Wednesday 7 December 2016

அன்பிற் பேதுறல்



மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
முறியனேன் தனக்குநின் அடியாம்
ஏடவிழ் கமலத் திருநற வருந்த
என்று கொல் அருள்புரிந் திடுவாய்
ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
ஐயருக் கொருந்தவப் பேறே
கோடணி தருக்கள் குலவும்நற் றணிகை
குன்றமர்ந் திடுகுணக் குன்றே

இறைவா உன் தாமரை திருவடியில் தோன்றும் அமுதம்
அருந்த அருள் புரிவாயே! அறிவில்லா எனக்கு, பாம்பு மாலை
சூடிய சிவமைந்தன் சிவ சண்முகன் அமர்ந்த தணிகை - கண்மணியை
சார்ந்து இருக்க அருள்புரிவாயே!

கமலம் -தாமரை - தாள் + மறை இறைவன் தாள் ஆகிய திருவடி 
மறைந்து இருக்கிறது அதனால் தான் தாமரை என்றனர்.

No comments:

Post a Comment