Sunday 12 March 2017

2.16 எழுத்தறியும் பெருமான் மாலை


சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துள் மொய்கழற்காள் ஆக்காதே
நிந்தை உறும் நோயால் நிகழ வைத்தால் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே


நம் முந்தைய வினைகளால் நாம் சிந்தை மயங்கி தடுமாறி
மேலும் தீவினைகள் பல புரிந்து பலவிதமான துன்பங்களுக்கு
ஆளாகிறோம்! எந்தந்தையாகிய நீ, கண்மணியில் ஒற்றியிருக்கும்
நீயே, உன் தூய திருவடிக்கு என்னை ஆளாக்குவாயாக என
வள்ளலார் வேண்டுகிறார், நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளியே
எழுத்தறியும் பெருமான் ஆகும்!

எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும் - என்ற அவ்வையார் அமுதவாக்கும்

எண்ணென்ப யேனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு 


என்ற திருவள்ளுவர் திருவாக்கும் உரைக்கும் உண்மையே வள்ளலாரும்
உரைத்தார்! எண்ணும் எழுத்தும் கண். எண்ணாக எட்டும் எழுத்துக்கு
முதலான ஆதியான எழுத்தும் ஒன்றே. தமிழில் எட்டாம் எண் 'அ' எழுத்தில்
முதல் 'அ' 'அ' வலது கண். இந்த எழுத்தை அறியும் பெருமான் - இந்த
'அ' எழுத்தை அறிந்தாலே உள்ளிருக்கும் - கண்மணி ஒளியை - பெருமானை
இறைவனை அறியலாம் உணரலாம் நம்முள் இருந்து நமக்கு நம்மை
அறிவிப்பவன் அறிபவனாக - நான் - பரஞ்சோதியே! இறைவன்!  









கண்ணாளா உன்றன் கருணை எண்களிக்க - பாடல் 8

கண்ணாளா கண் + ஆள்பவன் - கண்ணை ஆண்டுகொண்டு இருக்கும்
ஒளியே கண்ணாளன்! என் கண்ணாளனே உன்கருணையை எனக்கு தந்து
அருள்வாயாக என வள்ளலார் வேண்டுகிறார்!


காமாந்தகாரம் எனும் கள்ளுண்டு கண்மூடி ஏமாந்தேன்
- பாடல் 14

மனிதர்கள் காம வசத்தால் கண்ஒளி மங்கி இறப்பர்! கள்ளுண்டு
போதையால் அறிவு மயங்கி ஞானம் பெறாது போவர்! எல்லாவற்றுக்கும்
மேலாக கண்ணை அறியாத - கண்மணி ஒளியை - திருவடியை அறியாத
மூடர்கள்  உபதேசத்தால் கண்ணை மூடி தியானம் செய்து ஏமாந்து போவார்?
கண்ணை மூடி தியானம் செய்வபவர், முடிவில் கண்ணை மூடிவிடுவர்! அதாவது  இறந்து விடுவார்!

கண்ணை திறந்து தவம் செய்பவரே கண்மணி உள் ஒளியை காண்பர்! கண்ணை திறந்து தவம் செய்ய, கண்ணை திறக்க ஒரு குரு தேவை!
குரு உங்கள் கண்ணை திறந்தால் - நீங்கள் கண்ணை மூடாது திறந்த நிலையில் தவம் செய்தால் - கண் இமை மூடாத நிலையில் இருப்பதால்-
இமையாதவர்கள்-தேவர்கள்  ஆவீர்கள்! தேவர்கள் எந்நேரமும்
இறைவனை காணலாம்! முதலில் மனிதனான நாம் தேவராக வேண்டும்! அதாவது இமையாதவர்களாக - கண்ணை திறந்த நிலையில்
 உணர்வில் - உள் ஒளியில் நிலைப்பவராக இருக்க வேண்டும் - அவர்களுக்குத்தான் இறைவனை காண முடியும். எழுத்தை
''அ'' அறிந்தால் பெருமானை கண்ணை திறந்திருந்தால்
காணலாம்! அருள் பெறலாம்!

 பொன்னைமதித்தையா நின் பொன்னடியை போற்றாத
ஏழைகட்கும் ஏழை கண்டாய் - பாடல்19

பொன்னை பெரிதாக மதித்து அதனை பெற அல்லும் பகலும்
பாடுபடும் இவ்வுலகில் பொன் பொருள் இல்லாதவரை ஏழை என்பர்!

ஆனால் இறைவனின் பொன்னடியை - தங்க ஜோதியை உணராதவன்
தான் உண்மையிலே ஏழையிலும் ஏழை!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை! அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை!
பொருள் என்றால் பொன் பணம் அல்ல!? மெய்ப்பொருள்! மெய்ப்பொருள் உணராதவன் தவம் செய்யாதவன் இவ்வுலகில் வாழ முடியாது! வினைகளுக்குட்பட்டு ஜனன மரண பிணியில் மாட்டிகொள்வான்! இவ்வுலகம் சிறப்பாக வாழ வேண்டுமானால் தன்னிலே இருக்கும் பொருளை - மெய்ப்பொருளை அறிய வேண்டும். குரு மூலமாக உணர வேண்டும். இவ்வுலகமே இல்லையெனில் அவ்வுலகம் எங்ஙனம் கிட்டும்!
இவ்வுலகில் பொருள் அறிந்து குரு மூலமாக உணர்ந்து தவம் செய்பவர்க்கே அவ்வுலகம் கிட்டும். அ + உலகம் = அவ்வுலகம் கிட்டும் இறைவன் இருக்கும்

உலகம் கிட்டும்! அதைவிட பெரும்பேறு உண்டுமா?!

தூக்கமில்லா ஆனந்ததூக்கம் - பாடல் 22
தூக்கம் என்பது மனிதனின் உடல் உள் உறுப்புக்கள்
சோர்வடையும் போது தேவையான ஒன்று உள் உறுப்புகள்
அயர்ந்து ஓய்வு கொள்வது தூக்கம்! தூங்கும் போது உயிர் ஆதாரத்தில்
ஒடுங்கும்! சராசரி மனிதனுக்கு தூக்கம் இன்றிமையாதது! ஆனால்
தவம் செய்வோர்க்கு தூக்கம் ஒரு தடை! "தூங்காமல் தூங்கி " சுகம்
பெறுவது எக்காலம் என ஒரு சித்தர் பாடியுள்ளார்!

நாம் கண்மணி ஒளியில் உணர்வை வைத்து தவம் செய்ய செய்ய ஒளிபெறுகி உயிர் ஆற்றல் பெருகி உடல் உள் உறுப்புகள் அதிக சக்தி பெறும், சோர்வடையாது, உற்சாகம் கூடும் உணர்வு பெருக பெருக  ஆனந்தம் மேலிடும் அதுவே ஆனந்த தூக்கம் என வள்ளலார் கூறுகிறார்.

சும்மா சும்மா தூங்கி தூங்கி வழிபவன் முடிவில்
மீளாத தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்! இறந்து விடுவான்! தூக்கத்தை
ஒழித்தவனே! உடலை, உணர்வுடையவனாக உற்சாகமாக வைத்திருப்பவனே
நெடுநாள் வாழவான்! அதற்க்கு தவம் தேவை! "ஒருவன் ஒரு நாளைக்கு
ஒருமணி நேரம் தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடம்
ஜீவித்திருப்பான்" என வள்ளலார் கூறுகிறார்!
 
வள்ளலார் சொன்ன தூக்கம்  ஆனந்த தூக்கம்! தூங்காமல் தூங்கி சுகம் பெரும் தவ நிலை! உடல் தூங்காமல் மனம் மயங்காமல் உணர்வுறு நிலையில் சும்மா இருப்பதே தூங்காமல் ஆனந்தமாக தூங்குவது ஆகும்! ஒருநாளைக்கு ஒரு மணிநேரம் தூக்கமில்லா ஆனந்த தூக்கம் கொள்வார் ஆயிரம் வருடம் ஜீவித்திருப்பார் இதுதான் வள்ளலார் வாக்கு!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment