Monday 2 January 2017

46 தேவாசிரியம்



யாரது யும்கடு விழியினால் மயக்கும்
ஏந்திழை யவர்  வெந்நீர்த்
தாரை தன்னையும் விரும்பிவீழ்ந் தாழ்ந்தவென்
றனக்கரு ளுண்டாமோ
காரை முட்டியப் புறஞ்செலும் செஞ்சுடர்க்
கதிரவ னிவராழித்
தேரை யெட்டுறும்  பொழில்செறி தணிகையில்
தேவர்கள் தொழுந்தேவே

பெண் மயக்கத்தில் ஆழ்ந்து கெட்டுப் போகாதீர்கள். ஏட்டுறும்
பொழில் செறி தணிக்கையில் - எட்டு 'அ' வலது கண் - சூரியன்
உறுகின்றதில் நம் மனம் தணிந்து தவம் செய்தால் கிட்டும் ஞானம்.
சூரியனின் தேர் ஒரு சக்கரம் உடையது. வலது கண்மணி
1 சக்கரம். எட்டுகுதிரை பூட்டியது என்பது பரிபாஷை. எட்டுதிக்கும்
பாயும் ஒளி சூரியஒளி எவ்வளவு பெரிய ஞானம் வள்ளலார்
உரைத்துள்ளார் பாருங்கள்! அகவழிபாடே! அனைத்தும் ஞானமே!


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை
www.vallalyaar.com

No comments:

Post a Comment