Monday 27 March 2017

2.22 ஸ்ரீசிவ சண்முகநாம சங்கீர்த்தனலகிரி



பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
பொழுது போகின்ற தொழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேதிக்
தொழுது சண்முக சிவ சிவ என நம்
தோன்ற லார்தமைக் துதித்தவர் திருமுன்
பழுது சொல்லுதல் ஐயுறல் என்மேல்
ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே!

குற்றமே புரியும் வஞ்சகரிடம் போய் உதவி கேட்பது பயனிலாது
போகும். நமக்கு வேண்டியதை நம் குறைகளை நம் ஒற்றியூரான
நம் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து அழுது தொழுது
விண்ணப்பித்தால் நடக்கும்! நம்முள் இருப்பது சாட்சாத் அந்த
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தானே! இறைவன் அருள் கண்டிப்பாக
கிட்டும் என வள்ளல் பெருமான் தன்மீது ஆணையிட்டு கூறுகிறார்.
சந்தேகமே வேண்டாம் இறையருள் கிட்டும்!

No comments:

Post a Comment