Saturday 3 June 2017

44 ஆடலமுதப்பத்து


சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
வந்து நின்னடி காட்செய என்றால்
வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
இல்லை என்னில்நான் இல்லைஉயிந் திடலே
அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே

இறைவா தீய குணங்கள் எல்லாம் கொண்டவன் ஆதலால்
மனம் நொந்து வேதனைப்பட்டு வாடுகிறேன்! தளர்வடைகின்றேன்!
என் செய்வேன் என்மனம் என்வசம் இல்லையே! வினைவழி
இழுத்துக் கொண்டல்லவா போகிறது! இறைவா உன் திருவடி
தொண்டுசெய்ய திருவடியை எண்ணி தவம் செய்ய முடியவில்லையே !
உன்னருள் தந்தால் தான் நான் உய்வேன் இல்லையெனில் என்
வாழ்வில் உயர்வில்லை இன்பமில்லை எந்நாளும் துன்பமே! "அவனருளால்
அவன் தாள் வணங்கி"என்ற திருவாசகவரிகள் உணர்த்துவதும் இதுவே!

ஒற்றியூர் ஆன கண்மணி ஒளி, அந்திமாலை சூரியன் போன்று தகதகக்கும்
தங்கஜோதியாகும்! எல்லோரும் அறிய எல்லோர் கண்ணிலும் அம்பலமாகவே
ஆடிக் கொண்டிருக்கும் ஜோதியே அது!

என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா தேகுகின்றது
இவ் ஏழையேன் மனந்தான் உன்ன தின்னருள் ஒரு
சிறிதுண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை -பாடல் 4

நம் மனதை எவ்வித செயல்களாலும் நிறுத்தவே முடியாது!
ஏனெனில் சதா இயங்கிக் கொண்டிருப்பது தான் அதன் வேலை!
மனம் இயங்கும்வரை வினை நடந்துக் கொண்டேயிருக்கும்!
வினையிருக்கும் வரைக்கும் பிறப்பு இறப்பு உண்டு! இதற்கு
என்னதான் முடிவு? மனதை அதன்வழியில் போய் அடக்குவது
அழிப்பதுதான் புத்திசாலிதனம்! அதற்க்கு குருவருள் திருவருள்
அவசியம் வேண்டும்! குருமூலம் கண்மணியில் மனதை நிறுத்தி
தீட்சை பெற்று தவம் செய்துவந்தால் மனம் கண்மணியில்
தங்குவதின் மூலம் கண் ஒளி பெருகும்! ஒளியால் கண்ணை மறைத்த
மறைப்பு வினைத்திரை கிழியும்! வினை மறைப்பு அற்றால் மனம்
இல்லையே! வினையின் வேலைக்காரன் தான் மனம்!புலன் வழி
- வினைவழி போகும் மனதை, கண்மணியில் - விழியில் நிறுத்தினால்
கருவிழி போவதை தடுக்கலாம்! காலனும் இல்லையே!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

No comments:

Post a Comment