Friday 26 June 2020

63 . எண்ணத் திரங்கல்

                                                          63 .  எண்ணத்  திரங்கல்

                   எளியேன்நின்  திருமுன்பே  என்உரைக்கேன்  பொல்லாத
                   களியேன்  கொடுங்காமக்  கன்மனத்தேன்  நன்மையிலா
                   வெளியேன்  வெறியேன்தன்  மெய்ப்பிணியை  ஒற்றியில்வாழ்
                   அளியோய்நீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே

                   திருவொற்றியூராகிய  என்  கண்மணியில்  ஒளியாக  என்  உயிராக  துலங்கும்
இறைவா,  கல்மனம்  படைத்தபாவி  எனது  உடல்  பிணிகளை  நீதானே  நீக்கி  அருளவேண்டும்.
உன்னிடம்  கூறாமல்  நான்  யாரிடம்  கூறுவேன்.  துர்க்குணங்களால்  நிரம்பிய  என் 
உள்ளப்பிணியையும்  நீதானே  போர்க்கவேண்டும்.  அருள்வாய்  இறைவா !

                   முன்னேசெய்  வெவ்வினை  தான்  மூண்டதுவோ  அலது  நான்
                         இன்னே  பிழைதான்  இயற்றியதுண்டோ  ........பாடல்  2

                   நமக்கு  இப்பிறவி  அமைந்தது  நாம்  முற்பிறப்பில்  செய்த  வினையின்  காரணமாகவே! 
பிறந்தபின்  ஏற்படும்  துன்பங்கள்  முன்  வினையாலும்,  இப்பிறப்பில்  செய்யும்  வினைகளாலுமே
தான் !

No comments:

Post a Comment