Friday 31 March 2017

2.26 நெஞ்சோடு நெகிழதல்


சீர்தரு வார்புகழ்ப் பேர்தரு
வார் அருள் தேன்தருவார்
ஊர்தரு வார்மதி யுந்தரு
வார்கதி யுந்தருவார்
ஏர்தரு வார்தரு வார்ஒற்றி
யூர்எம் இறைவாஅன்றி
யார்தரு வார்நெஞ்ச மேஇங்கும்
அங்கும் இயம்புகவே

ஒற்றியூர் ஆகிய நம் கண்மணியை எண்ணி தவம்
செய்தால் சீர்-கண்மணியை ஒளியை தருவார்! காணலாம்.
கண்ணிலே கண்ணாலே! பேர்புகழ் எல்லாம் கிட்டும்
இவ்வுலகம் போற்றும்! நமக்கு உள் அமுதம் கிட்டும்!
ஊரும் பேரும் பெறலாம். நல்வாழ்வு பெறலாம், நல்ல
அறிவு ஞானம் பெறலாம். நற்கதி - பரகதி மரணமிலா
பெருவாழ்வு தருவார்! இதையெல்லாம் தரக்கூடியது
நம்மில் இருக்கும் இறைவனே! அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவனே!

துரிய நிலை அனுபவத்தை - பாடல் 9

நம் கண்மணி ஒளியில் மனதை நிலை நிறுத்தி தவம் செய்யும்
போது ஏற்படும் அனுபவம் ஐந்து! சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி,
துரியம், துரியாதீதம் எனப்படும், நம் கண்மணி சுழற்சி வேகம் தான்
இந்த அனுபவம்! துரிய நிலையில் கிடைக்கும் ஒளிக்காட்சியை
எங்குமான சோதி நம்முள் திகழ்வதை காணலாம்!

மூவாத முதலாய் சுத்த நன்னிலைக்கு
நிலையாய் பசுபதி - பாடல் 10

நம் கண்மணியே நாம் தாயில் கருவில் இருக்கும்போது
உருவான முதல் உறுப்பு! பிறந்தது முதல் 100 வயது ஆனாலும்
முதிர்ச்சியடையாதது!வளராதது! என்றும் உள்ளது. உலகில் உள்ள
700 கோடி மக்களுக்கும் ஒருபோல இருப்பது கண்மணியே! நமக்கு
நல்ல நிலையை பரகதியை தருவது கண்மணி ஒளி! அதுவே
- பசுபதி - பசு என்றால் ஜீவன். ஜீவனின் பதி பரம்பொருள். பசுபதி
இருப்பது நம் ஜீவனான கண்மணியிலேயே!

சண்முகத் தெம்பெருமானை ஐங்கரனை
நடராஜத் தம்பிரானை உண்முகத்தில் கருதி
அனுபவமாய் இருக்கிலை - பாடல் 11

சண்முக மான ஆறுமுகத்தை இரு கண்களை, ஐந்து கரங்கொண்ட
விநாயகன் - கண்மணியை, அதில் நடமிடும் ஓளியான நடராஜனை
காண்பதே உண்மை அனுபவம்! புறத்தே தேடாதே! உண்முகமாய்
அகத்தே நாடுவாய்! காண்பாய்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்


No comments:

Post a Comment