Saturday 17 September 2016

இரந்த விண்ணப்பம் - 2

விடையி லேறிய சிவ பரஞ் சுடருளே
விளங்கிய வொளிக் குன்றே - பாடல் 2

விடையிலேறிய சிவபரஞ்சுடர் - விடை - நந்தி நம் தீ - ஆத்ம ஜோதி
அதன் மேல் இருப்பதே அருட்பெருஞ்ஜோதியாகிய சிவம் - ஒளி - பேரொளி.
அந்த சிவஜோதிக்குள் உள்ள ஒளி மலையே தணிகை மலை - நம் கண்மலை
கண்மணி ஒளி.

ஊழும் நீக்குறும் தணிகையெம் மண்ணலே
உயர் திருவருட் டேனே - பாடல் 6

ஊழும் நீங்கும் - நாம் செய்த ஊழ் வினையாவும்
நம் தணிகையான கண்மணியுள் ஒளிரும் உயர்வான பெருஞ்சோதியின்
வடிவமே தேன் போன்று இன்பம் தரும் முத்தியின்பம் தரும் தெய்வமே
- உன்னை பற்றிட நீங்குமே!

நன்று நின்றிருச் சித்தமென் பாக்கியம்
நற்றிணிகை யிற் தேவே - பாடல் 8

தெய்வமே என் நல்ல தணிகையான கண்மணியில் துலங்கும்
ஜோதியே! எல்லாம் நல்லதாக நடக்கும் எப்படி? திருவடியே
சரணம் என்றிருந்தால்! இறை சித்தம் - இறைவன் ஆக்கினைப்படி
எல்லாம் சிறப்பாக நடக்கும் அதுவே நாம் செய்த பெரும் பாக்கியம்
திருவடியே கதி என இருப்பதே பெருநிலை.

தணிகையங் கடவுளே சரவணபவ கோவே - பாடல் 9
நம் குற்றங்கள் வினைகள் யாவும் தணியும் இடம் இல்லாதது ஆகும் இடம்
நம் கண்மணி! அங்குள்ளே ஒளிர்விட்டு பிரகாசிப்பவன் முருகன். அவன் தான்
சரவண பவ தெய்வம்.

ச் + அ = ச
ர் + அ =ர 
வ் + அ = வ
ண் + அ = ண
ப் + அ = ப
வ் + அ = வ

சரவண பவ ஆறு எழுத்திலும் மறைந்து நிற்பது 'அ' என்பதே.
இந்த அ  தான் கண்ணினுள் மணிஒளி. எட்டு என்றதமிழ் எண்.
வலது கண் சரவண பவ தெய்வம் - அ. தெய்வம் , ஆறு - அ .
தெய்வம். ஆறுமுகம். ஒரு கண்  3 வட்டம்  2 கண் 6 வட்டம்.
இருகண்ணும் தான் ஆறுமுகம் எனப்பட்டது. இரு கண்ணும் காணும்
- ஆறுமுகங்காணும். சிவ ஜோதியின் முன் வருவது இந்த அகர ஜோதி
தவம் செய்வார்  காணும் முதல் அனுபவம்.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

No comments:

Post a Comment