Saturday 14 January 2017

2.2 பிரார்த்தனைப் பதிகம்



அப்பார் மலர்ச்சடை ஆரமு
தேஎன் அருட்டுணையே
துப்பார் பவள மணிக்குன்றே
மேசிற்  சுகக்கடலே
வெப்பார் தருதுய  ரால்மெலி
கின்றனன் வெற்றடியேன்
இப்பார் தனில் என்னை அப்பா அஞ்
சேல் என ஏன்று கொள்ளே


கண்மணி மலரின் உள்ளே அப்பால் ஒளிக் கலைகளை உடைய
ஆரமுதே! எந்தன் அருள் துணையே ! அதில் தோய்வார்க்கு கண்மணி
ஒளியிலே நின்றால் பவளம் போல் சிவந்த கண்ணாகி மணியாகும்
அதுவும் சுகமான அனுபவமே! அங்ஙனம் தவம் செய்யும் போது
ஏற்படும் வெப்பம் சுத்த உஷ்ணம். அதைக்கண்டு அஞ்ச வேண்டாம்
உள்ளிருக்கும் ஒளியே காத்து அருளும்.

மெய்யகத் தேநின்றொளிர் தரும் ஞான விரிசுடரே - பாடல் 7

நம் மெய்யாகிய உடலின் உள் நின்று நம் கண்மணி ஒளியாக
ஒளிரும் இறைவன் உள்ளே பரந்துவிரிந்து பேரொளியாக ஒளிரும்
ஞானச்சுடர்!

எண்டோள் மணிமிடற் றெந்தாய்
கருணை இருங்கடலே - பாடல் 9


எட்டுத்தொள் மணி - எட்டு என்பது தமிழில் அ. அதில் தானே -
கண்ணில் தானே மணி உள்ளது? கண்மணியில் இருக்கும் என்
தாயே கருணை பொழியும் இருக்கடலே - இருகண்ணே!

No comments:

Post a Comment