Sunday 28 June 2020

71 . முக்தியுபாயும்

                                              71 .  முக்தியுபாயும் 

             ஒற்றி  ஊரனைப் 
                      பற்றி  நெஞ்சமே 
             நிற்றி  நீ  அருள் 
                      பெற்றி  சேரவே 
    
             ஒற்றியூரன் -  நம்கண்மணி  ஒளியாகிய  இறைவன்.  அவனைப்பற்றி -  மனதால்  
ஊன்றி  நின்றால்  உனக்கு  இறையருள்  கிடைக்கும் .

             சேர  நெஞ்சமே  தூரம்  அன்று  காண்  -    பாடல்   2

             இறைவனை  சேர  வெகுதூரம்  போக  வேண்டியதில்லை ?  ' காண ' -  நாம்  காணுகின்ற  
இடத்தில்  -  கண்ணில்  உள்ளான்.  நம்முடனேயே  இருக்கிறான்.

             முக்தி  வேண்டுமேல்  பத்தி  வேண்டுமால்  ........ பாடல்   3

             நாம்  முக்தியடைய  விரும்பினால்  கண்டிப்பாக  பக்தி  வேண்டும்.  மாறாத  பக்தியுடன் 
இறைவனை  சதாகாலமும்  எண்ணி  எண்ணி  உருக  வேண்டும்.  பக்தியில்லையேல்  முக்தி 
இல்லை!

             பிஞ்சகன்  பதம்  தஞ்சம்  என்பதே ...........  பாடல்   4

             நம்  கண்மணி  பிஞ்சு  -  என்றும்  இளசாகவே  உள்ளது.  நாம்  பிறந்தது  முதல்  நம் 
உடலில்  எல்லாம்  வளரும்  ஆனால்  கண்மணி  மட்டும்  வளராது?!  இந்த  உலகத்திலுள்ள 
எல்லோருக்கும்  பிறக்கும்போது  இருந்து  தன்மையிலேயே  எத்தனை  ஆண்டு  ஆனாலும் 
அப்படியே  இருக்கும்!  அங்கு  ஒளியாக  துலங்குகிறான்  இறைவன்!  அவனை  ஞானிகள்  
" பிஞ்சகன் "  என்றனர்.  அவன்  திருவடியே  தஞ்சம்  என்று  இருப்பவரே  முக்தி  பெறுவர்.

No comments:

Post a Comment