Saturday 11 March 2017

2..15 அருள்விடை வேட்கை


போகம் கொண்ட புணர்முலை மாதொரு
பாகம் கொண்ட படம்பக்க நாதரே
மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின்
மோகம் கொண்டஎம் முன் நின் றருளிரோ

நமக்கு போகம் - பேரின்பம் தரும் கண்மணியின் (இடது பக்கம் -
பெண் அம்சம் - சந்திர கலை) ஒளியான, விஷமுடைய
அரவணிந்த - மும்மலம் தான் விஷம் கண்மணி ஒளியான
சிவமே எனப்படும். உன்மீது தீராத காதல் - அன்பு கொண்டு தவம்
செயும் என் முன் வந்து அருள்வீரே என்கிறார் வள்ளலார்.
பெண் இன்பம் - சிற்றின்பம் இது உலகில் நமக்கு வினையைத்
தரவல்லது! பெண் அம்சமான நம் இடப்பக்க கண்மணி ஒளியை
சேர்வது பேரின்பம், வினையை தீர்க்கவல்லது!

சீலமேவித் திகழ் அனல்கண் ஒன்று பாலமேவும் - பாடல் 3

இப்பிரபஞ்சம் முழுவதுமாக திகழ்கின்ற அந்த பரஞ்சோதியை நம்
கண்மணி அனலாகும்! நம் கண்கள் ஒன்றினால்-இணைந்தால் மயிர்பாலம்
வழியே செல்லும்! என்னது செல்லும்? அனல் கண்ணிலிருந்து கிளம்பும்
ஆறுபோல மயிர்ப்பாலம் வழியே உள்ளே பாயும்! நெருப்பாறு
பாய்ந்தோடும் மயிர்பாலம் - நெருப்பாறு என்று சித்தர் பல கூறியது
இதைத்தான்!

அடியார் நெஞ்சத் தருட் பெருஞ்ஜோதி - பாடல் 9

தவம் செய்பவரே அடியார்கள்! தவம் செய்யும் மெய்யடியார் நெஞ்சமாகிய
கண்மணிஒளியே, எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி!

No comments:

Post a Comment