Monday 5 September 2016

எண்ணப்பத்து


அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு
வடிகளை யன்போடும்
பணிகிலே னகமுருகி நின் றாடிலேன்
பாடிலேன் மனமாயை
தனிக்கிலேன் றிருத் தணிகையை நினைக்கிலென்
சாமிநின்  வழிபோகத்
துணிகிலே னிருந்தென் செய்தேன் பாவியேன்
துன்பமும் எஞ்சேனே

திருவாகிய இறைவன் ஒளியானவன் இருக்கும் தணிகையை -
குற்றம் தணியும் கை இரு கண்ணை நினைக்கவில்லையே!
வேல் கொண்ட முச்சுடர் ஒன்றான உன் திருவடிகளை அன்போடு
பணியவில்லையே! மனமுருகி மனம் இருக்கும் இடம் கண் -
கண்ணீர் பெருக்கி உருகி பாடி ஆடவில்லையே! மனமானது
மாயையால் அலை கழிக்கப்படுவதிலிருந்து மீண்டும் தணியும் கையை
மாயையால் அலைக்கழிக்கப் படுவதிலிருந்து மீண்டும் தணியும்
கையை தணிகையை பற்றவில்லையே! சாமி - ஒளியே - அருட்பெருஞ்ஜோதியே உன்வழியே - விழிவழியே உள் உள் போக துணியவில்லையே! என் செய்வேன்
எத்துன்பம் எங்கனம் தீரும்!

நின் காலை பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு
கண் கழிப்பேனோ - பாடல் 2


இறைவா உன் கால் - திருவடி - என்இருகண் நான் பிடித்தால் நீ
கருணை செய்வாயே, என் கண் ஒளியை நான் பற்றற்ற நீ என்னை
பற்றிக் கொள்வாயே! அதை - உன் ஒளி அழகை நான் கண்ணார கண்டு களிப்பேனே!

மயிலின் மீது வந்தருள்தரும் நின் திருவரவு கயிலை
நேர் திருத்தணிகையம்பதி  - பாடல் 4

நான் கண் மணியில் - திருவடியில் - நினைவை நிலை நிறுத்தும் போது முருகன் - அழகான பலவர்ண ஒளியாக காட்சி தருவான்.

திருத்தணிகை மலை கயிலை மலையே திருவாகிய சிவம் நம் குற்றம்
தணிகையில் வெளிப்படும். சிவம் இருக்கும் மலை தானே கயிலை -
திருக்கை லாயம்.

குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும்
குறிக்கரும் பெருவாழ்வே
தணிகையம் பதியில் வாழ்தேவே  பாடல் -8

என் குற்றம் தணிந்த என் இரு கண்ணில் வாழும் ஒளி தெய்வமே
நீயே கண்ணனும் முக்கண்ணனான சிவன் - கண்ணனும் கிருஷ்ணமணியான
திருமால் - பிரமனும் வினைகளை உருவாக்கும் படைத்தோன் ஆகவும்
விளங்குகிறாய். நம் கண்மணியே சிவன் விஷ்னு பிரம்மாவாகியே
சிவலிங்கம். கண்ணே - கட்டி முடிக்காத சிவலிங்கம்.

No comments:

Post a Comment