Tuesday 3 January 2017

47 இங்கிதப்பத்து



சீர்வளர் குவளைத் தார்வளர் யுயனார் சிவனார்தம்
பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
ஏர்வளர் மயின்மே லூர்வளர் நீயமத் திடைவந்தால்
வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயலம்மா

குவளை மலர் சூடிய சிவனாரின் பேர் பெற்ற மகன் குகன்
கருமேகங்கள் சூழ்ந்த தணிகை மலையான் மேலோங்கி வளரும்
பலவர்ண ஒளியையுடைய செவ்வேள் மயில் மேல் ஊர்ந்து செல்லும் அழகை
கண்டால் வாரால் மறைக்கப்பட்ட, வினையால் திரையால் மூடப்பட்ட
கண்ணை கண்டால் யாருக்கு தான் ஆசை வராது. கச்சணிந்தமுலை
என்பது திரை மறைத்தகண் எனப்படும்.

தணிகேசர் தந்தாரென்பால் தந்தாரென்னைத் தந்தாரே -பாடல் 2

நான் என் மனம் தணிந்த கண் ஒளியை விழித்து நிலை நிறுத்தி
தியானம் செய்யும் போது தந்தார் என்னிடம் என்னையே! அதாவது
என்னையே நான் காண தந்தார் என் கண்மணி ஒளியான இறைவன்.

வந்தேன் னினிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி நொந்தேன்
முலைமீதவ்வரை என்றார் - பாடல் 5

நம் கண்மணி ஒளியில் வெளியில் வந்தேன். இனிமேல் வருகிறேன்
என்றார்.புரியாது மனம் பேதலித்தேன். முலைமீது அவ்வுரை என்றார்..
முலை என்றால் கண். கண்மணி மீது ஒளியாக வருகிறேன் என
பரிபாசையாக கூறியதாகும்

No comments:

Post a Comment