Friday 26 June 2020

64 . பிரசாதப் பதிகம்

                                              64 .  பிரசாதப்  பதிகம்

                   சரதத்  தால்  அன்பர்  சார்ந்திடும்  நின்திரு
                   விரதத்  தான்  அன்றி  வேறொன்றில்  தீருமோ
                   பரதத்  தாண்டவ  னேபரி  திப்புரி
                   வரதத்  தாண்டவ  னேஇவ்வ  ருத்தமே

                   இறைவன்  திருநடனத்திலிருந்து  உருவானது  தான்  பரதநாட்டியம்.  ஓயாது
நடமிடம்  நிருத்தனே,  உன்  திருவடியை  சரணடைந்து  தவம்  செய்யும்  மெய்யடியார்களுக்கு
எந்த  துன்பமும்  நெருங்காது!  தவம்  செய்வதே  விரதங்களில்  முதன்மையானது.  அவர்களே
உன்  திருவருளை  பரிபூரணமாக  பெறுவர்.

                   நீதி  மாதவர்  நெஞ்சிடை  நின்றொளிர்
                   சோதி  யேமுத்தொ  ழிலுடை  மூவர்க்கும்
                   ஆதி  யேநின்அ  ருள்ஒன்றும்  இல்லையேல்
                   வாதி   யாநிற்கும்  வன்பிணி  யாவுமே  .............     பாடல்  8

                   இறைவன்,  நீதி  வழுவா  நெறிமுறையில்  வாழும்  நற்றவத்தவர்  நெஞ்சத்தில்  -
கண்களில்  நின்று  ஒளிர்கிறான்!  அந்த  ஜோதியே  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரே  சிவன்
பிரம்மா  விஷ்ணு  ஆகிய  முத்தொழில்  புரியும்  மூர்த்திகளுக்கும்  ஆதியாவர்!  அப்படிப்பட்ட
ஆதிபரம்பொருளே  நம்  உயிராக  நம்  கண்களில்  ஒளியாக  துலங்குகிறார்!  அவர்  இல்லையெனில் 
நமது  எந்த  பிணியும்  போகாது!  வைத்தியநாதபெருமானான  அவர்  அருளே  எந்நோய்க்கும்
நல்ல  மருந்தாகும் .

                   பெத்தம்  அற்றிடப்  பெற்றவர்  .............................  பாடல்  9

                   எல்லாம்வல்ல  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரின்  நல்லருளே  சகல  நோய்களுக்கும்
நல்ல  மருந்தாகும்!  ஜோதியை  தரும்  அருள்ஜோதியே  இறைவனே  வைத்தியநாதர்  ஆகும்! 
பிறவிபிணியையே  நீக்க  வல்லது.  ஜோதிமருந்தே!  அப்படிப்  பட்ட  அற்புத  மருந்தான  ஜோதி
மருந்தை  பெற்றவரே  நோய்  நொடியின்றி  மரணமிலா  பெருவாழ்வு  பெறுவர் .

No comments:

Post a Comment