Saturday 18 February 2017

2.11 கொடை மடப் புகழ்ச்சி


திரப்ப டும்திரு மால் அயன் வாழ்த்தத்
தியாகர் என்னும் ஓர் திருப்பெயர் அடைந்தீர்
வரப்ப டுந்திறத் தீர் உமை அடைந்தால்
 றந்தொரு வார்த்தையும் சொல்வீர்
இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
யாதுக் கையநீர்  இப்பெயர் எடுத்தீர்
உரப்ப டும்தவத் தோர் துதித்  தோங்க
ஓங்கு சீர்ஒற்றி யூர் உடையீரே


நம்கண் மணியினுள் விளங்கும் ஜோதியே சிவமே தியாகர்
என மாலும் பிரம்மனும் வாழ்த்தினர். திருவாகிய ஒளி ஒற்றியிருக்கும்
ஊர் கண்மணி! அதனால் இவ்வூர் திருவொற்றியூர் எனப்பட்டது, திருவொற்றியூரில்  குடிகொண்டிருக்கும் இறைவன் ஜோதியே தியாகராசர் என்றழைக்கப்பட்டார்.

தீவிர சாதனை செய்து உன்னையே நாடிடும் அன்பருக்கு அருள்செய்யே!
உன் வாய் திறவாயே! அருளை வேண்டி புலம்பும் உன் அடியவர்களுக்கு
அருள் தியாகராசா! என வள்ளலார் வேண்டுகிறார்.
 

வெள்ளிமாமலை வீடென உடையீர் விளங்கும்
பொன்மலை வில் எனக் கொண்டீர்
எள்ளில் எண்ணெய் போல்    - பாடல் 2


நமது கண்மணி வெள்ளைவிழிக்கு நடுவே உள்ளதல்லவா
அதைத்தான் வெள்ளிப் பனிமலை என்றார். பனிபோல் பளிங்குபோல்
கண் உள்ளது. நாம் தவம் செய்து வில் போன்று கண்ணிலிருந்து உள்ளே
பாயும் அம்புபோல் ஒளி ஊடுருவிச் சென்று முச்சுடரும் ஒன்றாகி காணும்
ஜோதி தங்கம் போல் தகதகக்கும்! பொன்போல் மின்னும் பேரொளியை
காணலாம்.  இறைவன் எள்ளில் எண்ணெய் போல் நம்முள் கலந்துள்ளான்.
பாலில் நெய் போல் இருக்கிறான். எள்ளை செக்கிலிட்டு ஆட்டவேண்டும்.
அப்போது தான் எண்ணெய் கிடைக்கும். பாலைகாய்ச்சி உறை விட்டு
தயிராக்கி கடைந்து வெண்ணை எடுத்து அதை உருக்கினால் தான் நெய்!

கோயிலாக என் நெஞ்சகத் தமர்ந்த குணத்தீர்  - பாடல் 10
என் நெஞ்சமே கோயிலாக கொண்ட இறைவா! ஐந்து பூதங்களும்
சேர்ந்த இடமே நெஞ்சம். மனம் இருக்கும் இடமே எண்ணம் உதயமாகும்
இடமே நெஞ்சம். அது நம்கண்கள்.

No comments:

Post a Comment