Friday 26 June 2020

69 . கழிபகற் கிரங்கல்

                                                 69 .  கழிபகற்  கிரங்கல்

               ஆண்ட  துண்டுநீ  என்றனை  டியேன்
                         ஆக்கை  ஒன்றுமே  அசைமடற்  பனைபோல்
              நீண்ட  துண்டுமற்  றுன்னடிக்  கன்பே
                         நீண்ட  தில்லைவல்  நெறிசெலும்  ஒழுக்கம்
             பூண்ட  துண்டுநின்  புனிதநல்  ஒழுக்கே
                        பூண்ட  தில்லைஎன்  புன்மையை  நோக்கி
             ஈண்ட  வந்தரு  ளாய்எனில்  அந்தோ
                        என்செய்  கேன்நர  கிடைஇடும்  போதே

             இறைவா  முன்னரே  நீ  என்னை  ஆட்க்கொண்டுவிட்டாயே!  அப்படியிருந்தும் 
பனைமரம்  போல்  என்  உடல்தான்  வளர்ந்ததேயன்றி  உன்னடி  சேரவில்லையே!
உன்னை  உணராமல்  தீய  ஒழுக்கத்தில்  திழைத்து  விட்டேனே!  இறைவா  அருளே 
வடிவானவனல்லவாநீ  மீண்டும்  இங்கு  வந்து  அருள்  தருக!  உன்  அருள்  இல்லையெனில்
நான்  எப்படி  மீள்வேன்.  நரகத்தில்  போய்விடுவேனே.  காப்பாற்று  உன்இன்னருள்  தா!

             புலப்பகைவர்களால்  .............................  பாடல்   9

             நமது  ஐம்புலன்களும்தான்  நமக்கு  பகைவர்கள்  ஆகிவிடுகின்றனர்! மனம்
இட்ட  கட்டளையைத்தான்  புலன்கள்  செய்கின்றன!  விதிவழியே  மனம்  செயல்  படுகிறது. 
நாம்  என்ன  செய்வது?  ஒரே  வழி  இறைவனின்  காலைப்பிடித்துக்கொண்டு  கதறி
அழவேண்டும்!  இறைவனின்  திருவடி  நம்  கண்தானே!  பற்றுக  திருவடியை  நம் 
பற்றாகிய  வினையறும்!  கதிபெறலாம்!

             நாம்  இறைவனின்  காலை  பிடித்தால்  அவன்  நம்கையை  பிடித்துக்  கொள்வான்! 
சிக்கென  பிடிக்க  வேண்டும்!  பற்றிப்  பிடிக்க  வேண்டும்.  இறைவனின்  கால்  -  திருவடியாகிய
கண்தான்  நம்  கையாகும்!  கையுற  வீசி  நடக்க  நாணிகைகளை  கட்டியே  நடந்தேன்  என
வள்ளலார்  கூறுவதும்  இதுதான்  பார்வையை  சிதறவிடாமல்  பரந்து  போகாமல்  கண்ணிலேயே
நிலை  நிறுத்துவதே  தவம்!  

No comments:

Post a Comment