Monday 18 January 2021

77 . திருவுலாப் பேரு

                                        77 .  திருவுலாப்  பேரு 

               சீரார்  வளஞ்சேர்  ஒற்றிநகர்த் 
                       தியாகப்  பெருமான்  பவனிதனை 
               ஊரா  ருடன்சென்  றெனது  நெஞ்சம் 
                       உவகை  ஒங்கப்  பார்த்தனன்காண் 
               வாரார்  முலைக்கண்  மலைகளென 
                      வளர்ந்த  வளைகள்  தளர்ந்தனவால் 
               ஏரார்  குழலாய் என்னடிதான் 
                      இச்சை  மயமாய்  நின்றதுவே 

               அழகிய  நீண்ட  கூந்தலை  உடைய  தோழியே,  எல்லா  சிறந்த  வளங்களும்,  நிறைந்த 
திருவொற்றியூர்  உறையும்  தியாகப்பெருமான்  திருவீதியுலா  வந்தார்.  ஊராருடன்  நானும்  சென்ற  
எனது  நெஞ்சம்  மகிழ  கண்டு  களித்தேன்!  சிவத்தை  கண்ட  என்  கண்கள்  விம்மி  பூரித்து  ஆனந்தம் 
அடைந்தேன்!  அதனால்  கண்வளைகள்  தளர்ந்தன  சோர்ந்தன!  சிவத்தின்  மீதுகொண்ட  அன்பால் 
இந்நெகிழ்ச்சி  ஏற்பட்டது.

              தியாகப்  பெருமான்  பவனிவரப்  பார்த்தேன் 
                        கண்கள்  இமைத்திலகாண்  ......................... பாடல்  2

             நாம்  தவம்  செய்யும்  போது  சிவம்  -  ஒளி  வெளிப்பட்டுவிடும்.  அதை  பார்க்கலாம்!
கண்கொட்டாமல்  இமையாமல்  பார்த்துக்கொண்டே  இருக்கவேண்டும்.  இதுதான்  சாதனை!
அங்ஙனம்  சிவத்தை  பார்த்து  லயித்து  இருக்கும்போது  நாம்  புற  உலகத்தை  மறந்து  
போவோம்.  அதை  நயமாக  சொல்வதே  இப்பாடல்கள்  அனைத்தும்!

No comments:

Post a Comment