Saturday 18 March 2017

2.20 திருவடிச் சரண் புகல்


ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
வாடல் நெஞ்சமே வருதி என் னுடனே
மகிழ்ந்து நாம் இரு வரும் சென்று மகிழ்வாய்க்
கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
கோயில் மேவி நம் குடிமுழு தாளச்
தாள்த லந்தரும் நம்தருள் செல்வத்
தந்தை யார்அடி சரண்புக லாமே


எங்கும் ஓடாதீர்! நமக்கு என்ன குறை! நமக்கு உறுதுணையாக
யாரும் இல்லையே என வருந்த வேண்டாம்! என்னுடன் வருக!
நாம் இருவரும் மகிழ்வுடன் ஒற்றியூர் உள்துலங்கும் நம் குடி
முழுவதும் ஆண்டு கொண்டிருக்கும் இறைவனை சரணடைவோம்!
அவன் திருவடியை சரணடைந்தால் இறைவனின் பாதமே கதி என
இருந்தால் எல்லா நலமும் பெறலாம்! அந்த ஒளியோடு இறைவனோடு
கூடி மகிழலாம்!

நாம் குருவோடு சேர்ந்து தான் இறைவனை அடையமுடியும் என்பதை
வள்ளல் பெருமான் அழகாக வலியுறுத்துகிறார்! தானே அழைத்து போகிறேன்
என்கிறார்! என்னோடு வருக நாம் இருவரும் சென்று இறைவனை அடையலாம்  என்பது, வள்ளல் பெருமான் குருவாக இருந்து நம்மை இறைவனிடம் சேர்ப்பிப்பர் என்பதே "குரு அருளின்றி திருவருள் கிட்டாது" நமக்கு சற்குரு வள்ளல் பெருமானே!

வேண்டியது யாவையும் உனக்கு வாங்கி
ஈகுவேன் ஒன்றுக்கும் அஞ்சேல் - பாடல் 2

நாம் வள்ளல் பெருமானை குருவென சரணடைந்தால் நமக்கு
வேண்டியதெல்லாம் தருவார்! எதற்கும் பயப்பட வேண்டியதில்லை!
திருவடியை சரணடைக!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment