Sunday 2 April 2017

2.28 நாள் அவத்து அலைசல்


இன்றிருந் தவரை நாளைஇவ் வுலகில்
இருந்திட கண்டிலேன் ஆஆ
என்றிருந்த தவத்தோர் அரற்றுகின் றனரால்
ஏழையேன் உண்டுடுத் தவமே
சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால்
செய்வன செய்கிலன் அந்தோ
மன்றிந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே
வள்ளலே ஒற்றியூர் வாழ்வே


இன்று இருக்கும் நாம், இப்போது இருக்கும் நாம்
அடுத்த ஒருமணி நேரத்திற்குள் என்ன ஆவோமோ?
இருப்போமா? யார் அறிவார்! இருக்கிற கொஞ்ச காலத்தில்
நல்லதை எண்ணி நல்லதை சொல்லி நல்லபடியாக வாழ்ந்தால்!
நிம்மதி கிட்டும் தம்மதி பெருகும். வாழ்வாங்கு வாழலாம்!
அதை விடுத்து கண்டதே காட்சி கொண்டதே கோலம்
என உண்பதும் உடுத்துவதும் உறங்குவதுமாக வீணில்
காலத்தை கழிப்பதால் ஒரு பயனுமில்லை! எல்லோருக்கும்
அம்பலமாக திருவாகிய இறைவன் அவரவர் கண்மணியில்
ஒற்றியிருப்பதை குருமூலம் உணர்ந்து உபதேசம் தீட்சை பெற்று
தவம் செய்தால் பெறலாம். முக்தி இன்பம்! மரணமிலா பெருவாழ்வு!

நீரின்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து
நிலைப்படா உடம்பினை - பாடல் 3


தண்ணீரில் எழுதும் எழுத்து எவ்வளவு விரைவில் இல்லாது
போய்விடுமோ அதைவிட இந்த உடம்பு வேகமாக அழிந்து விடும்!
உயிர் பிரிந்து விடும்! உயிர் பிரியாது, உடல் அழியாது இருக்க
என்றும் நிலைக்க இறைவன் நம்முள் ஒளியாக துலங்குவதை
அறிந்து உணருங்கள்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment