Saturday 11 March 2017

2.14 அறிவரும் பெருமை


நாயினும் கடையேன் என்செய்வேன் பிணியால்
நலிகின்ற நல்வினை அறிந்தும்
தாயினும் இனியாய் இன்னுநீ வரவு
தாழ்த்தனை என்கொலென் றறியேன்

மாயினும் அல்லால் வாழினும் நினது
மலரடி அன்றிஒன் றெத்தேன்
காயினும் என்னைக் கனியினும் நின்னைக்
கனவினும் விட்டிடேன் காணே

மனிதனாக பிறந்த நாம், நம்முள் இருக்கும் நம் கண்
மணிஒளியை - இறைவனின் திருமலரடியை - திருவடியை
பணிவது ஒன்றையே செயலாக - நம்  தவமாக கொண்டால்
இறைவன் நாம் எவ்வளவு கீழானவனாக இருந்தாலும் எவ்வளவு
துன்பத்தில் ஆழ்பவனாக இருந்தாலும், நம் மனம் கல்லாக இருந்தாலும்
இறைவன் நம்மை தடுத்து - காத்து அருள்வான்! கருணையே
வடிவாக கொண்டவனல்லவா ஜோதியான இறைவன்!


காண்பது கருதி மாலொடு மலர்வாழ்
கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பது மாறி வேறுரு எடுத்தும்
வள்ளல் நின் உரு அறிந்திலே  - பாடல் 2


இறைவனை காண வேண்டுமென, திருமால் பன்றி உருவெடுத்து
அதல பாதாளம் போனார் காண வில்லை! பிரம்மன் அன்னபட்சியாக
உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை!
இது கதை!?

நம் உடம்பில், யோகம் - தவம் செய்கிறேன் என்று பலர் மூலாதாரத்தை நாடி
குய்யத்திற்கு குதத்திற்கும் மத்திய பகுதியில் நினைவை நிறுத்தியோ,
பிராணாயாமம் செய்தோ இன்னும் பல வழிகளிலும் தவம் செய்வர்.
அங்கே காண முடியாது இறைவனை!

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் பன்றி உருவெடுத்தார் என்பதும்
யாதெனின்!, பன்றி தானே மலம் சாப்பிடும்? நம் கண் வெள்ளை விழியே
பாற்கடல்! அதில் பள்ளி கொண்டவன் கண்மணியான கருமை நிற கண்ணன்!

அவன் அங்குள்ள நம் மும்மலங்களை சாப்பிட்டு நம்மை மலமற்றவர்களாக நிமலனாக மாற்றுவார்! கண்ணனை பிடித்தால் காலனை வெல்லலாம்!

இன்னும் சிலர் நம் உடல் சிரசில் மேல் நினைவை நிறுத்தி தவம் செய்வர்! பிராணாயாமம் செய்து காற்றை நிறுத்துவர்! அபாயம்! மூடும் தலையும் இல்லாமல் செய்யும் தவம் இது ! பேராபத்துக்கள் இதனால் ஏற்படும்! பிரம்மன் சிரசுக்கு மேலே போன கதை இதுதான்! காண முடியாது கடவுளை இவ்விதம் போனால்! இந்த இருவழியிலும் செல்வோர்தான் அதிகம் கீழேபோனாலும் காண முடியாது!? மேலே போனாலும் காண முடியாது?!
நடுவிலே - கண்மணி நடுவிலே ஒளியான கடவுளை காண - உணர வேண்டும்.

வழி காட்ட குரு வேண்டும்! விழிகாட்டப் பெற்றால் விழியின் உள் சென்று
இறைவன் - திருவடியை உணர்ந்து தவம் செய்தல் திருமுடி அறியலாம்!
உணரலாம்! காணலாம்! காலை பிடித்தால் தலை தாழ்ந்து வந்து விடுமல்லவா?  திருவடியை பிடித்தால் திருமுடி நம் கைக்கு வந்து விடும்! இறைவன் கருணையே  வடிவானவனல்லவா? திருவடியை தொட்டால் திருமுடியை காட்டுவான்! காணலாம் கண்ணார கடவுளை கண்ணிலேயே!




ஒற்றியூர் அரசே நின்று சிற்சபைக்குள் நடம்
செயும் கருணாநிலயமே நின் மலைச்சுடரே - பாடல் 3

நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளியே! உள்ளே நின்று
கண்மணியாகிய சிற்சபையில் நடம்செயும் ஆடிக்கொண்டிருக்கும்
சோதியே! அந்த சோதி கருணையை கொண்டது! நிலையாக
கொண்டிருக்கும் கருணை நிலையம்! நின்மலர்ச்சுடர் - மலம்
இல்லாத நின் மலம் - நிமலம் - மும்மலம் இல்லாத சுடரே
நம் கண்மணியான இறைவன்!



ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை




No comments:

Post a Comment