Wednesday 29 March 2017

2.24 திருவருள் வழக்க விளக்கம்


தொடுடை யார்புலித் தோலுடை
யார்கடல் தூங்கும் ஒரு
மாடுடை யார்மழு மான்உடை
யார்பிர  மன்தலையாம்
ஓடுடை யார்ஒற்றி யூர்உடை
யார்புகழ் ஓங்கிய வெண்
காடுடை யார்நெற்றிக் கண்உடை
யார்எம் கடவுளரே


ஒற்றியூர் உடைய எம் கடவுளாகிய எம் கண்மணி ஒளியே
சிவம்! இரு கண்களிலும் உள்ள சிறிய துவாரத்தை மறைத்திருக்கும்
ஜவ்வே - தோடு எனப்படும். சிவம் ஆனந்த தாண்டவம் ஆடினால்
தோடு கழன்று விடும்! புராணம் கூறுவது இதைத்தானே! நாம் சிவத்தை
நம் உள் ஒளியை  நல்ல ஆட விட்டால், அதாவது நாம் விடாது
தவம் செய்தால் ஒளி பெருகி மறைப்பு விழுந்து விடும்! இது அனுபவ
ஞானம். வள்ளல் பெருமான் உரைத்த உபதேசம். தவம்  செய்யும் போது
தோன்றும் ஒளி புலித்தோல் போன்று காணும். கடல் என்றது வெள்ளை விழி
அதுவே மாடு. சிவனின் வாகனம். நந்தி - நம் தீ! ஒளி காட்சி அனுபவம்
கூறும் நிலையே எல்லாம்! சிவனை வர்ணிப்பது -நம் கண்மணி ஒளி
அனுபவமே!

பல்லாயிரம் கோடி அண்டங்கள் எல்லாம்
காற்பதம் ஒன்றில் ஒடுங்கி நிற்பார் - பாடல் 10

மால் அயன் உருத்திரர் மற்றைய பூதங்கள் மற்றும் பல்லாயிரம்
கோடி அண்டங்கள் இப்பிரபஞ்சம் எல்லாம் தன் இருகாலில்
- திருவடியில் ஒடுக்கி இருப்பவரே இறைவன்! சகலமும்
திருவடியில் அடக்கம்! அருபெரும்ஜோதி ஆண்டவரே நம்
திருவடி யாகிய கண்மணியில் உள்ளார்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment