Tuesday 28 March 2017

2.23 நமச்சிவாய சங்கீர்த்தன லகரி


சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கோடு தோன்றிய துணையைக்
கல்அ  வாவிய ஏழையேன் நெஞ்சம்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைக்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறை பொருளை
நமச்சிவாயத்தை நான்மாற வேனே


திருவொற்றித்தேன் - கண்மணி ஒளி, தில்லை சிற்றம்பலத்தாடும்
நல்ல வாழ்வு - சிற்றம்பலம் - சின்ன அம்பலம் ஒளியாகிய சிவம்
ஆடும் சிறிய அம்பலம் நம் கண்மணி ஒளி. எங்குமான ஒளி
சிற்றம்பலத்திலும் நம் கண்மணியிலும் உள்ளது! நான்கு வேதங்களும்
சொல்வது உண்மைப்பொருள் கண்மணி ஒளி! நமச்சிவாயம் -
பஞ்சபூதத்தை குறிப்பதே நமச்சிவய என பஞ்சாட்சரம். பஞ்சபூதம்
ஒருசேர இருக்கும் இடம் கண்மணி அதை நாம் மறக்கவே கூடாது!
எப்போது மனதில் எண்ணி உணர்ந்து நெகிழவேண்டும். நெஞ்ச கனகல்லை
உருக்குவதும் நமச்சிவாயமே - கண்மணி ஒளியே! தொண்டர்களுக்கு
துணையாவது கண்மணி சிவமே!

அட்ட  மூர்த்தமாகிய பொருளே - பாடல் 2

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் சூரியன் சந்திரன் அக்னி எனும்
எட்டு நிலையும் கூடிய பொருள்! இரு கண்களும் ஒளியால் ஒன்றினால்
தோன்றும் பொருள்! அட்டம் என்றால் எட்டு! தமிழில் 'அ' அவாகிய  கண்ணாகிய
பொருளே எனப்படும்.

No comments:

Post a Comment