Monday 18 January 2021

78 . நாரையும் கிளியும் நாட்டுறு தூது

                                        78 .  நாரையும்  கிளியும்  நாட்டுறு  தூது 

              கண்ணன்  நெடுநாள்  மண்ணிடந்தும் 
                        காணக்  கிடையாக்  கழலுடையார் 
              நண்ணும்  ஒற்றி  நகரார்க்கு 
                        நாராய்  சென்று  நவிற்றாயோ 
              அண்ணல்  உமது  பவனிகண்ட 
                        அன்று  முதலாய்  இன்றளவும் 
              உண்ணும்  உணவோ  டுறக்கமுநீத் 
                        துற்றாள்  என்றிவ்  வொருமொழியே 

              குரு  உபதேசம்  பெற்று  தவம்  செய்யும்  போது  கண்மணி  ஒளியை  எண்ணி  தவம் 
செய்கையில்  சிவமாகிய  ஒளி  வெளியே  நம்முன்னே  தோன்றி  மெல்லமெல்ல  நகர்ந்து  வலம் 
வருவதை  காணலாம்.  அதைக்  கண்டு  ஆனந்திக்கும்  தவசீலர்கள்  -  ஆத்மாக்கள்  அனைவரும் 
பெண்களே!  பெண்ணாகிய  ஆத்மாவாகிய  நாம்  இறைவனாகிய  -  பரமாத்மனாகிய  ஆணை  
சேர்தலே  பேரின்பம்!  அதற்குத்தான்  தவம்!  அந்த  அழகனை  கண்டாலே  ஆனந்த  மடையும் 
பெண்ணாகிய  ஆத்மா  பின்  உண்பதோ  உறங்குவதோ  செய்யாது!  சதாகாலமும்  சிவசிந்தனையிலேயே 
திளைக்கும்  ஆனந்த  அனுபவம்  பெற்றால்  ஊண்  உறக்கம்  வேண்டாமே!  அது  யாருக்கும் 
கிடைக்கும்?  தேவர்களாலும்  அறிய  முடியாத  திருவடி!  கண்ணன்  காண  முடியாத  திருவடி!
நாம்  நம்  கண்ணை  நாடினால்  நமக்குகிட்டும்!  கண்ணில்  மணியில்  ஒளியான  இறைவனிடம் 
நாரையே  நீ  தூது  போய்  என்  நிலை  கூறுவாய்  என்று  புனையப்பட்டது  இப்பாடல்.

No comments:

Post a Comment