Sunday 26 March 2017

2.21 அருள் நாம விளக்கம்


வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
மயங்கி வஞ்சார் பால் வருந்திநாள் தோறும்
ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
எழில்கெள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
ஓங்கு ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே


ஏய் மனிதா, என்னுடன் வருக!! தேனை விட செங்கரும்பை விட
இனிதாகி தவம் செய்யும் அன்பர் சித்தத்துள் ஊறி ஓங்கும்
ஒளியை ஓம் நமசிவாய என்று மனதால் எண்ணி உருகுவாயாக!

அப்படி இறை நாமத்தை மனதில் எண்ணி அந்த அனுபவத்தை பெறுவாயாக!
துன்பங்கள் எண்ணி மனம் வருந்தி என்ன பயன்? அதை விடுத்து இறைவன்
திருவடியை சேர்வாயாக! என்னுடன் வருக என சற்குரு வள்ளல் பெருமான்
நம்மை அழைக்கிறார்! வாருங்கள்! அவ்வையார் விநாயகர் அகவலில்
"சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி" என்கிறார் வள்ளல் பெருமான்.
சித்தத்துள் ஊறி ஓங்கும்  என்கிறார்.

மனம் தாண்டி சித்தத்தில் சிவத்தை நிறுத்தினால் புத்தி தெளிவு பெற்று அறிவு
விருத்தியாகி ஞானம் பெறலாம்! என்னுடன் ஒற்றியூர் வருக என அழைக்கிறார் வள்ளல் பெருமான்! ஒற்றியூர் - கண்மணி!

என்மொழி குருமொழியாக எண்ணி - பாடல் 7
கருணையின் உருவமே, உரு கொண்டு வந்தது நம் வள்ளல் பெருமான்
உருவில்! இறைவனே கருணையே வடிவான  வள்ளல் பெருமான்,
"என் மொழி குருமொழி ஆக எண்ணி " கேட்பாயாக ஒற்றியூர் கண்மணிக்குள்
வருக என நம்மையெல்லாம் அழைக்கிறார்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment