Saturday 4 February 2017

2.8 காட்சிப் பெருமிதம்


திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
உரை படாமல் ஒளிசெய் பொன்னே புகழ்
வரைபடாது வளர் வல்லி கேசநீ
தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ

அலை இல்லாத கடல் - நம் கண்ணாகிய கடல். உரைக்காமலே
பார்த்த மாத்திரத்தேலே சொல்லி விடாமல் இது பத்திரை மாற்றுப்
பசும்பொன் என்று!? அந்த அளவு ஒளிர் விட்டு பிரகாசிக்கும் ஒளி
நம் கண்மணி ஒளியில் உள்ளது! இறைவா உன்புகழ் சொல்லி மாளுமா?
நீ தரைபடா கந்தை சாத்தியது - இறைவா நீ தரையில் படாமல் - கந்தை
- ஓட்டை - சாத்தியது போர்த்தியது மூடியது! அதாவது நம் கண்மணி
மத்தியிலுள்ள ஓட்டையே கந்தை என்பதாகும்! தரைபடாமல் என்றது
கண்மணி நம் உடலை பற்றியிராமல் இருக்கும் தன்மையே! அலையிலா
கடலில் நம் கண்மணியினுள் பிராணநீரில் மிதந்து கொண்டிருக்கிறது.
நம் கண்மணி! நீர்மேல் இருக்கிறது நம் கண்மணி!

தந்தையே திருவலி தாயத் தலைவா நீ - பாடல் 2

எவ்வுயிர்க்கும் தந்தையான பரமாத்மாவே நீயே தலைவன்! திருவாகிய
நீ கண்மணியிலே வலி உணர்வு 'தா'  அப்போது தான் திரு - வலி - தா -அம்
என்பது!

பாலை கொண்ட பராபரா நீ பழஞ் சேலை கொண்ட திறம் - பாடல் 3

பாலை கொண்ட பராபரா -வெள்ளை விழியே பாற்கடல் எனப்படும்
அதில் கருவிழியில் மணியில் உள் ஒளியானவனே பராபரம்! நீ
பழஞ்சோலை கொண்டது - கண்மணி மத்தியில் சார்த்தியிருப்பது
நம் பழைய வினைகள் - அதுவே பழஞ்சோலைஎன்றார் வள்ளல் பெருமான்.

நீ தொடுத்த கந்தையை நீக்கி துணிந்தொன்றை உடுத்தவர் இலையோ - பாடல் 5

கண்மணி மத்தியிலுள்ள ஓட்டையை மறைத்துள்ள வினையாகிய
பழைய சேலையை மாற்றி - அதாவது வினைகளை சுட்டெரித்து
உள் விளங்கும் ஒளியால் தங்கமென ஜொலிக்கும் ஒளியால்
ஆடை புனைய வேண்டும்!

பரதேசி போல் இருந்தீர் - பாடல் 8

பரமாகிய வெட்டவெளியில் பரவெளியில் தேசி - வசிப்பவர்
பரதேசியாகும். நமகண்மணி ஒளி பரதேசியாகிய இறைவனே
வெளியிலே விளங்கும் ஒளியே!


No comments:

Post a Comment