Saturday 24 December 2016

40 ஏத்தாப் பிறவி யிழிவு



கல்லை யொத்தவன் நெஞ்சினை யுருக்கேன்
கடவுனின்னடி கண்டிட விழையேன்
அல்லை யொத்தகோ தையர்க்குளங் குழைவேன்
அன்பி லாரொடு மமர்ந்தவ முலழ்வேன்
தில்லை யப்பனென் றுலகெடுத் தேத்தும்
சிவபி ரான்றரும் செல்வ நின் றணிகை
எல்லை யுற்றுனை யேத்திநின் றாடேன்
என் செய் வான்பிறந் தேன் எளியனே


நெஞ்சக் கனகல்லும் நெகிழ்த்துருக என அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.
வள்ளல்ப்பெருமானும் கல்லான நம் நெஞ்சம் உருக வேண்டும் என்கிறார்!
இறைவன் திருவடி காண முயற்சி செய்ய வேண்டும்! அன்பிலாதவர்கள்
இருள்நெறி சேர்க்கும் மாய வலையில் தள்ளுபவரோடு சேரகக்கூடாது.
தில்லையப்பன் சிவன் மகன் தணிகை சென்று அறிந்து உணர்ந்தால்
- கண்மணி ஒளியை சரணடைந்தால் கிட்டும் வீடுபேறு!



 

No comments:

Post a Comment