Friday 13 January 2017

2.1 கருணை விண்ணப்பம்


நல்லார்க் கெல்லாம் நல்லவன் நீ
ஒருவன் யாண்டும் நாயடியேன்
பொல்லார்க் கெல்லாம் பொல்லவன் நான்
ஒருவன் இந்த புணர்ப்பதால்
எல்லாம் உடையாய் நினக்கெதிரென்
றேண்ணேல் உறவென் றெண்ணுக ஈ
தல்லால் வழக்கென் இருமைக்கும்
பொதுமை அன்றோ அருளிடமே
 
இறைவா உன்னை நாடிடும் நல்லவர்கள் எல்லோர்க்கும்
நல்லவன் நீ ஒருவனே! நாயினும் கடையாய கீழ் குணங்களை  பெற்ற
பொல்லாதவர்களே! இந்தப் புணர்ப்பதணால் – நம் கண்மணி ஒளியை
நாம் சேரும் நிலையே! இறைவா உன்னை கலந்தே உறவாட எண்ணும்
இப்பாவியின் வினைகளை நீக்கி அருள்வாயாக! நான் உனக்கு உறவே!
அடியேன் உந்தன் பாத மலரில் சரணமே!

 நினை அன்றி வேற்றுத்தெய்வம் நயவேற்க்குத் திடமே அருள் – பாடல் 2

இறைவா! அருட்பெருஞ்சோதி ஆண்டவா! உன்னை யன்றி – என் கண்மணி
ஒளியாக துலங்குபவனே! நாடியே நின்ற – நிற்கின்ற எனக்கு வேறு தெய்வம்
இல்லை! எல்லாம் வல்ல ஏக இறைவனே நீ என உணர்ந்து திடமாக நிற்க
அருள்வாயாக!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

No comments:

Post a Comment