Wednesday 15 February 2017

2.9 அருளியல் வினாதல்



தேன்என இனிக்கும் திருவருட்கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வான் என நிற்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
ஊன் என என்ற உணர்விலேன் எனினும்
உன் திருக் கோயில்வந் தடைந்தால்
ஏன் எனக் கேளா திருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ


திரு-முல்லை -வாயில் - திருவாகிய ஒளி முல்லை - மலர் - வாயில்
ஒளியானது கண்மலர் வாயில் - கண்மணி மத்தியிலுள்ள துவாரத்தின்
உள் ஒளியே திருமுல்லை வாயில், திருவாகிய இறைவன் இருக்கும்
வாசல் மலர். கண்மலரின் வாசல் - மத்தியிலுள்ள ஓட்டை!

அந்த திருமுல்லை வாயிலில் வாழ்வது மாசிலா மணி - குற்றமில்லாத
மணி - ஒளி. அந்த மணி ஊன் - நம் உடலில் உணர்வாக ஒளியாக
இருப்பதை அறியவேண்டும். அறிந்தால் உணர்ந்தால் அந்த கடல்
தேன் என இனிக்கும் திருவருட்கடலாகும். தூய மத அமுதமாகும்.
சிவமாகும் வான் என நிற்கும் உயர்ந்து பரந்து நிற்கும் ஜோதியாகும்.

No comments:

Post a Comment