Friday 26 June 2020

62 . நெஞ்சு நிலைக்கு இரங்கல்

                                              62 .  நெஞ்சு  நிலைக்கு  இரங்கல்

                     ஆளாக  நின்பொன்  அடிக்கன்பு  செய்திட  ஐயநெடு
                     நாளாக  இச்சைஉண்  டென்னைசெய்  கேன்கோடு  நங்கையர்  தம்
                     மாளா  மயல்சண்ட  மாருதத்  தால்மன  வாசிஎன்சொல்
                     கேளா  தலைகின்ற  தால்ஒற்றி  மேவும்  கிளர்ஒளியே

                     இறைவா  உன்பொன்  அடிக்கு  அடிமைபட்டு  அன்பு  செய்திட  நெடுநாளாக 
ஆசை  உண்டு  ஆனால்  என்  மனமாகிய  குதிரை  என்  சொல்  கேளாமல்  காமம்  முதலான
கீழான  எண்ணங்கொண்டு  தறிகெட்டு  ஓடுகிறது.  என்செய்வேன்!  ஒற்றியிலுள்ள  ஓங்கிவளரும்
ஒளியே  இறைவா!  மனமானது  காற்றைவிட  வேகமாக  ஓடி  நம்மை  மாயையில்  சிக்க 
வைத்துவிடும்.  அதிலிருந்து  தப்ப  வேண்டுமாயின்  நம்  கண்மணியில்  ஒற்றியிருக்கும் 
கிளர்ந்து  எழுந்து  ஓங்கி  வளரும்  ஒளியை  -  இறைவனை  சரணடையவேண்டும் .

                     ஒளியாய்  ஒளிக்குள்  ஒளிர்ஒளியே  ஒற்றி  உத்தமநீ  ............  பாடல்  2

                     நம்  கண்மணியிலே  ஒற்றியிருக்கும்  உத்தமனான  இறைவன்  ஒளியானவன் !
கண்மணி  ஒளிக்குள்  விளங்கும்  -  ஒளிரும்  ஒளியானவன்!  அருட்பெருஞ்ஜோதி   ஆண்டவனே
ஒளிக்குள்  ஒளியானவன்!  அணுவுக்குள்  ஒளியானவன் .

                     ஒற்றிவாணா  என்  கண்ணினுண்மாமணியே  ....................... பாடல்  7

                     திருவொற்றியூர்  என்பது  திருவாகிய  இறைவன்  ஒளியானவன்  நம்  கண்ணினுள்
விளங்கும்  மணியிலே  அதன்  மத்தியிலே  உள்ள  சிறு  துவாரத்தின்  உள்  துலங்குகிறான் !
திருவாகிய  ஒளி  ஒற்றியிருப்பதால்  நம்  கண்மணியே  திருவொற்றியூர்  எனப்பட்டது .
ஒற்றிவாணன்  -  ஒளியே .

                     சதானந்த  நாயகமே  மறை  நான்கினுக்கும்  ஒன்றே  உயர்ஒளியே
                            ஒற்றியூர்  எம்  உயிர்த்துணையே   ........................  பாடல்  9

                     நம்  உயிராக  துணையாக  நம்  கண்மணி  ஒற்றியிலே  ஒளியாக  துலங்குகிறான்
இறைவன்!  அந்த  இறைவனை  பற்றினால்  -  நம்  திருவடியை  கண்களை  பற்றினால் 
எப்போதும்  ஆனந்தமே!  பேரின்பமே!  சதா  ஆனந்த  பரவச  அனுபவமே!  அந்த  இறைவன் ,
ரிக் ,  யஜுர் ,  சாம ,  அதர்வணம்  என்ற  நான்கு  வேதங்களும்  உரைக்கும்  ஒரே  இறைவனான
உயர்வான  மேலான  ஒளியே!  நல்லவேதமும்  சொல்லும்  வேதநாயகன்  நம்  கண்மணியில்
ஒளியாக  துலங்குகிறான்!  நம்  உயிராக  விளங்குகின்றான்! 

                     என்றன்  கண்  இரண்டின்  இணையாம்  பரஞ்சுடரே  அழியா  நலமே
                            இன்பமே   ........................................                            பாடல்   10

                     நமது  இருகண்களிலும்  இணையாக  துலங்கும்  அந்த  இறைவன்  பரத்திலே -
வெளியிலே  -  ஆகாயத்திலே  உள்ள  சுடரே  -  ஜோதியே!  நம்  உடல்  அழிந்தாலும்  நம்
உயிர்  அழியாது!  நம்  கண்மணியில்  உயிராக  பரஞ்ஜோதி  இருக்கும்  வரை  நமக்கு 
நலமே  விழையும்!  எல்லா  இன்பமும்  பெறலாம்!

                     பொருளே  நின்பொன்னடி   ...............................   பாடல்   11

                     பொருள்  என்றால்  மெய்ப்பொருள்!  நமது  கண்மணி  ஒளியே!  அதுதான்
இறைவன்  திருவடி!  அந்த  திருவடி  -  ஜோதி  தங்கமயமானது!  தங்கம்  போல் 
தகதகக்கும்  ஜோதி  -  தங்கஜோதி .

No comments:

Post a Comment