Friday 30 December 2016

45 செவியறிவுறுத்தல்



உலகியற் சுடுசுரத் துழன்று நாடொறும்
அலகில் வென் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
இலகு சிற் பரகுக என்று நீறிடில்
கலகமி லின்பமாம் கதிகி டைக்குமே

நெஞ்சமே உலகியல் மாயையில் சிக்கி புற உஷ்ணம் ஏறி
உழன்று பலப்பல துன்பங்களில் வாடாது தப்ப வேண்டுமானால்
ஓயாது நம் சிற்பரமாம் நம் கண்மணி குகையில் உள்ள ஒளியை
எண்ணி எண்ணி நீர் பெருக தவம் செய்தால் பேரின்பம் கிடைக்கும்.

இவ்வினைச் சண்முக என்று நீறிடில் - பாடல் 3

சண்முகமான - ஆறுமுகமான நம் கண்கள் இரண்டிலும் நீர்
பெறுக, திருவை - ஒளியை நினைந்து தவம் செய்தால் நமக்கு
இல்லை வினையே, அருள் ஞான வாழ்வு கிட்டும். ஒப்பில்லா
சிவபதம் அடையலாம். அந்த=அச்சமே இல்லாத நிலை கிட்டும்.
எல்ல துன்பங்களும் நீங்கி பேரின்பம் கிட்டும்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை
www.vallalyaar.com

No comments:

Post a Comment