றைக்குமே மெய்ஞ்ஞானம் கூறுவது இறைவன் திருவடியாகிய நம் கண்ணாகிய கலம் மூலமாகத்தான் வான்கடல் கடந்து பரமாத்மாவை அடைய முடியும்!? வான்வெளியில் பரவெளியில் சஞ்சரிப்பவனே பரதேசி! நாமும் பரதேசியாவோம்! பரம்பொருளை அடைவோம்!

மலம் இலாத நல் வழியிடை நடப்போர்
மனத்துள் மேவிய மாமணிச் சுடரே ..... பாடல் - 4

மலம் இலாத நல்வழியில் நடப்போர் - மும்மலமும் அண்டாத இருக்கின்ற மும்மலங்களும் அற்றுப்போகும் நல்ல வழிதான், இறைவன் திருவடியை அடைந்து தவம்செய்யும் ஒப்பற்ற வழியாகும்! மலம் இல்லாதவன் விமலன்! அது இறைவன்தான்! நாமெல்லாம் மலம் உள்ளவர்களே! நம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நம் உடலெல்லாம் அழுக்கே! மலமே! மலமற்றுபோக வேண்டுமானால் மலமற்ற - மலம் அண்டாத விமலனை - இறைவனை - திருவடியை - நம் கண்மணி ஒளியை பற்றவேண்டும். அதுவே நல்லவழி! அந்த விமலன் தங்கிய மாமணி - கண்மணி சுடரை மனதில் நிறுத்தினாலே நல்லவழி நடக்க இயலும்! உலகெங்கும் குப்பை கூழங்களும் மலமும்தான். நம் உடலெங்கும் அசுத்தம்தான் அழுக்குதான். உலகில் இறைவன் மட்டுமே தூய்மையானவன்! தூய்மையான அந்த இறைவன் நம் உடலிலே தூய்மையான ஒரே இடமான நம் கண்மணியிலேதான் குடியிருக்கிறார்!?

போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப்பவன் ........... பாடல் 5

கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளத்தில் பொன்னை புதைத்து வைக்க முடியுமா? ஆற்றிலே வெள்ளம் இல்லாதபோது பொன் புதைப்பவனும் முட்டாளே! ஆற்றங்கரையிலே, அமைதியான இடத்திலேதான் எதையும் வைத்து பயன்பெற இயலும். நம் வினைகளால் மனம் ஓயாது ஓடிக்கொண்டே இருக்கின்றது. கடல் அலைபோல சலித்துக்கொண்டே இருப்பதுதான் நம் மனம்! அப்படிப்பட்ட மனதில் எப்படி இறைவனை எண்ண முடியும்? உணர்வது?

மனமானது வினை உள்ளளவும் இருக்கும்! செயல்பட்டுக் கொண்டேயிருக்கும்! ஆற்றுவெள்ளத்தில் எதிர்நீச்சல் போடமுடியாது! நிற்கவும் முடியாது! அதன் போக்கிலேயே போய் கரையேறவேண்டியதுதான்! ஓடிக்கொண்டிருக்கும் மனதை இறைவன் திருவடியில் ஓடச் செய்வதே புத்தி சாலித்தனம். நம் கண்மணியில் மனதை நிறுத்தி பழக பழக ஓடும் பொல்லாத மனம் ஒருநாள் அடங்கும். வேகம் குறைந்து இறைவன் திருவடியாகிய நம் கண்மணி ஒளியில் நின்று விடும்! குருமூலம் கண்மணியில் உணர்வை தீட்சை பெற்றவன் பழகி பழகி தவம்செய்து தவம்செய்து உணர்வை பெருக்கி ஒளியை பெருக்கி மனதை இல்லாமலாக்கிவிடுவான்? எத்துன்பமும் வராது காப்பாற்றப்படுவான்!

ஓட உன்னியே உறங்குகின்றவன் ............. பாடல் 6

ஓட எத்தனிக்காமல் ஓட நினைத்து உறங்கிவிட்டவன் வெற்றிபெற போவதில்லை. துன்பம் அடைவான். இங்கு வள்ளல்பெருமான் கூறுவது யாதெனில், ஒளி உள்ளே ஓட வேண்டும்! நாம் செய்யும் தவம் - ஒளி உணர்வு உன்னி உன்னி உள்ளே அகத்திலே - அகமுகமாக ஓட வேண்டும்! அங்ஙனம் உன்னி அகவழிபாடாக கண்மணி ஒளி உள்ளே ஓடும்படி தவம் செய்பவன் புறச்செயல் ஏதுமின்றி உறங்குகின்றவன் போல் காணப்படுவான்! அகத்தின் நிலையை புறத்திலே மற்றவர் அறியமாட்டார்! உறங்குவது போல் - தூங்குவது போல் தூங்காமல் இருப்பது இதுதான்!? “தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்” என சித்தர் கூறும்நிலை இதுவே! உள்ளே ஒளி எப்படி ஓடும்? நம் இரு கண்மணியினுள்ளும் இரு நாடி சென்று உள்ளே அக்னி கலையில் - மூன்றாவது கண்ணான இடத்தில் இணைகிறது!

இருகண் உள்நாடிவழியாக ஒளி தவத்தால் பெருகி நெருப்பாறு பாயும்! இரு நாடிகளே மயிர்பாலம் எனப்படும்! மயிர்பாலம் வழி நெருப்பு ஆறு பாம்புபோல செல்லும்! அதைத்தான் வெண்சாரை என்றனர் சித்தர் பெருமக்கள். தூங்காமல் தூங்கவெண்சாரை ஓட உன்னி உன்னி தவம் செய்ய குரு மூலமாக திருவடியில் உணர்வை பெறுவதே திருவடி தீட்சை! உலக இச்சையை விட்டு குருதீட்சை பெறுக!

முதல் இல்லாமல் ஊதியம் பெறவிழையும் .............. பாடல் 7

முதல் போடாமல் வியாபாரம் செய்ய முடியாது. எக்காரியமும் நடக்காது! ஒன்றும் கிட்டாது. இந்த உலகத்திலேயே முதலாவது எது இறைவன் தானே! ஆதி என்றும் கொள்ளலாம்! எல்லாவற்றுக்கும் மூலமானது என்றும் கொள்ளலாம்! எது இல்லாமல் ஒன்றும் இல்லையோ? அதுவே மூலம்! முதல்! ஆதி! அது இறைவன்! எங்குமானவன் நம் கண்மணியிலும் ஒளியாக இருக்கிறான்அல்லவா? இந்த பிறவிக்கு முதல் - வித்து - உயிர் இறைவனல்லவா? அந்த முதலைவைத்துத்தானே இந்த பிறப்பு இறப்பு எனும் வியாபாரம் நடக்கிறது? இதிலலாபம் புண்ணியம்! நஷ்டம் பாவம்! நாமெல்லாம் இந்த வியாபாரம் தான் செய்கிறோம்! லாபமோ நஷ்டமோ - பாவமோ புண்ணியமோ சேர்ந்து விடுகிறது! தவிர்க்க முடியாது?!

முதல் இல்லாமல் - உயிர் இல்லாமல், உயிரை வைத்து வினைசெயல்படாமல் கவனமாக பார்த்து தவம் செய்து ஊதியமாக முக்தியை பெறுவதே சாமர்த்தியமாகும்!? முதலை வைத்து - உயிரை வைத்து ஊதியமாக மீண்டும் மீண்டும் வினைகளை சம்பாதிக்காமல் செயல் அற்று சும்மா இருப்பதே சாமர்த்தியமாகும்! சும்மா இருந்தால்தான் செயல் நடக்காது! செயல் இல்லாது போனால்தான் வினை உருவாகாது! வினை உருவாகாது போனாலே முக்தி கிட்டும்!?

சிந்தையை நிறுத்தி செயலற்று சும்மா இருக்கும் திறத்தை குருவினடி பணிந்து உபதேசம் தீட்சை பெற்று தவம்செய்க ஊதியம் பெறுக!?

கல்லை உந்திவான் நதி கடப்பவர் ..... பாடல் 8

கல்லை தெப்பமாக கொண்டு கரைசேர முடியாதல்லவா? உலகத்தில் முடியாததெல்லாம் அருளாளர்கள் வாழ்வில் இறையருளால் நடந்துள்ளது! திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் ஆழ்த்தினான் கொடியவன் ஒருவன். நமச்சிவாயமாகிய கண்மணி ஒளியைப்பற்றி கல்லை மிதக்கச் செய்து தெப்பமாக்கி கரைசேர்ந்தார். இது சரித்திரம்! நடந்த உண்மை?!

இறைவன் திருவடியை சரணடைந்தால் எதுவும் நடக்கும்! “எல்லாம் செயல்கூடும்” என வள்ளல் பெருமான் கூறுகிறார்? இங்கே வள்ளல்பெருமான் கூறுவது தியான அனுபவம் கல் என கூறியது மனதை “நெஞ்சக்கன கல்லும்” என அருணகிரிநாதரும் கூறுகிறார். நமது நெஞ்சம் அஞ்சு பூதமும் ஒருமித்த இடம்! ஐம்பொறிகளும் கூடும் இடம்! அஞ்சும் இணைந்த இடமே நெஞ்சு! அது நமது கண் அல்லவா?! நமது நெஞ்சமாகிய கண்ணில் கல்போல இருப்பது நம் வினையாகிய திரை! மும்மலம் நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்து உருக - கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து தவம் செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கல்போன்ற மனமும் கரைய ஆரம்பித்து விடும்! அந்நிலை வரவேண்டும். வளர வேண்டும். அந்த கல்லான மனம் இருக்கும் கண்மணியை உந்தி உந்தி உள்முகமாக வான் - பரவெளி நதியாகிய ஒளிவெள்ளம் கடந்து போக வேண்டும். இதுதான் சாதனை! தவம்! தவம் செய்ய குருவை நாடு!

நெய்யினால் சுடு நெருப்பவிப்பவன் ............... பாடல் 9

எரிகின்ற நெருப்பில் நெய்யை ஊற்றினால் அது மேலும் கொழுந்துவிட்டெரியும். இதுபுறப்பொருள். நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முடியாது. நீரை ஊற்றித்தான் நெருப்பை அணைக்க முடியும். ஆனால் வள்ளல் பெருமான்கூறும் ஞானம் என்ன என்று பார்க்கலாமா?! உலகத்தில் உள்ளதற்கு நேர்மாறாக உள்ளதே நம் ஞான அனுபவம். நம்கண்மணியில் உள்ள ஒளி இருப்பது நீரில்!? நீர்மேல் நெருப்பாக நின்றிலங்குகிறான் இறைவன்! கண்கருவிழியினுள் பிராணநீரில் தான் கண்மணி ஒளி துலங்குகிறது. சித்தர் பெருமக்கள் கூறும் ஞான இரகசியம் இது! சாதாரண நெருப்பு நீரில் அணைந்துவிடும். நம் கண்மணி உள் ஒளி எல்லாம் வல்ல அந்த பரம்பொருளின் பேரொளியின் ஒருதுளி!? இந்த கண்மணி ஒளி எதாலும் யாராலும் அழிக்கமுடியாத தண்ணொளி!? சாட்சாத் இறைவனே! நம் கண்மணி ஒளியை குருதீட்சை மூலம் உணர்ந்து தவம் செய்யச் செய்ய ஒளிபெருகும்.

பெருநெருப்பு ஆறுபோல் பாயும்! வெண்சாரைபாம்பு போல் உள்ளே ஊர்ந்து சென்று அக்னி கலையை அடையும்! இருகண் ஒளியான சூரிய சந்திரஒளி அக்னியோடு சேர்ந்து மேலும் பெரு நெருப்பாகும்! ஓங்கிவளரும் நெருப்பு மேலேறும் உச்சிக்கு போகும். நம் சகஸ்ரதளமாகிய சிரநடு உச்சியில் 
ஒளிவர வர அங்கு சேர்ந்திருக்கும் அமுதம் அதுதான் நெய்சொட்டு சொட்டாக நம் தொண்டையில் வரும்! 

எந்த நாடி வழியாக ஒளி மேலேறுமோ அதே நாடி வழியாக நெய் - அமுதம் வழியும்போது சுடுநெருப்பு அவிந்து போகும். குளிர்ச்சி பொருந்திய நெருப்பாகி விடும்! சுடும் நெருப்பல்ல!? நாம் நீரிலே அரிசியை கொட்டி பானையில் வைத்து அடியிலே நெருப்பை மூட்டி சமைப்பதுபோல, சூரியசந்திர அக்னி ஆகிய மூன்று நெருப்பைகூட்டி எழுப்பி உறைந்த அமுதத்தை இளகச்செய்து பருகுவதோடு சுடுநெருப்பு சுகநெருப்பாகி விடும்!? இதுவே ஞான அனுபவம்! 

இதுதான் நெய்யால் சுடுநெருப்பை அவிப்பதாகும்!? இங்கு நெய் அமுதம் அவிப்பது வேகவைப்பது அணைப்பதல்ல! வள்ளல்பெருமான் இதுபோன்ற ஞான இரகசியங்களை எல்லோரும் அறிய அடியேனை எழுத வைத்திருக்கிறார். அருள் வள்ளல் அல்லவா? எல்லோரும் அருள் பெறவேண்டும்! உணரவேண்டும்! மரணமிலா பெருவாழ்வு பெறவேண்டும் என்பதே அவர் எண்ணம்! குளிர்ச்சிபொருந்திய தாமரை திருவடிகளாகிய நம் கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்க! பொன்னடி - தங்கஜோதியை காணலாம்!

நீர் சொரிந்தொளி விளக்கெரிப்பவன்........ பாடல் 10

தண்ணீர் ஊற்றி விளக்கு எரிக்க முடியுமா? திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வாழ்க்கையில் அந்த அதிசயமும் நிகழ்ந்தது! வடலூர் அருகில் கருங்குழி என்னும் ஊரில் வள்ளலார் இருந்தபோது ஒருநாள் இரவு எண்ணெய எனக்கருதி தண்ணீரை ஊற்றியே விளக்கு எரித்தார்! பெருமான் கைபட்ட நீரில் ஜோதி சுடர்விட்டு பிரகாசித்தது! மறுநாள் வீட்டுக்காரர் வந்து கூறிய பிறகுதான் விளக்கில் இருந்ததும் ஊற்றியதும் தண்ணீரே என அறிந்தார் வள்ளல் பெருமான்! தன் அடியவர் - தன்பிள்ளை பாட்டெழுத ஊறுவரக்கூடாது என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இரவு முழுவதும் தண்ணீரிலே விளக்கெரிய வைத்தார்! வள்ளல்பெருமான் மீது இறைவன் கொண்ட அருள்திறத்தை என்னென்பது?! 

அதிசயம்! அற்புதம்! திருவருட்பா எழுத திருவருளே துணை நின்றது! இது புறத்தே நடந்த நிகழ்ச்சி. வள்ளல்பெருமான் நீர் சொரிந்து விளக்கெரிப்பது ஞான அனுபவம், தவம். குருவை பெற்று திருவடி தீட்சைபெற்று தவம் செய்யும் போது - நினைந்து - உணர்ந்து - நெகிழும் போது நம் கண்களில் இருந்து நீர் - கண்ணீர் சொரியும். அருவி எனகொட்டும். கண்ணில் உணர்வு பெருகப்பெருக கண்சிவந்து கோவை பழம்போலாகி நீரை சொரியும்! அதேசமயம் கண்மணி உள்ஒளி கொஞ்சங்கொஞ்சமாக பெருகும்! கண்ணீர் சொரிய கண்ஒளி பெருகும் தவம் இதுவே! வெளியே நீர்சொரியும் உள்ளே ஒளி பெருகும். இதுவே வள்ளலார் நமக்கு உரைக்கும் ஞானம்.

60. திருவருட் கிரங்கல்



60. திருவருட் கிரங்கல்

ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில் என்
அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும்
தப்பா தகமலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற
இப்பா தகத்தேன் இரங்கினால் ஆகாதோ

நம் கண்மணியான ஒற்றியில் துலங்கும் ஒளிக்கு ஒப்பாக யாருமே கிடையாது?!
உயர்ந்த உத்தமனான இறைவனின் பொன்னடிகளே இதுவாகும்!
அந்த அம்மையப்பனான இறைவனை சரண்புகுந்தால் மட்டுமே நாம் தப்பிக்கலாம்!
அதை விடுத்து எல்லா படுபாதகங்களையும் செய்து மனம் சஞ்சலமடைந்து
உலகாரால் பாதகன் கிராதகன் என தூற்றப்பட்டால் அவன் வாழ்ந்து என்ன பயன்?

பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றார் செய்தபெருங்குற்றமும்
குணமாகக் கொள்ளும் குணக்கடலே ........ பாடல் 3

செழுந்தமிழால் பாடுகின்றார் அதில் ஆழ்ந்து போனால் இறைவன் திருவடியை அறிவர்!
பற்றி விடுவர்! ஏனெனில், “தமிழ் அதி விரைவில் சுத்த சிவஅனுபூதியை நல்கவல்லது!”
வள்ளல் பெருமான் உரைத்த பொன்னான வாசகம் இது!

தமிழில் புலமை பெற்று பாடல் புனைவோர் மெய்ப்பொருளை விரைவில் உணர வாய்ப்புண்டு! தெய்வத்தமிழை கற்றறிந்தோர் சற்று ஆன்மீக நாட்டம் கொள்வாரேல், தமிழ் கடலில் புதைந்து கிடக்கும் இறைநிலை அறிவர்! - உணர்வர்! - உய்வர்! அகர உகரமான எட்டிரண்டை கண்மணி ஒளியை பார்த்து பேரின்பம் பெறலாம்! அவ்வழி செல்வோர் செய்பாவமனைத்தும் பகலவனை கண்ட பனிபோல மறையச் செய்து அருள்புரிவான் பரமாத்மா!

எல்லோரும் பாடல் புனைய முடியுமா? உள்ளத்தில், கருத்தில் உதிக்கும் சொற்களை கோர்க்க தனித்திறமை வேண்டும்! அவனருள் வேண்டும்! அப்படிப்பட்டவன் வாய் திறந்தால் வருவது அனைத்தும் கவிதையே! கம்பன்  பாடல் சொற்கள் சிலவற்றுக்கு கலைமகளே பொருள் சொன்னாளல்லவா? தமிழ்சங்கம் கண்ட மதுரைக்கு சிவனே வந்து கவிபுனைந்தாரல்லவா? தமிழின் பெருமையை தெய்வத்தன்மையை சொல்லில் வடிக்க முடியுமா என்ன?!

தவம் செய்வோர் சிந்தனை, சொல், செயல் எல்லாமே பரம்பொருளை சுற்றியே இருப்பதால் சொல் அலங்காரமாகிவிடும்! சிந்தனை ஒளியாகி அறிவு துலங்கும்! செயல் கருணை மயமாகும்! பாடுவார்! ஆடுவார்! பேரானந்த பெருவாழ்வு பெறுவார்!

சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே........ பாடல் 7

சத்தியாகிய தாய் வாலை அருள்பெற்றுத்தான், அமுதம் உண்டுதான் பரமாத்மாவை அடைய முடியும்! அமுதம் தருவள்தான் வாலை! சித்தர்கள் அனைவரும் வாலைத்தாயை போற்றி வணங்குகின்றனரே! உண்மை உணர்ந்தவர்கள்! அந்த வாலை கோயில் கொண்ட தலம்தான் கன்னியாகுமரி! கடல்கோடி கற்பமதில் நின்று தவம் செய்யும் குழந்தை, என்றும் கன்னி! அவள்தான் வாலை! கன்னியாகுமரி பகவதியம்மன்! வாருங்கள் குமரிக்கு வாலை அருள்பெற! இந்த வாலை அருள் நம் தியான அனுபவத்தில் கிட்டும். எப்போது தெரியுமா? நாதததலங்கடந்த பின்னார்தான்!

நம் கண்மணி ஒளியில் லயித்து தவம் செய்கையில் உள்காயல் ஒளியுபெருகி நாதத்தொனி கேட்கும்! ஒலியொளி அனுபவம் பலவற்றிற்கு வாலை அருளால் அமுதம் கிட்டும்! அமுதமும் சாப்பிட்டானேரே அருட்பெருஞ்ஜோதி தரிசனம்! “நாதமுடிவில் நல்லாள் இருப்பிடம்” என வாலையை பற்றி குறிப்பிடுவர் சித்தர் பெருமக்கள். வள்ளல் பெருமானும் அவ்வாறே கூறியிருக்கிறார்.

கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
எண்ணும் கணமும் விடுத்தேடாத இன்னமுதே - பாடல் 10

கண்ணுள் மணியாக அதன் உள் ஒளியாக இறைவன் இருப்பதை கருதி தவம் செய்பவரே நல்லவர்கள்! அப்படிப்பட்டவர்களை விட்டு ஒரு கணப்பொழுதும் பிரியாமல் இருந்து அருள் புரிவான் இறைவன்! உயிர்க்கு உற்ற துணையவனே! “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க” என மணிவாசகர் திருவாசக சூற்றை நோக்குக!.

-ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா 

59. திருக்காட்சிக்கு இரங்கல்



59. திருக்காட்சிக்கு இரங்கல்

மண்ணோயும் வாழ்க்கையிடை மாறாது வன்பிணியால்
புண்ணோயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யடியனேன்
கண்ணோயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
கண்ணே உன்தன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே

உலக வாழ்க்கையில், மாயையில் சிக்கி சிறுத்து தீராத நோயால் துன்புற்று நெஞ்சம் புண்பட்டு வேதனையால் துயரப்படுபவர் புழுவில் மண்ணில் தான் போய் சேருவர். இதிலிருந்து விடுபட நம் இரண்டு கண்களில் துலங்கும் ஒளியாகிய இறைவனின் பொன் முகத்தை தவம் செய்து காணவேண்டும். காணாவிடில்! ஒளியை கண்டவர் திகைத்து வார்த்தையும் கேட்பர்! இன்பத்தை - பேரின்பத்தை தரும் பரஞ்சுடர் - பரமாத்மா நம் இரண்டு கண்களிலும் உள்ளார்!

அருள் ஆனந்த மூக்கனைக் கண்டேனே - பாடல் 2

நம் இருகண்களில் துலங்கும் ஒளியை எண்ணி உணர்ந்து தவம் செய்தால் உள்ளே உள்ளே அக்கினியை உணர்வு பெறும் - ஒளிபெருகும் - துலங்கும். ஆகவே நமது மூன்றாவது கண்!? அருள மயமான முக்கண்சிவம்  பெற்ற பிள்ளையல்லவா நாம்? நமக்கும் மூன்று கண்தான்! தெரிகின்ற இருகண் ஒளியை பெருக்கினால் - சுழித்தால் மூன்றாவது கண் துலங்கும்!?

தாயானவனே என் தந்தையுமாய் அன்புஅதனைச் சேயாய் வளர்க்கும் சிவனே .......... பாடல் - 4

இறைவனே நமக்கு உயிர்தந்தவன் ஆதலால் தாய்! நம்மை வளர்த்து கருவிலே உருவாக்குபவர் அதனால் தந்தை! தாயும் அவனே! தந்தையும் அவனே! அதனால் தான் ஞானியர் இறைவனை “அம்மையப்பன்” என்றழைத்தனர்.

யார் அவனை - சிவனை உணர்ந்து சரணடைகிறார்களோ? அவர்களை சேயாய் பிள்ளையைப்போல் போற்றி பாதுகாத்து வளர்த்து ஆளாக்குவான்!

உடலை தந்த தாய் தந்தையும் அழிந்து விடுவர்! நம் உடலும் அழிந்துவிடும்! இறைவனை உயிர்தந்த அம்மையப்பனை சரணடைந்தால் உடலும் அழியாது! உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையுடைய உடலும் பெறும்!? இதைத்தான் வள்ளல்பெருமான் உரைக்கின்றார்.

உயிர்தந்த தாயும் தந்தையும் குருவுமான இறைவனை அருட்பெருஞ்ஜோதியை உணர்பவனே முக்தியடைகிறான்! மரணமிலா பெருவாழ்வு பெறுகிறான்! ஞானியாகிறான்! சித்தனாகிறான்!

கண்ணும் கருத்தும் களிக்கவைக்கும் கற்பகமே ....... பாடல் 6

இறைவன் தான் கற்பகம்! எல்லாந்தரும் பரம்பொருள்! அருள்மழை பொழியும் அருட்பெருஞ்ஜோதி! அவனை நினைத்து தவம் செய்தால் நம் கண்கள் களிப்படையும் வண்ணம், ஆனந்த பரவசநிலை, பேரின்பம் கிட்டும். எண்ணமெல்லாம் அந்த சிவமே

ஒளியே துலங்குவதால் கருத்தில் வேறுஒன்றுமில்லாமல் அதிலும் பரவச நிலை கூடும்! சிந்தனை பார்வை எல்லாமே ஒளிமயமாகும்! பார்க்குமிடம் எங்கும் நீக்கமற எங்கும் ஒளிவெள்ளமாக பரம்பொருளாக காணலாம்! மகிழலாம்!

முக்திக்குவித்தே நின்பொன்னடிக்கீழ் மேவிநிற்க .. பாடல் 9

உலக மாயையில் மயங்காமல், இறைவா உன் பொற்பாதம் சரணடைவதே என் கடன் என யார் தம் மெய்ப்பொருளில் - தன் கண்மணி ஒளியான - இறைவன் திருவடி நிழலில் தங்குகின்றனரோ அவரே முக்தியை அடைவர்! இறைவன் திருவடியாகிய தம் கண்மணி ஒளியில் யார் சரண்புகுகின்றார்களோ! அவரே புத்திசாலி!? இதுவே முக்திக்கு வழி! முக்திக்கு வித்து! இறைவன் பொன்னடி! நம் கண்மணி!

Friday, 26 June 2026

58. கொடை மட விண்ணப்பம்

58. கொடை மட விண்ணப்பம்

நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே

அம்பலத்தே நடஞ்செய்மின் போன்ற வேணியனே - நாம் எல்லோரும் அறிய அம்பலமாக நம் கண்மணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஒளியானவனே! அதிலிருந்து தோன்றும் ஒளிக்கதிர்கள் மின்னலைபோல உள்ளன. அது சிவனின் சடை போல இருக்கிறது! ஒற்றிமேவிய வேதியனே - நம் உடலில் கண்மணியில் ஒன்றியிருக்கும் ஒளியே! வேதங்கள் உரைக்கும் இறைவனே - ஜோதியானவனே - வேதியனே! உன் போன்ற தெய்வம் வேறில்லை. உன் பொன்னான திருவடிகளே எனக்குத்துணை! ஞானத்தை தரும்! இறைவா போற்றுகிறேன் - பணிகிறேன். அருள்புரிக இந்த ஏழைக்கும்!.

மலம் மாற்றுகின்ற விண்ணவனே........................ பாடல் 3

நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் உள் இருக்கும் ஒளியாகிய பரம்பொருளை பற்றி நாம் தவம் செய்தால், நம் உள்ஒளி பெருகி ஊசிமுனை துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் திரையை - மும்மலங்களை எரித்து இல்லாமல் செய்து விடும்! நம் கண்மணியின் உள்பகுதியே விண் - ஆகாயம். விண்ணில் ஒளியாக துலங்குபவனை விண்ணவனே என்றார் வள்ளல் பெருமான்!

அன்று நால்வர்க்கும் யோகமுறை அறந்தான்சொன்னவனே - பாடல் - 5

ஆதியில், முதல்குருவாக தட்சிணா மூர்த்தியாக தோன்றிய பரம்பொருளே! சனகாதி முனிவர் நால்வர்க்கும் ஞானோபதேசம் சொல்லாமல் சொன்னவரே! "சும்மா இருக்கும்" திறத்தை உணர்த்தி காட்டியவரே! இதுவே நாம் செய்யவேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய, உணர்ந்துகொள்ள வேண்டிய சிறந்த அறமாகும்!

ஈன்றவனே அன்பர் இன்னுயிர் .................... பாடல் 6

நம் உடலை தந்ததுதான் தாயும் தந்தையும்! உயிரை தருவது இறைவனே! அதனால்தான் வள்ளல் பெருமான் பரம்பொருளை ஈன்றவனே என்கிறார்!

கங்கரனேமதிக் கண்ணியனே நுதல் கண்ணினனே-பாடல் 7

கங்கரன் - கங்கையுடைய கரத்தையுடையவன். கங்கை என்றால் நீர். வற்றாத நீரையுடைய நமது கண்களே சந்திரன் - சூரியன் ஆகும். இறைவனின் திருவடியாகவும் திருக்கரங்களாகவும் விளங்குவதும் இதுவே! அனுபவ நிலையில் ஒளிக்கதிர்களே கரங்கள் எனப்பட்டது! நுதல் கண்ணினனே - கண்ணிலே இருக்கும் பொருள். வேறென்ன? ஒளிதானே! அதுதானே இறைவன்!

சின்மயனே அனல் செங்கையில் ஏந்தியசேவகனே-பாடல் 8

சின்மயனே - சின்முத்திரை குறிக்கும் கண்ணில் இருப்பவன் சின்மயன் - ஒளி! அனல் செங்கையில் ஏந்திய - நாம் தவம் செய்யும்போது நம் கண்வெள்ளை விழி சிவப்பாக மாறிவிடும்.

அந்நிலையே செங்கை சிவந்தகை என்றும், அனல் அப்போது நிரம்பி இருக்கும். அதனால்தான் அனல் ஏந்திய செங்கை எனப்பட்டது. சேவகன் யார் இறைவன்தான்! பரம்பொருளை நாடிடும் பக்தர்க்கு அவன் சேவகன் போல் எல்லாம் செய்கிறானல்லவா? நமக்கு உயிர் தந்த அந்த இறைவனே நமக்கு வேலைக் காரனாகவும் இருந்து நம்மை காத்தருள்கிறான்!

கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே-பாடல் 9

எண்ணிலடங்கா அண்டங்கள் பலவும் படைத்து அருளிய அந்த இறைவன் - பரம்பொருள் நம் மெய்யிலே - உடலிலே - மெய்ப்பொருளாக நம் கண்மணியிலே ஒளியாக துலங்குகிறான்! கண்ணிலே நின்று ஒளிர்வதால் வள்ளல்பெருமான் கண்ணியனே என்கிறார்!

ஒற்றிக்கோயிலின் மேவும் குருபரனே - பாடல் 10

நமது கண்மணியில் ஒற்றியிருக்கிறான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன்! அதனால் கண்மணி ஒற்றியூர் என்று ஆனது. திருவாகிய இறைவன் ஒற்றியிருப்பதால் திருவொற்றியூர் எனப்பட்டது. திருவொற்றியூராகிய நம் கண்மணியில் கோயில்கொண்டிருக்கும் அந்த ஜோதியே - ஒளியே - இறைவனே - பரம்பொருளே நமது குருபரன் ஆகும்! நமக்கு உயிர்தந்த பரம்பொருள் நமக்கு சேவகனாக இருக்கும் பரமாத்மாதான் நமக்கு குருவாக இருந்து நம்மை வழிநடத்துவான்!! அந்த இறைவனே - நமது உயிரே - நம் ஆத்மாவே நமக்கு உண்மை குரு!?

அந்த மெய்குருவை பெற சற்குரு வள்ளலார் அனுக்கிரகம் தேவை! அருள்புரிய காத்திருக்கிறார் வள்ளலார்! வாருங்கள்!

ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சற்குருவை பெற்றேயாக வேண்டும்! சற்குரு மூலமாக உபதேசம் தீட்சை பெற்றுத்தான் - சாதனை - தவம் செய்துதான் மெய்குருவை பெறமுடியும்! இது இறைவன் வகுத்த நியதி! சற்குரு வள்ளலார் அருள்தர காத்திருக்கிறார்! வாருங்கள்!

57. மருட்கை விண்ணப்பம்

 

57. மருட்கை விண்ணப்பம்

யாது செய்துகொன் போதுபோ கின்ற
தண்ணெ னேஉம தன்பருக் கடியேன்
கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே


மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களினால் - கருவிலே உருவாக்கப்படுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கொண்ட கண்களிலே ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் கண்மணி அனையீரே - அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும் என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும்  அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள்புரியும் இறைவா!

என்னை அடுத்த குறும்பர் அறியாமையால் வாதம் செய்கின்றனர். மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது. வேதனைப்படுகின்றேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும் வலிமை இல்லையே! என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கின்றேனே இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?

காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழ்க்கை எனும் திமிங்கலம் நம்மை விழுங்கிவிடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அருள்பொழியும் நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்ஜோதி இறைவனை சரண்புக வேண்டும் - பாடல்-3

ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய்ப் போனவினை நம்மை மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்!  - பாடல் 7

இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8

இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம் இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால் நம் கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை பற்றவேண்டும். சரணடையவேண்டும். அப்போதுதான் இறைவன் பரிபூரண அருள் கிட்டும்!
எல்லா துயரங்களிலிருந்தும் விடுபடலாம்!

சஞ்சி தந்தரும் காமம்.............................. பாடல் - 9

ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ புண்ணியமாக அவரவர்க்கே திரும்பி வருகிறது. அவை பிராரத்துவம் - ஆகாமியம் - சஞ்சிதம் என மூன்று வகைப்படும்.

சராசரி மனிதனுக்கு பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது. பிறந்து வாழ்வதில் ஆகாமியம் நடக்கிறது. அவரவர் வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவோ குறையவோ செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலேயே முடிந்து போகிறது.

ஆனால் சாமான்யன் ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று, ஞானஉபதேசம் - திருவடி தீட்சை பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுகிறான்! பிராரத்துவம் குருவருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாது ஆகிவிடும். அதன் பிறகுதான் சஞ்சிதகர்மம் வந்து தாக்கும். குருவை நாடி ஞானதீட்சை பெற்று தவம் செய்பவனுக்குதான் சஞ்சிதகர்மம்! மற்றவர்க்கில்லை! எதற்கு வருகிறது? இல்லாமலாவதற்க்குத்தான்! ஒரு கருமமும் இல்லாமல் ஆனால் தானே பிறப்பு இல்லாமல் போகும்!? இனிமேல் பிறப்பு இல்லாத நிலை என்றால்?! பிறந்த இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா? நமக்கு வேண்டுவது அதுதானே! நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கப்பெற்று வாழ்வாங்கு வாழலாம்!


-ஞான சற் குரு  சிவசெல்வராஜ் அய்யா 
www.vallalyaar.com


Sunday, 12 October 2025

திருவடி புகழ்ச்சி - 1



திருவடி புகழ்ச்சி - 1

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லது மற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்று மல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

துன்று மல வெம்மாயை யற்று - கொடியமும் மலங்களான ஆணவமலம்
கர்மமலம் இதைவிட அதிக துன்பம் தரும் மகா மாயைமலம் ஆகியன
இல்லாமலாகி! வெளிக்குள் வெளிகடந்து - நம் கண்மணி உள்ளே அகண்ட பரவெளி உள்ளது, அதுவே உள்வெளி! அந்த உள்வெளிக்குள் வெளிகடந்து!

"சும்மா இருக்கும் சுகம்" - நம் மும்மலங்கள் இல்லமலாகி நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே உள்ள பரவெளியின் எல்லையை, உள்வெளி கடந்து போகவேண்டுமானால் "சும்மா இருக்கும் சுகம்" தெரிந்திருக்க வேண்டும். சும்மா இருந்தாலே - சுகம் பேரின்பம்
கிடைக்கும்! நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்!? அது அதன் இயல்பான தன்மையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும்!
 
நீங்கள் எதாவது செய்தால் எதாவது பலன் கிட்டும்! உங்கள் செயல் -வினை அதற்க்கு தகுந்த பாவ புண்ணியத்தை கொடுக்கும்! ஏற்கனவே இருக்கின்ற வினையோடு இந்த வினையும் சேர்ந்து கொள்ளும்! கர்ம வினைகளை தீர்கிறன்றேன் என்று ஏதோ ஒரு சாதனை செய்து அறியாமல் புரியாமல் மீண்டும் மீண்டும் வினைகளை சேர்த்துக்கொள்கிறன் மனிதன்!

அதற்குத்தான் ஞானிகள்ம் எதையாவது செய்தால் எதாவது வினை வந்திடும் அல்லவா? ஒன்றும் செய்யாமல் "சும்மா இரு" என்றார்கள்! சும்மா இருப்பது எப்படி? என்பதையே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருவருட்பாவின் மூலம் நமக்கு விளக்கி அருளியுள்ளார்கள்! 

இந்த சும்மா இருக்கும் திறனை உபதேசித்து தீட்சை வழங்குவதே மிகப்பெரிய ஞான நிலையாகும்!
இப்பணியை தான் அடியேன் தொண்டாற்றுகிறேன்! வாருங்கள் சும்மா இருங்கள்! வந்தால்! இன்றே கிட்டும்! நாளைக்கு வந்தால் நாளைக்கு கிட்டும்! நாளை நாளை என நாட்களை கடத்தாதீர்! இப்படி ஒரு வாய்ப்பு உங்கள் வாழ்வில் இனி என்று வருமோ?
 
சும்மா இருக்கும் திறன் அறிந்து உணர்ந்து ஞான சாதனை செய்தால் இன்றே கிட்டும் பேரின்ப பெருவாழ்வு!

 
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

Monday, 18 January 2021

78 . நாரையும் கிளியும் நாட்டுறு தூது

                                        78 .  நாரையும்  கிளியும்  நாட்டுறு  தூது 

              கண்ணன்  நெடுநாள்  மண்ணிடந்தும் 
                        காணக்  கிடையாக்  கழலுடையார் 
              நண்ணும்  ஒற்றி  நகரார்க்கு 
                        நாராய்  சென்று  நவிற்றாயோ 
              அண்ணல்  உமது  பவனிகண்ட 
                        அன்று  முதலாய்  இன்றளவும் 
              உண்ணும்  உணவோ  டுறக்கமுநீத் 
                        துற்றாள்  என்றிவ்  வொருமொழியே 

              குரு  உபதேசம்  பெற்று  தவம்  செய்யும்  போது  கண்மணி  ஒளியை  எண்ணி  தவம் 
செய்கையில்  சிவமாகிய  ஒளி  வெளியே  நம்முன்னே  தோன்றி  மெல்லமெல்ல  நகர்ந்து  வலம் 
வருவதை  காணலாம்.  அதைக்  கண்டு  ஆனந்திக்கும்  தவசீலர்கள்  -  ஆத்மாக்கள்  அனைவரும் 
பெண்களே!  பெண்ணாகிய  ஆத்மாவாகிய  நாம்  இறைவனாகிய  -  பரமாத்மனாகிய  ஆணை  
சேர்தலே  பேரின்பம்!  அதற்குத்தான்  தவம்! 

அந்த  அழகனை  கண்டாலே  ஆனந்த  மடையும் 
பெண்ணாகிய  ஆத்மா  பின்  உண்பதோ  உறங்குவதோ  செய்யாது!  சதாகாலமும்  சிவசிந்தனையிலேயே திளைக்கும்  ஆனந்த  அனுபவம்  பெற்றால்  ஊண்  உறக்கம்  வேண்டாமே! 

அது  யாருக்கும்  கிடைக்கும்?  தேவர்களாலும்  அறிய  முடியாத  திருவடி! 
கண்ணன்  காண  முடியாத  திருவடி! நாம்  நம்  கண்ணை  நாடினால்  நமக்குகிட்டும்!  கண்ணில்  மணியில்  ஒளியான  இறைவனிடம்  நாரையே  நீ  தூது  போய்  என்  நிலை  கூறுவாய்  என்று  புனையப்பட்டது  இப்பாடல்.