Saturday 14 January 2017

2.3 பெரு விண்ணப்பம்



இருள்ஆர் மனத்தேன் இழுக்குடையேன்
எளியேன் நின்னை ஏத்தாதே
மருள்ஆர் நெஞ்சப் புலையரிடம்
வாய்ந்து வருந்தி மாழ்கிறேன்
அருள்ஆர் அமுதப் பெருக்கே என்
அரசே அதுநீ அறிந்தன்றோ
தெருள்ஆர் அன்பர் திருச்சபையில்
சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ


நம் கண்மணியில் அருள்தரும் அமுதமாக, நம் தலைவனான
ஒளிக்கடவுள் இருப்பதை அறிந்து உணர்ந்து தவம் செய்யும்
மெய்யடியார் திருச்சபையில் என்னை சேர்ப்பாய் என சரணடைவோம்
திருவடியில்! இல்லையெனில் எல்லா துர்க்குணங்களும் கொண்டு
வினையால் அழுந்தி துன்மார்க்கிகளுடன் சேர்ந்து கெட்டுப் போக
நேரிடும்.

கண்ணார் நுதற் செங் கரும்பேமுக்
கனியே கருணைக் கடலே - பாடல் 5

கண்ணில் இருப்பவனே செங்கரும்பே - தவத்தால் சிவக்கும்
வெள்ளை விழி. இனிமையானவனே மூன்று கண்ணே முக்கண் -
காயாக இருக்கும் நம் மூன்று கண்ணும் கனியாக வேண்டும்
காய் கனிய வேண்டுமானால் ஊத்தம் போடுவார்களல்லவா?
நாமும் நம் கண்மணி ஒளியை பெருக்கினால் காயான கண்
கனியாகும். அதன் பின் கருணைகடல்  அருள் மாரிபொழியும்.

ஞான சற்குரு சிவ செல்வராஜ்

No comments:

Post a Comment