Friday 26 June 2020

66 . தனிமைக் கிரங்கல்

                                        66 .  தனிமைக்  கிரங்கல்

                 ஆக்கம்  ஆதிய ஐந்தொழில்  நடத்த
                        அயன்முன்  ஆகிய  ஐவரை  அளித்து
                 நீக்கம்  இன்றிஎவ்  விடத்தினும்  நிறைந்த
                        நித்த  நீஎனும்  நிச்சயம்  அதனைத்
                 தாக்க  எண்ணியே  தாமதப்  பாவி
                        தலைப்பட்  டான்அவன்  தனைஅகற்  றுதற்கே
                 ஊக்கம்  உற்றநின்  திருவருள்  வேண்டும்
                        ஒற்றி  ஓங்கிய  உத்தமப்  பொருளே

                 விரிந்து  பரந்த  எல்லையற்ற  இப்பிரபஞ்சத்தை  நடத்த  படைத்தல்,  காத்தல்,
அழித்தல்,  மறைத்தல்,  அருளல்,  எனும்  ஐந்தொழிலைபுரிய  நான்முகன்,  திருமால்,
உருத்திரன்,  மகேசன்,  சதாசிவன் என  ஐவரையும்  படைத்த  பரம்பொருளே  எங்கும்
எதிலும்  நீக்கமற  நிறைந்திருக்கிறான்.  நம்  கண்மணியிலும்  ஒற்றியிருக்கிறான்! 
இவையெல்லாம்  அறிந்தும்  ராட்சதம்,  தாமதம்,  சத்துவம்  என்னும்  முக்குணங்களில்
ஒன்றான  தாமதபாவி  என்னை  உய்வடைய  முடியாமல்  தடுக்கிறானே!  இறைவா  என் 
கண்மணியானவனே  உன்  திருவருளால்  இதினின்று  மீண்டு  உன்  பதம்  அடைய
அருள்புரிவாயாக!

                 மெய்ப்போதம்  உணர்த்துவார்  .......................      பாடல்  2

                 இத்தாமதகுணம்  நமக்கு  மண்ணாசை,  பொன்னாசை,  பெண்ணாசையை
ஊட்டி  கெடுக்கப்பார்க்கும்.  அதிலிருந்து  தப்ப  வேண்டுமாயின்  மெய்ப்போதம்  -
நம்மெய்க்கு  உடம்புக்கு,  போதம்  -  உணர்வு  தருவாரை  சரணடைந்து  உணர்வு 
பெறவேண்டும்!  அதாவது  சற்குருவை  அடைந்து  உபதேசம்  தீட்சை  பெறவேண்டும்.
தீட்சையின்  மூலம்  மெய்யுணர்வு  கிட்டும்.  எப்போதும்  போதத்துடன்  இருக்கலாம்.
போதமில்லையெனில்  மயக்கம்  -  தூக்கம்  -  மரணந்தான்!

                 கோடி  நாவினும்  கூறிட  அடங்கா  கொடிய  மாயையின்  நெடி
                         வாழ்க்கை  ................................                       பாடல்   5

                கோடி  நாவை கொண்டு  கூறினாலும்  இந்த  மாயையால்  ஆன  உலக  துன்ப
வாழ்க்கையை  கூறமுடியாது!  அளவிட  முடியாது!  சொல்லில்  வடிக்க  இயலாது
துயரமான  நீண்ட  நெடிய  பயணமாகும்  நமது  வாழ்க்கை!  இதிலிருந்து  மீள  ஒரேவழி,
நம்  மெய்ப்பொருளை  பற்றி  தவம்  செய்து  மீள்வது  ஒன்றுதான்!

               கண்ணிலான்  சுடர்  காணிய  விழைந்த  கருத்தை .............. பாடல்  8

               கண்ணில்லாதவன்  ஒளியை  காண  முடியுமா?  கண்களில்  ஒளியாக  துலங்குகிறான்
இறைவன்!  கண்களில்  ஒளியில்லாதவன்  குருடன்!  கண்களின்  துலங்கும்  ஒளி  உள்ளே
அக்னி  காலையிலிருந்து  இரண்டாக  பிரிந்து  இரு  நாடி  வழி  இரு  கண்களில்  துலங்குகிறது!
அதனால்  பார்க்கும்  ஆற்றல்  பெறுகிறான்.  அக்னி  கலை  ஒளி  இரு  நாடி  வழி  இரு  கண்ணில் 
வராதவன்  பார்வை  இல்லாதவன்.  பார்க்கின்ற  ஆற்றல்  பெற்றவன்  உணர்வால்  ஒளியை 
பெருக்கி  அதி  விரைவில்  வினையறுத்து  ஞானம்  பெறமுடியும்!  பார்வை  இல்லாதவனும்
ஞானம்  பெறலாம்!  இறைவன்  அருள்வார்!  உள்ளே  அக்னி  கலையில்  கருத்தை  செலுத்தி
தவம்  செய்யவேண்டும்.  சற்று  கடினமான  செயல்தான்!  இருப்பினும்  முயன்றால்  முடியாதது
ஒன்றுண்டா?  அருள்மயமான  இறைவன்  அருள்புரியாது  போய்விடுவாரா?!  சதாசர்வ
காலமும்  இறைவனை  நினைந்து  உணர்ந்து  நெகிழ்ந்தால்  கண்ணில்லாதவனுக்கும்
காட்சிகொடுப்பார்  கருணைகடலான  கடவுள்!

               எத்தனையோ  இறைவன்  அடியார்கள்  கண்ணில்லாதவர்கள்  முகத்தியடைந்த 
கதைகளை  படித்திருக்கிறோமல்லவா?  குருடனும்  முடவனுமான  இரட்டைபுலவர்கள்
இங்கே  வாழ்ந்தவர்  தானே!  இருவரும்  சேர்ந்து  சுற்றித்திரிந்தனர்.  சேர்ந்தே  கவிபல
பாடியுள்ளனர். ஞானம்  எல்லோர்க்கும்  அருள்பவனே  இறைவன்!  அகத்திலே  கடவுளை
காணலாமல்லவா?  அருளே  வடிவான  இறைவனை  கருத்திலே  இருத்தினால் 
கண்ணில்லாதவனும்  காணலாம்!

No comments:

Post a Comment