Thursday 30 March 2017

2.25 புண்ணிய விளக்கம்

பாடற் கினிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன் றிடுநீறே


இறைவன் நமக்கு வாழங்கிய சீர் - கண்மணி ஒளி! அதை
தேடி காண்பதே இனிமையான அனுபவம்! பஞ்சபூதமும் சேர்ந்த
கண்மணியில் பொங்கி வரும் நீரால் - நெகிழ்ந்து உருகுவார்க்கு
நல்ல வாக்கு! - பாடும் திறன்! பஞ்சமில்லாது எப்போதும் கிட்டும்
நல்ல உணவு! நல்ல தவம் செய்யும் அடியவர் கூட்டம் தரும்
சத்சங்கம் நடக்கும். நல்ல குணவானாக அவன் திகழ்வான்! பயப்படாதே
இதெல்லாம் நடக்கும் என்மேல் ஆணை என வள்ளல் பெருமான்
கூறுகிறார்!

அஞ்சில் புகுந்த நெஞ்சே - பாடல் 5
 
பஞ்ச பூதமும் ஒன்றான கண்மணியில் புகுந்த உள்ளே உள்ள
நெஞ்சமே - மனமே!

திண்ணமளிக்கும் திறம் அளிக்கும் - பாடல் 8

கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்ய செய்ய உடல் திடம்
கிட்டும்! உள்ளத்தில் உறுதி கிட்டும்! எதையும் ஆக்கும் திறன் கிடைக்கும்!
எல்லா திறமையும் பெருகும்!

No comments:

Post a Comment