Thursday 2 March 2017

2.13 அபராத விண்ணப்பம்


தேவியல் அறியாச் சிறியேனை பிழையைத்
திருவுளத் தெண்ணிநீ கோபம்
மேவிஇங் கையோ கைவிடில் சிவனே
வேறுநான் யாதுசெய் வேனே
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த
முழுச்சுவை முதிர்ந்தசெங்க ரும்பே
சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே
திருவெற்றி யூர் மகிழ் தேவே
தே + இயல் = தெய்வத்தின் இயல்பு. நம் உடலில் கண்மணியில்
துலங்கும் தெய்வத்தின் இயல்பு நிலை அறியாமல் - ஒளியை
அறியாமல் இருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும்!

மூவிருமுகம்சேர் முத்தை நமக்கு அருளியது முழுச்சுவை முதிர்ந்த
செங்கரும்பு! முழுச்சுவையை தரும் அமுதத்தை தருவது-நமக்கு அமிர்தம்
கிட்ட வேண்டுமானால் நம் கரும்-பு செங்கரும்பு ஆகி முதிர்ச்சி பெறவேண்டும்.
நம் கண்கள் சிவந்து முற்றினால் - தவத்தால் ஒளி ஏறி ஏறி விளைய விளையத்தானே உள் அமுதம் கிடைக்கும்! அமுதம் கிட்டுமுன் மூவிருமுகம் சேர் முத்து காணலாம். கிட்டும்! மூவிருமுகம் - ஆறுமுகம் ஆறுமுகமான முத்து - காணலாம்! நம் ஒளி பொருந்திய இரு கண்களை நாமே  காணலாம்!

அதை நமக்கு அருளுவது தான் உள்ளிருக்கும் சிவமாகிய தங்க ஜோதி! அந்த ஜோதி, நந்தி - வெள்ளை காளை மீது அமர்ந்த சிவந்த மேனி சிவனை குறிக்கும். வெள்ளை ஒளி பின்னர் சிவப்பு ஒளி குன்றென விளங்கும்.,திரு - இறைவன் ஒற்றி இருக்கும் கண்மணியை
குறிப்பதாகும். எல்லா ஊர் பெயரும் இறைவன் இருக்கும் கண்மணியை குறிப்பதே! ஊரும்  பெரும் உரைப்பது கண்மணி ஒளியையே!


காண நின்றடியார்க் கருள் தரும்பொருளே - பாடல் 5
எல்லோரும் காண - அறிய கண்ணில் மணியில் உள் ஒளியாய்
இருப்பவனே! உன்னை நாடிடும் அடியவர்க்கு அருள் தருபவனே!
உன்னை நாடிடும் அடியவர்க்கு அருள் தருபவனே! பொருளே - மெய்ப்பொருள்
- கண்மணி

சஞ்சிதமறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றி
எம் தவமே - பாடல் 6

நம் பிராரத்துவம் ஆகாமியம் என்ற இருவினைகளைவிட கொடிய
முற்பிறவிகளில் செய்த சஞ்சித வினையைக் கூட இல்லாமலாக்குவது
சண்முகம்  உடையவன் தந்தை - ஆறுமுகம் காட்டும் உள் சிவஒளி.
அந்த சிவம் - ஒளி. நம் கனமணியின் உள்ளே ஒற்றியிருப்பது!
தவம் செய்வார் மட்டுமே உணர்ந்து அறிவதாகும்.

தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத்தூணே
அம்பிகாபதியே - பாடல் பாடல் 7

துதிக்கையுடைய விநாயகனையும் வேலை கையில் கொண்ட வேலவனையும்  பெற்றவன் உள் சிவமே! தோன்றலே - அது தோன்றக்கூடியது எனவே தான் வள்ளலார் தோன்றலே என்றார்! வச்சரத்தூண் - சூரிய சந்திர அக்னி கலைக்கு மேலாக ஏக பாதமாக - தூண் போன்று ஒளியாக ஒளிர்வதால் வைரத்தூணே என்றார் வள்ளலார்! அம்பிகையின் - நமக்கு அமுதம் தரும் தாயின் - சதியின் பதியே சிவம் -  அம்பிகையின் பதியே என் உள் விளங்கும் ஒளிரும் ஜோதியே எனப்படும். அதுவே அம்பிகாபதி என்பது!

சுட்டிலாப் பொருளே சுகப்பெருங்கடலே - பாடல் 10

இறைவன் நம் உடலில் கண்ணில் மணியில் ஒளியாக இருப்பதை சுட்டிகாட்ட
முடியுமா? உணர்த்தத்தான் முடியும்!  அதனால் தான் சுட்டிலாபொருளே
என்றார் வள்ளலார். நம் கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்தால் அதுதான் நமக்கு சுகப்பெருங்கடலாகும்! பேரின்பம் தரும்! அமுதம் தரும்!






No comments:

Post a Comment