Thursday 26 January 2017

2.7 அபராத் தாற்றாமை

துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
துட்டனேன் தூய்மை ஒன் றில்லா
எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
பரமனே எம்பசு பதியே
அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
ஐயனே ஒற்றியூர் அரைசே

மனிதன் தீய குணங்களால் கெட்டு சீரழிந்து போகிறான்.
உடலும் மனமும் தூய்மையிலாது போகிறான். குப்பைத்
தொட்டியில் போடும் எச்சில் போல் ஆகிவிடுகிறான்.
பாவம் செய்து செய்து பாவியாகி விடுகிறான்.

யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை இறைவனுக்கு
பால்பழம் சித்திரான்னங்கள் ஆடம்பர பூசை ஒன்றும் வேண்டாம்
ஒரு பச்சிலையை எடுத்து உள்ளன்போடு அவனை நினைத்து
அவன் திருவடியில் சமர்பித்தாலும் போதுமே! பக்தி செய்தால்
கிட்டும் குருவடி! மேலும் போகலாம்அரனடி! திருவடி! எம்பசுபதியே
எம்பசு என்றால் சீவன்! பசுபதியே என்றால் என் சீவனுக்கு
சீவனானவனே! சீவனுக்குள் சிவனானவன்! ஜோதியுள் ஜோதி!
நமக்கு அச்சாணியாக விளங்குபவன். நம் உடலாகிய தேர்
ஓட அச்சாணியாக அச்சிலாக இருப்பவன் ஒளியாகிய இறைவன்.

கண்மணி சக்கரத்தின் அச்சாணியாக இருப்பவன் ஒளியாகிய
இறைவனல்லவா? கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளி!
அச்சாணி இல்லாத தேரை பாடையில் ஏற்றவேண்டியது தான்!
உயிராகிய ஒளியாகிய அச்சாணி கழன்று விட்டால் இறந்தவனாகிறான்.
அவனை - சிவமற்ற சவத்தை தேர்ப்பாடை கட்டி எட்டுகாலில்
நாலுபேர் சுமந்து சுடுகாட்டிலே போடுவார்!?

சிவம்இருக்கும் போது எட்டுகாலில் - எட்டாகிய இறைவன் இருக்கும்
திருவடியில் போகத்தெரியாதவனை சிவம் போன பின்பு சுடு காட்டில்
எட்டுகாலில் - நாலுபேர் சுமந்து போவார்! உயிராகிய சிவம் இருக்கும்
போது அந்த ஒளியை அடையாத உன்னை சவமான பின்  பெருந்தீ
மூட்டி உடலை போட்டுவிடுவர். செத்த பிறகாவது உன் உடல் ஒளியாகட்டுமே
என்ற அற்ப சந்தோசம் உன் உறவினர்களுக்கு!! மனிதனாக பிறந்தால்

வினையற்று திருவடியை சரணாகி உடலை ஒளியாக்கி பேரின்பம்
பெறனும் ! இதுவே மிக மிக உயர்ந்தநிலை!! நாம் ஒளியாகனும்!
இல்லையேல் ஒளியிலே வைத்துவிடுவர்!

உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே - பாடல் 3 

தவம் செய்து செய்து உறுதிப்பட்ட உள்ளத்தில் கண்மணி உள்ளில்
விளங்கும் ஒளிவிளக்கு!

கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே - பாடல்5

நம் கண்ணிலே விளங்கக் கூடிய மணியே நாம் அருமையாக
செய்த தவத்தால் பெற்ற பயனாகும்.

ஐந்தாம் பூதமே ஒழியாப் புனிதமே புதுமணப்பூவே பாதமே
சரணம் சரணம் - பாடல் 10

பஞ்சபூதங்களும் ஒன்றான என்றும் புனிதமான ஒளியே! 
என்றும் மனமுள்ள கரும் - பூவே - கண்மணி பூவே. கருப்பு
பூ  கண்மலர் பூ ஒன்றே கருப்பு -பூ -  கரும்புஎன்றானது . 
ஒப்புயர்வுற்ற இந்த திருவடியே  சரணம் சரணம் என்றிருப்பவரே
உய்வர்! மரணமிலா பெருவாழ்வு பெறுவார்!

No comments:

Post a Comment