Thursday 2 March 2017

2.12 திருவருள் வேட்கை - 1

தோன்றாத் துணையாகும் சோதியே  - பாடல் 2

நம் கண்மணிக்குள் ஒளியாக துலங்கும் சோதியால் பிரபஞ்சம்
முழுவதும் நாம் காணமுடிகிறது! உலகை பார்க்க உதவும் கண்மணி
சோதியை நாம் பார்க்க முடிவதில்லை! எல்லாவற்றையும் காட்டுவிக்கும்
கண்மணி ஒளி தன்னை காட்டமால் மறைந்து நிற்கிறது. அதனால் தான்
வள்ளல் பெருமான் தோன்றா துணையாகும் சோதியே என்றார்.

அறியாப் பருவத்தடியேனை ஆட்கொண்ட நெறியாம்
கருணை நினைந்துருகேன் - பாடல் 9

வள்ளலார் இராமலிங்க சுவாமிகளை இறைவன் அறியாப் பருவத்திலேயே
- குழந்தை பிராயத்திலேயே ஆட்கொண்டு அருளினார்! வள்ளலாரை
ஆட்கொண்ட நெறி - திருவடியில் - கண்மலரில் - கண்மணி ஒளியில்
தவம் செய்து உள் கடந்து - கடவுளை காண்பதாகும்! அந்நெறியே - செந்நெறி
அருள்நெறி - உலகமக்கள் அனைவருக்கும் வள்ளலார் போதிக்கும்
மரணமிலா பெருவாழ்வு காண வழிவகுக்கும் சன்மார்க்க நெறி
சாகாக் கலையாகும்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

 

No comments:

Post a Comment