Tuesday 28 February 2017

2.12 திருவருள் வேட்கை

மன் அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
இன் அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
முன் அமுதா உண்டகளாம் முன்னி முன்னி வாடுகின்றேன்
என் அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ 


மனிதர்களுக்கு அமுதம் கிடைக்க வழி செய்யும் உன் திருவடியை
எண்ணி தவம் செய்வோர்க்கு நல்ல உணவு கொடுப்பதே மிகவும் மேன்மை
தருவதாகும். எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கலாம். புண்ணியச் செயல்
என்பது சதா காலமும் இறைவனை, திருவடியில் எண்ணி தவம் செய்வார்க்கு
கொடுக்கும் உணவே! இறைவா நீ அருளுகின்ற அமுதம் உள்ளிருந்து பெற
உன்னி உன்னி உள் புக தவம் செய்து தவம் செய்து வாடுகிறேன்.
என் அமுதமான என்னுள் இருக்கும் பரஞ்சோதியே அருள் புரிவாயாக!

No comments:

Post a Comment