Monday 13 March 2017

2.18 திருப்புகழ் விலாசம்


துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்தி
செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
இன்ப மேஇமை யான்மகட் கரசே 
திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
திகழும் ஒற்றியூர் சிவபெருமானே


எங்கள் உள்ளே உவந்து ஊறிய அமுதே, இன்பமே
சந்திரனை தலையில் தாங்கிய ஒளிக்கலைகளையுடைய
கண்மணியே! சிவமே! தவத்தால் ஒழுகும் நீரால், கண்கள்
சிவந்து ஒளி பெருகி நிற்பதால் நாம் நம் கண்மணி ஒளியை
பரஞ்சோதியை காணலாம். சதாகாலமும் இறைவனை
நினைந்து உணர்ந்து தொழுது வந்தால் திருவடியை - ஒளியை
தவம் செய்து வந்தால் உள் அமுதம் கிட்டும். பேரின்பம் பெறலாம்

காமன் வெந்திட கண் விழித்தவனே - பாடல் 4

நம் மனதிலுள்ள காமம் முதலான துர்க்குணங்கள் போக வேண்டுமானால்
கண் விழிக்கணும்! கண் விழித்திருந்து தவம் செய்வதால் நம் கண்மணி உள்
ஒளி சிவம் பெருகும். சிவமாகிய ஒளி பெருகினால் நம் காமம் எரிந்து போகும்.

தொழுது கொண்டோடினர் தோட்டக்குடிகள்

என்ற திருமந்திர வரிகள் நாம் அறிய வேண்டிய ஒன்றாகும். அதைத்தான் வள்ளல் பெருமானும் காமன் வெந்திட கண் விளியுங்கள் என்றார். விழித்திருந்து, விழியில்  உணர்வுடன் தவம் செய்து வந்தால் சுத்த உஷ்ணம் பெருகும் ! அசுத்த உஷ்ணமான காமாதி துர்குணகங்கள் வெந்துபோகும்!

எழுமின் விழுமின்
தூங்கும் மனிதா விழித்தெழு! விழிப்புணர்வுடன் இரு! விழியில் உணர்வுடன் இரு!

மாலின் கண்மலர் மலர்திருப்பதானே - பாடல் 8


திருமாலின் கண்மலர் பொருந்திய மலர் திருப்பாதனே. நம்
கண்மணி தான் கண்ணன் - திருமால். அதாவது மாயவன் - மாயை
-மும்,மலங்களால் மறைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே உள்ள
ஒளியே சிவமாகிய ஒளி, மலர்ப்பாதம் - திருவடி என்பது.    


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment