Thursday 25 June 2020

70 . தரிசனப் பதிகம்

                                               70 .  தரிசனப்  பதிகம்

             திருவார்  பொன்னம்  பலநடுவே
                     தெள்ளார்  அமுதத்  திரள்அனைய
             உருவார்  அறிவா  னந்தநடம்
                     உடையார்  அடியார்க்  குவகைநிலை
             தருவார்  அவர்தம்  திருமுகத்தே
                     ததும்பும்  இளவெண்  நகைகண்டேன்
             இருவா  தனைஅற்  றந்தோநா
                     இன்னும்  ஒருகால்  காண்பேனோ

             இறைவன்  தெவிட்டாத  அமுதம்  போன்றவன்!  அவன்  இருப்பதோ  பொன்னம்பல
நடுவில்!  தவம்  செய்யும்  அடியார்க்கு  உவகையளிப்பவர்.  ஆனந்தம்  தருபவர்.  அந்த
இறைவன்  ஜோதி  வடிவானவர்.  நம்  அறிவு  துலங்கும்படி  ஆனந்த  நடனம்  ஆடுபவர்.
தவம்  செய்யும்  அடியார்கள்  அவர்  திருமுகத்தில்  புன்னகை  ததும்பும்  ஆனந்த  நிலையை
காண்பர்.  தொடர்ந்து  காண்பவர்  இரு  வினைகளும்  அற்றுப்போகும்.  நாம்  கண்மணி  ஒளியை
எண்ணி  எண்ணி  தவம்  செய்கையில்  ஒளியின்  அசைவை  நடனத்தை  தொடர்ந்து  காணலாம்.
பிறவிபயன்  இதுவே.

              கருணைவிழி  வழங்கும்  அன்னார்
              அறிவானந்த  நடம்  ஆடும்  கழல்  .................................  பாடல்  2

             நினைந்து  உணர்ந்து  நெகிழ்ந்து  தவம்  செய்யும்போது  நம்  விழிகள்  அன்பாய்
நெகிழ்ந்து  கருணை  ததும்பும்  விழிகளாகும்!  இங்ஙனம்  சாதனை  முதிரிச்சி  பெறுகையில்
இறைவன்  கழல்  -  திருவடியில்  -  கண்ணிலே  -  நம்  கண்ணிலே  -  ஒளியின்  அசைவை
காணலாம்!  அதுவே  நடனம்  என்பர்.  ஒளிநடனம்  காண்பர்  அறிவு  துலங்கும்.  அதனால்
தான்  அறிவானந்த  நடம்  என்றார்  வள்ளலார்.

             கோயிற்கருகே  சென்று  மனம்  குளிர்கண்டேன்  ..............  பாடல்  3

             இறைவன்  இருக்கும்  இடம்  தானே  கோவில்.  நம்  கண்மணியில்தானே  ஒளியின்
இறைவன்  கோயில்  கொண்டுள்ளான்!  மனம்  குளிர  கண்டாராம்  எப்படி?  எப்படி  மனம்
குளிரும்?  தண்ணீரில்  கிடந்தால்  தானே  குளிரும்?  மனம்  இருக்கும்  கண்மணியில்
உணர்வை  வைத்து  தவம்  செய்யச்செய்ய  கண்ணீர்  பெருக்குமல்லவா?  கண்ணீரில்
கிடக்கும்  மனம்  குளிர்ந்து  தானே  போகும்?  எப்படி?  தவத்தால்  தான்  இறைவனை
காணமுடியும்!

             முழுமாதவத்தால்  கண்டேன்  நான்  என்  கண்  .............. பாடல்  4

             வள்ளல்பெருமான்  முற்பிறவியின்  பயனாய்  இளவயதிலேயே  இறைவனின்
பரிபூரண  அருள்  பெற்றார்.  அவரே  கூறுகிறார்!  முழு  மாதவத்தால்  கண்டேன்  நான்  என்
கண்ணை!  கண்மணி  ஒளியை!  இறைவனின்  திருமுகத்தை!  நாமும்  விடாது  தவம்
செய்தால்  காணலாம்  கடவுளை!  நம்  கண்ணிலேயே!?  நம்  கண்களாலேயே!?

            மின்  என்றுரைக்கும்  படி  மூன்று  விளக்கும்  மழுங்கும்  ....... பாடல்  10

           ஒளிவடிவாம்  சூரியன்  சந்திரன்  அக்கினி  என  மூன்றும்,  நம்  இருகண்ணும்,  இருகண்
உள்சேரும்  மூன்றாவது  கண்ணும்  ஆகும்!  நாம்  தவத்தால்  இம்மூன்று  ஒளியையும்  இணைப்போம்!
இம்மூன்று  ஒளிசேர்ந்தாலும்  அதைவிட  கோடி  கோடி  பங்கு  ஒளிமிகுந்ததே  அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதியாகிய  பரம்பொருள்  சுயம்  ஜோதியின்  முன்  சூரியசந்திர  அக்னி  ஒளி
மங்கிவிடும்!  அப்படிப்பட்ட  பேரொளியை  நாம்  காணமுடியும்!  அதற்குரிய  சக்தியை  தருவார்
இறைவன்!  அவன்  அருள்புரிந்தால்தான்  நாம்  அவனை  காணமுடியும்!

           " அவனருளாலே  அவன்தாள் "  வணங்கி  என  மாணிக்கவாசகர்  கூறுவதும்  இதைத்தான்!
மகாபாரத  யுத்தத்தின்போது  பரமாத்மா  அர்ச்சுனனுக்கு  விஸ்வரூப  தரிசனம்  கொடுத்தார்.
ஆனால்  அர்ச்சுனனால்  பார்க்க  இயலவில்லை?!  கண்ண  பரமாத்மா  பார்க்கும்  சக்தியை
ஞானக்கண்ணை  அர்ச்சுனனுக்கு  வழங்கிய  பின்னரே  அர்ச்சுனனால்  காணமுடிந்தது?!
அப்படியிருந்தும்  உள்ஒளி   வெள்ளத்தை  என்னால்  தாங்கமுடியவில்லை  என  கதறினான்.
கண்ணைபரமாத்மா  அர்ச்சுனனை  பழைய  நிலைக்கு  கொண்டுவந்தார்.  இதே  மகாபாரத
யுத்தத்தில்  கர்ணன்  அர்ச்சுனனின்  அம்பால்  வதைபட்டு  கிடக்கையில்  கிருஷ்ணபரமாத்மா
காட்சி  கொடுத்தார்!  பார்த்தான்  கர்ணன்!  அருள்புரிந்து  முக்தியை  வழங்கினார்.  கர்ணனுக்கு
கண்ணன்!  கண்ணன்  கூடவே  இருந்த  அர்ச்சுனனால்  காணமுடியாத  கண்ணனை  எதிரிக்
கூடாரத்தில்  இருந்து  கர்ணன்  கண்டான்!?

             நம்  கண்ணனை  -  கண்மணி  ஒளியை  காண  நம்  தவம்  செய்யவேண்டும்.  சற்குருவை
நாடி  தீட்சை  பெற்று  கண்ணை  நாடி  கடுந்தவம்  செய்தால்  காணலாம்!  கண்ணனை!  கடவுளை!
நம்  கண்மணி  ஒளியான  பரம்பொருளை!

No comments:

Post a Comment