Friday 26 June 2020

65 . நெஞ்சுறுத்த திருநேரிசை

                                         65 .  நெஞ்சுறுத்த  திருநேரிசை

               பொன்னார்  விடைக்கொடிஎம்  புண்ணியனைப்  புங்கவனை
               ஒன்னார்  புரம்எரித்த  உத்தமனை  -  மன்னாய
               அத்தனை  நம்  ஒற்றியூர்  அப்பனை  எல்  லாம்வல்ல
               சிந்தனைநீ  வாழ்த்துதி  நெஞ்சே

               எல்லாம்  வல்ல சித்தன்  நம்  கண்மணியாகிய  ஒற்றியூரில்  குடிகொண்டுள்ளவனே
எவ்வுயிர்க்கும்  தந்தை!  தலைவன்!  அவன்  தூய  வெள்ளைஒளியின்  மேல்  சிவந்த
ஒளியானவன்!  அந்த  செவ்வொளி  கண்டதும்  முப்புரமாகிய  மும்மலமும்  எரிந்துபோகும்!
அப்படிப்பட்ட  ஒப்புயர்வற்ற  அருட்பெருஞ்ஜோதி  இறைவனை  வாழ்த்து!  துதிசெய்!  வணங்கு!

               திருநாளைப்  போவான்  தொழுமன்றில்  புண்ணியனை  ஒற்றியில்
                     தாய்  ஆவான்  திருவடி   ...........................     பாடல்   4

               திருநாளைப்  போவார்  -  நந்தனார்  வணங்கி  போற்றிப்  பரவிய  அம்பலவாணன்
நடராசன்  தான்,  ஒற்றியில்  -  கண்ணில்  மணியாக  ஒளியாக  தாயாக  ஒளிர்பவன்!  அவன்
ஒளிவிடும்  இடமே  நம்  கண்களே  திருவடி  எனப்படும்.

               சொல்ஆர்ந்த  விண்மணியை  என்  உயிரை  மெய்ப்பொருளை
                      ஒற்றியில்  என்  கண்மணியை  நெஞ்சே  கருது .... பாடல்  5

               நாம்  செய்த  பாவங்கள்  எல்லாம்  எரிந்து  சாம்பலாகும்!  எங்கு?  எப்படி?  நாம்  நற்கதி
பெற  மோட்சம்  பெற  தவம்  செய்வோமானால்!  இறைவன்  திருவடியாகிய  நம்  கண்மணி 
ஒளியை  நினைந்து  உணர்ந்து  தவம்  செய்கையில்  உள்ஒளி  பெருகி,  கண்மணி  மத்திய
துவாரத்தை  அடைத்துக்கொண்டிருக்கும்  திரையாகிய  மெல்லிய  சவ்வு  -  நம்  பாவவினைகள்
உள்ஒளி  பெருகுவதால்  எரிந்து  சாம்பலாகும்!  இச்சாதனை  செய்பவரே  நற்கதியடைவர்.

               சித்தமனைத்  தீபகமாம்  சிற்பரனை  ஒற்றியூர்
                    உத்தமனை  நெஞ்சமே  ஓது  .....................................  பாடல்  21

               ஒற்றியூராகிய  கண்மணியில்  குடிகொண்ட  ஜோதியை  சிற்பரனை  -  சின்ன 
பரம்பொருளை  உத்தமனை  நெஞ்சத்தில்  இருத்தி  தவம்  செய்பவர்  சித்தத்திலே  தீபமாக
ஜொலிப்பான்  இறைவன்! 

               ஒற்றியில்  வாழ்  எந்தை  அடி  வணங்கு  வார்க்கு,  பதந்தருவான்,  செல்வங்கள்  யாவும்
தருவான்  இவ்வுலக  வாழ்வின்  இன்பங்கள்  யாவும்  கிட்டும்.  வாழ்வாங்கு  வாழலாம் .

No comments:

Post a Comment