Sunday 28 June 2020

72 . தவத்திறம் போற்றல்

                                           72 .  தவத்திறம்  போற்றல் 

              வில்வத்  தொடும்பொன்  கொன்றைஅணி 
                         வேணிப்  பெருமான்  ஒற்றிநகர் 
              செல்வப்  பெருமான்  சிவபெருமான் 
                         தியாகப்  பெருமான்  திருஅழகைக் 
              கல்வைப்  புடைய  மனம்  களிக்கக் 
                         கண்கள்  களிக்கக்  கண்டுநின்றேன் 
              இல்லைப்  புடையேன்  அம்மாநான் 
                         என்ன  தவந்தான்  செய்தேனோ 

               வில்வ  தழையும்,  கொன்றை  மலர்மாலையும்  அணிந்து  சடை  உடைய  பெருமான் 
இருப்பது  நம்  ஒற்றி  நகரான  கண்மணியில்!  அவர்  செல்வப்பெருமான்  சிவபெருமான்  
தியாகப்பெருமான்.  அவரின்  மேனி  அழகை  கல்மனம்  படைத்த  நான்  கண்கள்  களிக்ககண்டு 
மகிழ்ந்து  நின்றுவிட்டேன்.  இல்லறவாசியானநான்  அந்த  ஒப்பில்லா  இறைவனை  காண  என்ன 
தவம்  செய்தேனோ?!

              பிறப்பை  அகற்றும்  ஒற்றியில்  போய்ப் 
              பேரானந்தம்  பெறக்  கண்டேன் 
              இறப்பைத்  தவிர்த்தேன் ...............................  பாடல்  6

,             இனிபிறவா  நிலையை  தரும்  ஒற்றியாகிய  கண்மணி  ஒளியில்  போய்  நின்று  கண்டு 
அகமிக  மகிழ்ந்து  பேரானந்தம்  பெற்றேன்!  கண்டேன்  கண்களால்  கடவுளை!  அதன்  பயனால் 
இறப்பும்  இல்லாதநிலை  பெற்றேன்.  சாகாவரம்  பெற்றேன்.  இறைவன்  இருக்கும்  ஒற்றியூருக்கு 
கண்மணி  ஒளிக்கு  நாம்  போனால்  பிறப்பு  இறப்பு  இல்லாத  பேரின்ப  பெருவாழ்வு  பெறலாம்.

              தியாகப்பெருமான்  திருக்கூத்தைக்  கல்லாம் 
              கொடிய  மனம்  கரையக்  கண்டேன் 
              பண்டு  காணாத  எல்லாம்  கண்டேன் ......................  பாடல்  7

              நம்  ஒற்றியூரில்  கோயில்  கொண்டிருக்கும்  தியாகப்  பெருமானின்  திருநடனத்தை 
தவம்செய்து  செய்து  கல்லான  என்  கொடிய  மனமும்  கரையும்  படியாக  கண்டு  பேரானந்தம் 
கொண்டேன்.  அதுமட்டுமா?  இதுவரை  காணாத  அற்புத  காட்சிகளை  எல்லாம்  கண்ணில் 
கண்டேன்.

              ஒற்றி  நகர்தன்னில்  பார்த்தேன்  வினைபோம் 
              வழிபார்த்து  என்னை  மறந்தேன் ...................         பாடல்   9

              ஒற்றிநகரில்  -  என்  கண்மணியில்  பார்த்து  பார்த்து  தவம்  செய்யச்செய்ய  என் 
வினையெலாம்  இல்லாது  போக  கண்டு  என்னையே  மறந்தேன்.  பேரானந்தம்  அடைந்தேன்!

              சோம  சுந்தரனாராக  மதுரையில்  அருள்  பாலிக்கும்  சிவபெருமான்,  திருஞானசம்பந்தருக்கு 
முத்துச்சிவிகை  குடையொடுபொன்  சின்னம்  கொடுத்த  சிவபெருமான்  ஒற்றியூராகிய  நம்  
கண்மணியில்  தான்  அருள்  ஜோதியாக  துலங்குகிறார்!

       

             

No comments:

Post a Comment