Tuesday 28 February 2017

பொறுக்காப் பத்து

பொறுக்காப் பத்து

மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம்
விரைமலத் துணைதமை விரும்பாப்
பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல்
பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
அளித்திடும் தெள்ளிய வமுதே
தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே
தணிகை வாழ் சரவண பவனே


சத்தியமாக, நெறியோடு வாழும் அன்பர் உள்ளத்தில், உள்-அகத்தில்
கண்மணி உள்ளே -நம் மெய் - உடல் உள்ளே விளங்கும் இறைவா
உன் திருவடியாகிய இரு கண்மணி ஒளியே! மலர் துணை - இருமலரடி.
ஐயரும் இடப்பால் அம்மையும். நம் வலது கண் சிவம் இடதுகண் சக்தி.

சிவமும் சக்தியும் சேர்ந்தால் பிறப்பான் ஆறுமுகன். வருத்தி அளித்திடும்
தெள்ளியயமுதே - நாம் தவம் செய்து நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து
என்ற நிலையே இங்கு வருந்தி என்கிறார் வள்ளலார். அப்படி தவம் செய்கையில்
அமுதமான ஆறுமுக ஒளி கிட்டும். அது பெண்மோகம் கொண்டவர்க்கு கிட்டாது.
அப்பொருளே தணிகை வாழ சரவணபவன் மெய்ப்பொருள்.

தன்மயக்கற்றோர்க் கருள் தரும் பொருளே - பாடல் 2

தன்மயக்கம் - நான் என்ற மயக்கம் மும்மலம் உடையவர்களுக்கு கிட்டாது
அது இல்லாதவர்க்கு அருள்தரும் மெய்ப்பொருள்.

சக்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே - பாடல் 7



No comments:

Post a Comment