Saturday 18 March 2017

2.19. தியாக வண்ணப்பதிகம்



காரார் குழலாள் உமையோ லயில்வேல்
காளையொ டுந்தான் அமர்கின்ற
ஏரார் கோலம் கண்டு களிப்பான்
என்னும் எமக்கொன் றருளானேல்
நீரார் சடைமேல் பிறையொன் றுடையான்
நிதிக்கோன் தோழன் எனநின்றான்
பேரார் ஒற்றி யூரான் தியாகப்
பெருமான் பிச்சை பெருமானே


உமையம்மையும் முருகனும் சிவனும் சேர்ந்துதான் இருக்கும்
கோலம் காணக் கண் கோடிவேண்டும். "சோமாஸ்கந்தர்" என்ற மூர்த்தம்
கோவில்களில் பார்த்திருப்போம்! சிவனைப்பிடிக்க சக்தியோடு இருந்து
தவம் செய்தால் முதலில் வருவான் முருகன்! நம் கண்மணி உள் ஒளியான
சிவத்தை பிடிக்க, நாம் விடாது உறுதியுடன் வைராக்கியத்துடன்  தவம்
செய்யவேண்டும். அப்படி தவம் செய்தால் முதலில் நம் இருகண்களும்
காணும். ஆறுமுகம் காணும். அந்த தத்துவம் தான் சோமாஸ்கந்தர். அந்த
சோமாஸ்கந்தர் இருக்கும் இடம் கண் கண்ணீர் சொரியும்-அதுதான் கங்கை!
சந்திர கலை உடையது. அவன் - சிவன் நம் கண்களில் இருப்பவன்
பிச்சை பெருமான்! எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி இட்ட பிச்சை
தான் கண்மணி ஒளியான பிச்சை பெருமான்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment