Monday 18 January 2021

76 . தனித்திரு மாலை

                                        76 .  தனித்திரு  மாலை 

             வன்மூட்டை  பூச்சியும்  புன்சீலைப் 
                      பேனும்தம்  வாய்க்  கொள்ளியால் 
             என்  மூட்டைத்  தேகம்  சுறுக்கிட 
                      வேசுட்  டிராமுழுதும் 
             தொன்மூட்  டையினும்  துணியினும் 
                      பாயினும்  சூழ்கின்றதோர் 
             பொன்மூட்டை  வேண்டிஎன்  செய்கேன்
                      அருள்முக்கட்  புண்ணியனே 

             இறைவா  முக்கண்ணனே  பரம்  பொருளே,  மூட்டைபூச்சி  சீலைபேன்  இவைகள்  நம் 
மூட்டைதேகத்தை  பருத்த  உடலை  கடித்து  இரத்தத்தை  உறிஞ்சுகின்றதே!  பாயிலும்  துணியிலும் 
இருந்து  நம்மை  துன்புறுத்துகின்றது  எதற்காக  தெரியுமா?  நம்  உடலுள்  இருக்கும்  உயிராகிய 
பொன்மூட்டையை  பெறும்  பொருட்டே!  இறைவா  என்செய்வேன்!

             சக்திமான்  என்பர்நின்  தன்னை  ஐயனே 
             பத்திமான்  தனக்கலால்  பகர்வ  தெங்ஙனே .....................  பாடல்  3

             இறைவா  சிவமே  நீயே  சர்வசக்தியையுடையவன்!  அதுமட்டுமல்ல  சக்தியை  இடப்பாகம் 
கொண்டவன்!  உன்  மகிமையை  பத்திமான்களுக்கு  சொன்னால்  புரிந்துகொள்வர்.  நாத்திகம் 
பேசுவர்  அறியார்.


  

No comments:

Post a Comment